இத்தனை பேரழகா...
ஓ! பிறந்தவள் நீதானே...!
அத்தனை அழகினையும்
நீ ஆடையில் மறைத்தாயே!
பெருமழையாய் பேரன்பை
பொழிபவள் நீதானே!
குடையின்றி நான் நனைய
கட்டளை இட்டாயே!
ஒரு துளியில் மூழ்கடித்து
மோகம் என்றாயே!
கால் நனைக்கும்
கடல்அலையாய்
உயிர் நனைக்கும்
காதல் தந்தாயே!
ஆளில்லா நள்ளிரவில்
மஞ்சள்... ஒளிவெள்ளம்
பாயும் தெருவில்
போதை கண்களால் கிறங்கடித்து
எனை பித்தன் என்கிறாய்!
பாதையெங்கும் கரம்கோர்த்து
உடன் நடந்திட கேட்கிறாய்!
பஜக்கென்று முத்தம் தந்து
வெகுளியாய் சிரிக்கிறாய்!
இப்படியாய் எனை மயக்கி
மனம் எங்கும் மகிழென மலர்கிறாய்!
#இளையபாரதி
ஓ! பிறந்தவள் நீதானே...!
அத்தனை அழகினையும்
நீ ஆடையில் மறைத்தாயே!
பெருமழையாய் பேரன்பை
பொழிபவள் நீதானே!
குடையின்றி நான் நனைய
கட்டளை இட்டாயே!
ஒரு துளியில் மூழ்கடித்து
மோகம் என்றாயே!
கால் நனைக்கும்
கடல்அலையாய்
உயிர் நனைக்கும்
காதல் தந்தாயே!
ஆளில்லா நள்ளிரவில்
மஞ்சள்... ஒளிவெள்ளம்
பாயும் தெருவில்
போதை கண்களால் கிறங்கடித்து
எனை பித்தன் என்கிறாய்!
பாதையெங்கும் கரம்கோர்த்து
உடன் நடந்திட கேட்கிறாய்!
பஜக்கென்று முத்தம் தந்து
வெகுளியாய் சிரிக்கிறாய்!
இப்படியாய் எனை மயக்கி
மனம் எங்கும் மகிழென மலர்கிறாய்!
#இளையபாரதி
No comments:
Post a Comment