Translate

Thursday, 17 January 2019

களனியோடு விளையாடா கவிதை

களனியோடு விளையாடா
காளையர் கூட்டம்
கணினியோடு உறவாடும்
Computer உலகமிது!

ஆயினும் அன்னைத்தமிழ் நிலத்தே
உழைத்துக்களைத்தவன் வியர்த்துளிகள்
பொன்னினும் பெரிதாய் புகழ் சேர்க்க
ஆதவன் பெருவொளியால்
தீதின்றி வளர்ந்த நற்கதிரின்
அறுவடைத் திருநாளாம்
தைத்திங்கள் பொங்கல் பெருநாள்
உலகத்து தமிழர் திருநாள்!

தீங்குகள் சூழ்ந்தாலும்
நிமிர்ந்தெழுந்தே நின்று வென்ற
ஜல்லிக்கட்டுப் பெரும்புரட்சி
காளைகள் களம் நிறம்பட்டும்!

நிமிர்ந்த கரும்பின் சுவை
உள்ளம் நிறையட்டும்!
சுவை கூட்டும் வெல்லமும்
பாலும் பச்சரிசியும்
நெய்யும் முந்திரியும்
செம்பானையத்தே பொங்கி
இல்லமும் உள்ளமும்
மகிழ் நிறையட்டும்!

அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும்
அன்னைத்தமிழ் செம்மொழியில்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

#இளையபாரதி

No comments:

Post a Comment