தைப்பூசமும்... இழந்தைப்பழங்களும்!
எம்பெருமான் முருகனுக்கு பக்தர்கள் மார்கழியில் மாலையணிந்து காலையும், மாலையும் இறைவழிபாடுகள் செய்வர். மைக்செட் குழாய்கள் இறைகானம் பாடும். வருடம் முழுவதும் அமைதியாகவே நகரும் என் கிராமத்தின் பொழுதுகள்...இந்த பக்தி பாடல்களால் ஒரு ஆரவாரத்தை நம்முள்ளே கடத்திவிடும்.
வெள்ளியும், செவ்வாயும் பொங்கச்சோறும், சுண்டலும் கிடைக்கப்பெறும் பொன்னாள் ஆக மாறிவிடும். அதிகாலை தொட்டே முருகன் கோவில் விழாக்கோலம் பூண்டுவிடும். நாங்களும் அங்கேயே சுழன்று கொண்டிருப்போம்.
எத்தனை பொங்கல் வைப்பார்கள்...?
என்னவெல்லாம் இன்று கிடைக்கும்
என்றே ஒரு ஆர்வம் தொற்றிக்கொள்ளும்.
இரவு நேர பஜனைகள் சற்று நீண்டு செல்லும். நாங்கள் காத்திருந்தாலும்...தூக்கம் காத்திறாது வந்துவிடும். அரைத்தூக்கத்திலும் ஆசையோடு பொங்கலும் சுண்டலும் வாங்கிவிட்டே வீடு செல்வோம்.
தைப்பூசம்...அன்றைய நாட்களில்
ஒரு உற்சாக திருவிழாதான்.
அன்னதானத்திற்காக முதல் நாளே தேக்கமரத்து இலைகள் பறிக்க...ஏதோ வேட்டைக்கு செல்வதாய் செல்வர் இளைஞர் கூட்டம். நாங்களெல்லாம் சிறுவராய் இருப்பதால் அவ்வளவு எளிதாக அழைத்து செல்லமாட்டார்கள்.
எப்போது... தேக்க இலை பறிக்க அழைத்து செல்லப்படுகிறோமோ அப்போது நமக்குள் ஒரு தனி கெத்துதான். முசுறுகள்(செவ்வெறும்பு) அரண் செய்திருக்கும் தோட்டத்தில்...வேட்டைக்காரன் என நுழைந்து இலைகளை பறித்து குவிக்க வேண்டும். யார் அதிகம் பறிக்கிறார்கள் எனும் போட்டி எமக்குள்.
இதனிடையே...தேக்கந்தோப்பில் வளர்ந்திருக்கும் இழந்தை மரங்களில் பச்சையாகவும், அரைச்சிவப்பாகவும் பழங்கள் இருக்கும். பெரிய பையன்களை மீறி, இழந்தை முற்களைத்தாண்டி நமக்கானவற்றை பறிப்பதென்பது ஒரு சுவாரசிய போர்தான்.
பின்னர்...மாலையில் தேர் கட்டிவரும் ட்ராக்டரை கழுவ அம்பாள் கோவில் குளம் செல்வர். அந்த ட்ராக்டரில் இடம் பிடித்து செல்வது மீண்டும் ஒரு ஆனந்த போராட்டம் ஆகிவிடும். குளத்தில் தொப்பென்று குதித்து, ஒருவர் மீது ஒருவர் தண்ணீரை இறைத்து அடிக்கும் கூத்து தந்த மகிழ்வை இன்றைக்கு கோடி ரூபாய்களால் கூட தர முடியாது.
இன்றைய சிறுவர்களும் பெறமுடியாது அந்த பேரானந்தத்தை!
இரவில்...அன்னதானத்திற்கு சமைப்பர்.
அதற்காக காலையில் இருந்தே...அரிசியோ...புளியோ... காணிக்கையோ..கொண்டுவந்து தர சொல்லி மைக்கில் கூறுவர். அதில் நாமும் ஒரு முறை சொல்லிவிட ஆசை துடிக்கும்.அப்பப்போ நடந்தும் விடும்.
