Translate

Saturday, 21 September 2019

தூங்காத கண்கள் - நெஞ்சம் கவிதை

தூங்காத கண்கள் - நெஞ்சம்
நீங்காத உன்னை தேடுதே!
ஓ!..ஓ!..பெண்ணே!
இந்த இரவுகள் பாரமே
நீ தூரம் இருப்பதனால்!

துயில் கொள்ளா கண்கள்
ஏனோ... உன்னை தேடுதோ!
உன் அழகிய பிம்பம்
என் அருகினில் இருக்க
மழலை போலே மனம்
ஏதேதோ பேச
சிரிப்புகள் வந்து என்
உதடுகள் உரசுதே!

உன்னோடு...என் வாழ்வு-என்றே
எந்நாளும் உள்ளம் கூறிடும்
அந்த வார்த்தை கேளடி!
உன் பார்வை பூக்களை
என் மீதே தூவடி!

நான்... இங்கே...!
நீ.. அங்கே...!
இந்த பிரிவினை...
இதயம் தாங்குமா..?
உனை விட்டு மனமே தூங்குமா!?

உன் செல்போன் இணைப்பால்
நம்மை பிணைக்கலாம்!
இணையம் இருக்க
தூரம் தொலைக்கலாம்!

காதல் பேச்சுக்கள்...
நள்ளிரவுகள் நீளட்டும்!
உந்தன் நினைவுகள்
என் இதயம் நீந்தட்டும்...!

ஓ! பெண்ணே...!
என் வார்த்தைகள் பாரடி...
வந்தே நீயும்...
உயிரில் சேரடி!

#காதலன்

No comments:

Post a Comment