காதலே... காதலே...
நரைவந்து நாமும்...
கிழம் எய்தபோதும்
கைத்தடி வைத்து நாமும்...
நடைசெல்லும் போதும்...
கண்கள் மங்கி...
பார்வை இருண்ட போதும்
உன் பக்கமே நானிருப்பேன்!
பெற்ற பிள்ளைகள்...
நம்மை பேனாதுபோயின்
பேரக்குழந்தைகள்...
நம்மின் அண்டாதுபோயின்
அன்பாலே உன்னிருப்பேன் நான்...!
செவியாவும் தூங்கி செவிடானபோதும்
பழமைகள் பேசியே...
நம் பொழுதுகள் கழியும்!
உன் மௌனம் அறிந்தே...
என்மனம்...
ஏதென்று கேட்கும்...!
உன் மேனி நடுங்க
என் உயிர் காயும்...!
பெருங்கூட்டத்தில் நின்றும்
கண்கள் உன்னையே தேடும்...
பெரும்பந்தி என்றாலும்
என் குழந்தை நீ என்றே...
கரம் அன்னத்தை நீட்டும்!
வரும் வெட்கத்தில்...
பொக்கை...
சிரித்தேதான் மகிழும்!
#முதுமையிலும்...
#இளமை_தீரா_காதலுடன்
#உன்னோடு_நானிருப்பேன்
#இளையபாரதி
நரைவந்து நாமும்...
கிழம் எய்தபோதும்
கைத்தடி வைத்து நாமும்...
நடைசெல்லும் போதும்...
கண்கள் மங்கி...
பார்வை இருண்ட போதும்
உன் பக்கமே நானிருப்பேன்!
பெற்ற பிள்ளைகள்...
நம்மை பேனாதுபோயின்
பேரக்குழந்தைகள்...
நம்மின் அண்டாதுபோயின்
அன்பாலே உன்னிருப்பேன் நான்...!
செவியாவும் தூங்கி செவிடானபோதும்
பழமைகள் பேசியே...
நம் பொழுதுகள் கழியும்!
உன் மௌனம் அறிந்தே...
என்மனம்...
ஏதென்று கேட்கும்...!
உன் மேனி நடுங்க
என் உயிர் காயும்...!
பெருங்கூட்டத்தில் நின்றும்
கண்கள் உன்னையே தேடும்...
பெரும்பந்தி என்றாலும்
என் குழந்தை நீ என்றே...
கரம் அன்னத்தை நீட்டும்!
வரும் வெட்கத்தில்...
பொக்கை...
சிரித்தேதான் மகிழும்!
#முதுமையிலும்...
#இளமை_தீரா_காதலுடன்
#உன்னோடு_நானிருப்பேன்
#இளையபாரதி
No comments:
Post a Comment