மாலையில் நாங்களெல்லாம் தண்ணீர் தூக்கி, சிறு சிறு வேலைகள் செய்து கோவிலே குற்றாலம் என துள்ளிக்குதித்து ஆட்டம் போடுவோம்.
நள்ளிரவில்..கருப்பட்டியும்..சுக்கும்..மல்லியும் சுண்டந்காய்ந்த தேனீர் வரும் பாருங்கள்.! அதன் மணம் இப்போதும் நாசியில் நர்த்தனம் ஆடுகிறது.
மறுநாள்...
தைப்பூசதிருநாள்!
சுற்றுப்பக்க உறவுகள் எல்லாம் குவிந்து இருக்கும் கோலாகல திருநாள்! பக்தி பாடல்களால் பஜனை நீண்டு கொண்டே செல்லும். கூட்டம் மூன்று வீதிகளிலும் முண்டியடித்துக் கொண்டிருக்கும்!
இங்கும் அங்கும் கால்கள் பரபரக்கும்!
"ஏய்..எப்பா... இந்த பக்கம் சோத்தை கொண்டுவாயா..அங்க பாரு இன்னும் இலையே கொடுக்காம இருக்கு. ஏ..சாமி.. சீக்கிரம் சாப்பாட்டை அள்ளிபோடுய்யா..."இப்படியாக மைக்கில் குரல்கள் ஒலிக்க...கை நிறைய அன்னமும், மனம் நிறைய பக்தியும், ஊர் நிறைய மகிழ்வும் குவிந்திருக்க
ஆனந்தமாய் அன்னதானம் நடந்தேறும்.
அந்த நாட்களை கொண்டுவருமா
இன்றைய நாட்களின் தைப்பூசம்!
ஏக்கத்துடன்..என்னைப்போன்றே பலர்...என் கிராமம் விட்டு வெளி ஊர்களில்!
#தைப்பூச_வாழ்த்துக்கள்!
எம்பெருமான் முருகனுக்கு பக்தர்கள் மார்கழியில் மாலையணிந்து காலையும், மாலையும் இறைவழிபாடுகள் செய்வர். மைக்செட் குழாய்கள் இறைகானம் பாடும். வருடம் முழுவதும் அமைதியாகவே நகரும் என் கிராமத்தின் பொழுதுகள்...இந்த பக்தி பாடல்களால் ஒரு ஆரவாரத்தை நம்முள்ளே கடத்திவிடும்.
வெள்ளியும், செவ்வாயும் பொங்கச்சோறும், சுண்டலும் கிடைக்கப்பெறும் பொன்னாள் ஆக மாறிவிடும். அதிகாலை தொட்டே முருகன் கோவில் விழாக்கோலம் பூண்டுவிடும். நாங்களும் அங்கேயே சுழன்று கொண்டிருப்போம்.
எத்தனை பொங்கல் வைப்பார்கள்...?
என்னவெல்லாம் இன்று கிடைக்கும்
என்றே ஒரு ஆர்வம் தொற்றிக்கொள்ளும்.
இரவு நேர பஜனைகள் சற்று நீண்டு செல்லும். நாங்கள் காத்திருந்தாலும்...தூக்கம் காத்திறாது வந்துவிடும். அரைத்தூக்கத்திலும் ஆசையோடு பொங்கலும் சுண்டலும் வாங்கிவிட்டே வீடு செல்வோம்.
தைப்பூசம்...அன்றைய நாட்களில்
ஒரு உற்சாக திருவிழாதான்.
அன்னதானத்திற்காக முதல் நாளே தேக்கமரத்து இலைகள் பறிக்க...ஏதோ வேட்டைக்கு செல்வதாய் செல்வர் இளைஞர் கூட்டம். நாங்களெல்லாம் சிறுவராய் இருப்பதால் அவ்வளவு எளிதாக அழைத்து செல்லமாட்டார்கள்.
