Translate

Saturday, 21 September 2019

ஒளி_ஓவியம்_இருளில்! கவிதை

ஒளி_ஓவியம்_இருளில்!

தீபத்தின் ஜூவாளை ஒன்று
நிமிர்ந்து எரிகிறது!
ஏனோ!?? இருள்...
அதன் அடியில் மட்டும்
விலக மறுக்கிறது!

உறுகிச்சாவும் மெழுகின் வலிகள்
உலகம் அறிவதில்லை!
அழுகைக்கண்ணீர் வழிந்து செல்வதை
மனங்கள் மறுப்பதில்லை- ஆயினும்...
அன்பைத்தருவதில்லை!

சிரிக்கும் முகத்தின் ஓவியம்
கண்ணீர் வடிக்கும்...
காட்சிகள் தெரிவதில்லை!
மீட்பார் யாருமின்றி
அழைப்பர் உடன் செல்லும்
அபத்தம் நீங்கவில்லை!

உடல் தீர்க்கும் பசியில்
செரித்தே போகும்
இவள் சிதிலங்கள் கிடைப்பதில்லை!

குடும்ப குத்துவிளக்கு
என்றே அடைமொழி சூடியவள்
சிவப்பு விளக்கில்
விட்டில் பூச்சியாய்
சின்னாபின்னம்
ஆகிப்போகிறாள்!

ஒளி ஓவியம்-இருளில்!

#சிவப்பு_விளக்கில்_பெண்!

No comments:

Post a Comment