தோல்விகள்...
எப்போதும் எல்லோரையும்
மொத்தமாய் சாய்த்து விடுவதில்லை.
ஏனெனில்...கல்லூரி நாட்களில் போலியான பட்டாம்பூச்சிகள் பறந்தடிக்கும் இதயத்தோட்டத்தில்
காதல் மலர் ஒன்று மொட்டுவிட்ட தருணம். அதன் அழகை...வாசம் குறையாமல் அவளிடம் தந்துவிட எண்ணினேன்.
அதுவரை எனக்கு நானே அறிந்துகொண்டதில்லை...அவள் என் நினைவுகளில் வந்துபோவதை. அந்த நினைவுகள் என் மனதில் மாநாடு நடத்த அனுமதி கேட்டுவந்த வேளையில்...அவளுக்கு ஒரு கடிதம் அனுப்பினேன்.
பெண்ணவளே...காதல் பூக்கள் உன்னிடத்தில் தஞ்சம் கேட்கின்றன. நெஞ்சம் தருவாயா... நானும் உடன் வந்து தங்குவதற்கு என்றே அனுப்பி வைத்தது
அனுமதி கடிதம்தான்.
அதற்கே...
நான் தேசதுரோகம் செய்ததாக விசாரணை இன்றி மரணதண்டனை தந்துவிட்டாள் என் நட்பிற்கு.என்
முகம் பார்த்திடவில்லை. என் விளக்கங்களுக்கு செவிமடுத்திடவில்லை. இடையே வந்து தொலைத்த என் பிறந்தநாளின் இனிப்பையும் எடுத்து ருசித்திடவில்லை.
மொத்தமாய்...தீ மூட்டிவிட்டாள்
அத்தனை நாள் நட்பிற்கும். வெட்கத்தோடு வேதனையும் வாட்ட...
கோபமாய் கிறுக்கி எறிந்தேன் கவிதை ஒன்றே. ஆயினும் மனம் தேறவில்லை.
அந்த தோல்வி துவட்டி எடுத்த வலிகளில் வந்து சேர்ந்தது இந்த பாடல் வரிகள் தான். அதுவரை கவிதையாகவே எழுதிப்பழகியவன் இசையின் வடிவினுக்கு "அணி" தர பாடல் எழுதிப்பழகலானேன்.
ஒரு தோல்வியும்...அது தந்த சோகமும்
வேறொரு சுகமாய் என்னோடு பயணிக்கிறது இன்றுவரை பல்வேறு பாடல் வரிகளாக. ஆனால் அவையும் என்போன்றே தனித்து இருக்கின்றன இசையின் கூடல் இன்றி.
எமது முதல் பாடல்வரிகள்...
மொத்த காதலையும் சுமந்து நிற்கும் தருணம்...
#Soup_Song
பாதகத்தி
பாவி நெஞ்ச கொன்னுபுட்டாடா
உசுர கையில் எடுத்து வச்சு தின்னுபுட்டாடா
நட்பாக இருந்த நெஞ்சு
காதலா மாறிப்போக
நட்பும் தண்ணீரில் தள்ளாடுது !
மனம் கண்ணீரில் அள்ளாடுது !
நேத்து வர இருந்த நட்பு
இன்னைக்குத்தான் செத்துபோச்சு
என்னோட இருந்த நாள
நாளைக்கு இல்லாம செஞ்சு புதைச்சுப்புட்டாடா
அவ புதைச்சுப்புட்டாடா!
பூவாக இருந்த நெஞ்சு
தீயாத்தான் மாறிப்போச்சு
யாரு இங்கு
அத வந்து எட்டிப்பாத்தது
கையில் தொட்டுப்பாத்தது !
தெருவில் வீசிப்போன இதயம்
துடிச்சு நிக்குது
அத காலில் எட்டி உதச்சுப்புட்டு
தள்ளிப்போகுது
அவ நெஞ்சு போகுது ...
மனம் பிஞ்சு போகுது!
ஏனோ தெரியவில்லை
ஏ நேரம் சரியும் இல்ல
காயம் இன்னும் ஆரவில்லை-
உள் மனசுல
எந்தன் முள் மனசுல!
என் நெஞ்சு இளவம் பஞ்சு
நீ அள்ளி வச்சு கொஞ்சு
மாட்டேன்னு தள்ளிப்போகாத
ஏ உசுர கிள்ளிப்போகாத
உன்ன நான் மறக்கவில்லை
மறக்கவும் போறதில்லை
ஏ உசுர கொளுத்திப்போகாத!
