உயிரின் ஆழம் இறங்கியே
உனது மூச்சும் பரவுதே!
பனி வீசும் குளிரென
படபடக்க வைக்குதே!
சிறகு விரித்த பறவைகள்
சிந்தை யாவும் பறப்பதை
உணர்ந்து கொண்ட நொடியிலே
உந்தன் நினைவு வந்ததே!
மகிழம் பூவு வாசமாய்
மடியில் சேரும் குழந்தையாய்
சேலைத்தலைப்பு இருக்கவே
வேலை மறந்து திரிகிறேன்!
கொலுசின் சினுங்கள் ஒலியிலே
இசையின் மழலை பிறப்பதை
இதயம் உணர்ந்து கொண்டதோ
ஒரு துளி நதியென
மகிழின் கண்ணீர் வழியுதே!
உனது மூச்சும் பரவுதே!
பனி வீசும் குளிரென
படபடக்க வைக்குதே!
சிறகு விரித்த பறவைகள்
சிந்தை யாவும் பறப்பதை
உணர்ந்து கொண்ட நொடியிலே
உந்தன் நினைவு வந்ததே!
மகிழம் பூவு வாசமாய்
மடியில் சேரும் குழந்தையாய்
சேலைத்தலைப்பு இருக்கவே
வேலை மறந்து திரிகிறேன்!
கொலுசின் சினுங்கள் ஒலியிலே
இசையின் மழலை பிறப்பதை
இதயம் உணர்ந்து கொண்டதோ
ஒரு துளி நதியென
மகிழின் கண்ணீர் வழியுதே!
No comments:
Post a Comment