எப்போது... தேக்க இலை பறிக்க அழைத்து செல்லப்படுகிறோமோ அப்போது நமக்குள் ஒரு தனி கெத்துதான். முசுறுகள்(செவ்வெறும்பு) அரண் செய்திருக்கும் தோட்டத்தில்...வேட்டைக்காரன் என நுழைந்து இலைகளை பறித்து குவிக்க வேண்டும். யார் அதிகம் பறிக்கிறார்கள் எனும் போட்டி எமக்குள்.
இதனிடையே...தேக்கந்தோப்பில் வளர்ந்திருக்கும் இழந்தை மரங்களில் பச்சையாகவும், அரைச்சிவப்பாகவும் பழங்கள் இருக்கும். பெரிய பையன்களை மீறி, இழந்தை முற்களைத்தாண்டி நமக்கானவற்றை பறிப்பதென்பது ஒரு சுவாரசிய போர்தான்.
பின்னர்...மாலையில் தேர் கட்டிவரும் ட்ராக்டரை கழுவ அம்பாள் கோவில் குளம் செல்வர். அந்த ட்ராக்டரில் இடம் பிடித்து செல்வது மீண்டும் ஒரு ஆனந்த போராட்டம் ஆகிவிடும். குளத்தில் தொப்பென்று குதித்து, ஒருவர் மீது ஒருவர் தண்ணீரை இறைத்து அடிக்கும் கூத்து தந்த மகிழ்வை இன்றைக்கு கோடி ரூபாய்களால் கூட தர முடியாது.
இன்றைய சிறுவர்களும் பெறமுடியாது அந்த பேரானந்தத்தை!
இரவில்...அன்னதானத்திற்கு சமைப்பர்.
அதற்காக காலையில் இருந்தே...அரிசியோ...புளியோ... காணிக்கையோ..கொண்டுவந்து தர சொல்லி மைக்கில் கூறுவர். அதில் நாமும் ஒரு முறை சொல்லிவிட ஆசை துடிக்கும்.அப்பப்போ நடந்தும் விடும்.
மாலையில் நாங்களெல்லாம் தண்ணீர் தூக்கி, சிறு சிறு வேலைகள் செய்து கோவிலே குற்றாலம் என துள்ளிக்குதித்து ஆட்டம் போடுவோம்.
நள்ளிரவில்..கருப்பட்டியும்..சுக்கும்..மல்லியும் சுண்டந்காய்ந்த தேனீர் வரும் பாருங்கள்.! அதன் மணம் இப்போதும் நாசியில் நர்த்தனம் ஆடுகிறது.
மறுநாள்...
தைப்பூசதிருநாள்!
சுற்றுப்பக்க உறவுகள் எல்லாம் குவிந்து இருக்கும் கோலாகல திருநாள்! பக்தி பாடல்களால் பஜனை நீண்டு கொண்டே செல்லும். கூட்டம் மூன்று வீதிகளிலும் முண்டியடித்துக் கொண்டிருக்கும்!
இங்கும் அங்கும் கால்கள் பரபரக்கும்!
"ஏய்..எப்பா... இந்த பக்கம் சோத்தை கொண்டுவாயா..அங்க பாரு இன்னும் இலையே கொடுக்காம இருக்கு. ஏ..சாமி.. சீக்கிரம் சாப்பாட்டை அள்ளிபோடுய்யா..."இப்படியாக மைக்கில் குரல்கள் ஒலிக்க...கை நிறைய அன்னமும், மனம் நிறைய பக்தியும், ஊர் நிறைய மகிழ்வும் குவிந்திருக்க
ஆனந்தமாய் அன்னதானம் நடந்தேறும்.
அந்த நாட்களை கொண்டுவருமா
இன்றைய நாட்களின் தைப்பூசம்!
ஏக்கத்துடன்..என்னைப்போன்றே பலர்...என் கிராமம் விட்டு வெளி ஊர்களில்!
#தைப்பூச_வாழ்த்துக்கள்!
No comments:
Post a Comment