எப்போதும் எல்லோரையும்
மொத்தமாய் சாய்த்து விடுவதில்லை.
ஏனெனில்...கல்லூரி நாட்களில் போலியான பட்டாம்பூச்சிகள் பறந்தடிக்கும் இதயத்தோட்டத்தில்
காதல் மலர் ஒன்று மொட்டுவிட்ட தருணம். அதன் அழகை...வாசம் குறையாமல் அவளிடம் தந்துவிட எண்ணினேன்.
அதுவரை எனக்கு நானே அறிந்துகொண்டதில்லை...அவள் என் நினைவுகளில் வந்துபோவதை. அந்த நினைவுகள் என் மனதில் மாநாடு நடத்த அனுமதி கேட்டுவந்த வேளையில்...அவளுக்கு ஒரு கடிதம் அனுப்பினேன்.
பெண்ணவளே...காதல் பூக்கள் உன்னிடத்தில் தஞ்சம் கேட்கின்றன. நெஞ்சம் தருவாயா... நானும் உடன் வந்து தங்குவதற்கு என்றே அனுப்பி வைத்தது
அனுமதி கடிதம்தான்.
அதற்கே...
நான் தேசதுரோகம் செய்ததாக விசாரணை இன்றி மரணதண்டனை தந்துவிட்டாள் என் நட்பிற்கு.என்
முகம் பார்த்திடவில்லை. என் விளக்கங்களுக்கு செவிமடுத்திடவில்லை. இடையே வந்து தொலைத்த என் பிறந்தநாளின் இனிப்பையும் எடுத்து ருசித்திடவில்லை.
மொத்தமாய்...தீ மூட்டிவிட்டாள்
அத்தனை நாள் நட்பிற்கும். வெட்கத்தோடு வேதனையும் வாட்ட...
கோபமாய் கிறுக்கி எறிந்தேன் கவிதை ஒன்றே. ஆயினும் மனம் தேறவில்லை.
அந்த தோல்வி துவட்டி எடுத்த வலிகளில் வந்து சேர்ந்தது இந்த பாடல் வரிகள் தான். அதுவரை கவிதையாகவே எழுதிப்பழகியவன் இசையின் வடிவினுக்கு "அணி" தர பாடல் எழுதிப்பழகலானேன்.
ஒரு தோல்வியும்...அது தந்த சோகமும்
வேறொரு சுகமாய் என்னோடு பயணிக்கிறது இன்றுவரை பல்வேறு பாடல் வரிகளாக. ஆனால் அவையும் என்போன்றே தனித்து இருக்கின்றன இசையின் கூடல் இன்றி.
எமது முதல் பாடல்வரிகள்...
மொத்த காதலையும் சுமந்து நிற்கும் தருணம்...
#Soup_Song
பாதகத்தி
பாவி நெஞ்ச கொன்னுபுட்டாடா
உசுர கையில் எடுத்து வச்சு தின்னுபுட்டாடா
நட்பாக இருந்த நெஞ்சு
காதலா மாறிப்போக
நட்பும் தண்ணீரில் தள்ளாடுது !
மனம் கண்ணீரில் அள்ளாடுது !
நேத்து வர இருந்த நட்பு
இன்னைக்குத்தான் செத்துபோச்சு
என்னோட இருந்த நாள
நாளைக்கு இல்லாம செஞ்சு புதைச்சுப்புட்டாடா
அவ புதைச்சுப்புட்டாடா!
பூவாக இருந்த நெஞ்சு
தீயாத்தான் மாறிப்போச்சு
யாரு இங்கு
அத வந்து எட்டிப்பாத்தது
கையில் தொட்டுப்பாத்தது !
தெருவில் வீசிப்போன இதயம்
துடிச்சு நிக்குது
அத காலில் எட்டி உதச்சுப்புட்டு
தள்ளிப்போகுது
அவ நெஞ்சு போகுது ...
மனம் பிஞ்சு போகுது!
ஏனோ தெரியவில்லை
ஏ நேரம் சரியும் இல்ல
காயம் இன்னும் ஆரவில்லை-
உள் மனசுல
எந்தன் முள் மனசுல!
என் நெஞ்சு இளவம் பஞ்சு
நீ அள்ளி வச்சு கொஞ்சு
மாட்டேன்னு தள்ளிப்போகாத
ஏ உசுர கிள்ளிப்போகாத
உன்ன நான் மறக்கவில்லை
மறக்கவும் போறதில்லை
ஏ உசுர கொளுத்திப்போகாத!
No comments:
Post a Comment