குழந்தைத்தனம்!
அவன் கல்யாண வயதைத்தொட்டுவிட்ட சமூக விலங்கு. எழுத்துக்களோடே உறவாடும் இணையவாசி. இன்னும் யாதொரு காதலும் கொண்டிராத போலிக் காதலன். மழலையினின்று மாறி வந்துவிட்டாலும் குழந்தைத்தனம் குறையாத குரங்கு பொம்மை. அன்பை விதைக்கவும், எடுக்கவும் தெரிந்த உயிர் நேசன்.
அதிகாலை விழிக்கும் போதெல்லாம் அம்மாவை அருகே அழைத்துக்கொள்வான். ஒற்றை முத்தத்தை கொடுத்துவிட்டு...பத்து முத்தம் வேண்டுமனென கேட்கும் கந்துவட்டிக்காரன். கட்டி அணைத்து சில நிமிடம் தூங்கக்கேட்கும் பிடிவாதன்.
கண்கள் திறந்ததும் கண் சிமிட்டியே காஃபி கேட்கும் தூங்கமூஞ்சி...! அன்னை அவள் சமையலறையில்...சமைக்கும் போதெல்லாம்...முதுகை கட்டிக்கொண்டு முத்தம் கொடுக்கும் இடைஞ்சல்காரன்.
தொலைக்காட்சி பாட்டு இசைக்கும்போதெல்லாம் ...சேர்ந்து ஆடிட அழைக்கும் தொல்லைக்காரன்.
தோள் சாய்ந்தே பேசி மகிழும் மழலைக்காரன்.
உண்ணும் போதெல்லாம் ஊட்டிவிட கேட்கும் செல்லப்பிள்ளை...
அன்னைக்கும் அன்னம் ஊட்டிவிடும்
மழலைத்தாய் அவன்.
நேற்று பிறந்த மகவென
மறுக்காமல் கட்டியனைத்தே
தாலாட்டு கேட்கும் சிறுபிள்ளை!
தட்டிக்கொடுத்தே சிரிக்கும்
அன்னையின் அரவணைப்பில்
தூங்கிப்பழகிய வாலிப_குழந்தை அவன்!
எத்தனை வயது ஆனாலும்
அன்னைக்கு குழந்தைத்தனம் மாறா
பிள்ளை தானே நாமெல்லாம்!
#அன்னையும்_நானும்!
#இளையபாரதி
அவன் கல்யாண வயதைத்தொட்டுவிட்ட சமூக விலங்கு. எழுத்துக்களோடே உறவாடும் இணையவாசி. இன்னும் யாதொரு காதலும் கொண்டிராத போலிக் காதலன். மழலையினின்று மாறி வந்துவிட்டாலும் குழந்தைத்தனம் குறையாத குரங்கு பொம்மை. அன்பை விதைக்கவும், எடுக்கவும் தெரிந்த உயிர் நேசன்.
அதிகாலை விழிக்கும் போதெல்லாம் அம்மாவை அருகே அழைத்துக்கொள்வான். ஒற்றை முத்தத்தை கொடுத்துவிட்டு...பத்து முத்தம் வேண்டுமனென கேட்கும் கந்துவட்டிக்காரன். கட்டி அணைத்து சில நிமிடம் தூங்கக்கேட்கும் பிடிவாதன்.
கண்கள் திறந்ததும் கண் சிமிட்டியே காஃபி கேட்கும் தூங்கமூஞ்சி...! அன்னை அவள் சமையலறையில்...சமைக்கும் போதெல்லாம்...முதுகை கட்டிக்கொண்டு முத்தம் கொடுக்கும் இடைஞ்சல்காரன்.
தொலைக்காட்சி பாட்டு இசைக்கும்போதெல்லாம் ...சேர்ந்து ஆடிட அழைக்கும் தொல்லைக்காரன்.
தோள் சாய்ந்தே பேசி மகிழும் மழலைக்காரன்.
உண்ணும் போதெல்லாம் ஊட்டிவிட கேட்கும் செல்லப்பிள்ளை...
அன்னைக்கும் அன்னம் ஊட்டிவிடும்
மழலைத்தாய் அவன்.
நேற்று பிறந்த மகவென
மறுக்காமல் கட்டியனைத்தே
தாலாட்டு கேட்கும் சிறுபிள்ளை!
தட்டிக்கொடுத்தே சிரிக்கும்
அன்னையின் அரவணைப்பில்
தூங்கிப்பழகிய வாலிப_குழந்தை அவன்!
எத்தனை வயது ஆனாலும்
அன்னைக்கு குழந்தைத்தனம் மாறா
பிள்ளை தானே நாமெல்லாம்!
#அன்னையும்_நானும்!
#இளையபாரதி
No comments:
Post a Comment