ஏத்தம் எறைச்சு நாங்க
நாட்டுப்புறப்பாட்டு படிச்சுத்தாங்க
கழனியில கதிரு வளர்த்தோம்
அடி அம்மாடி
கழனியில கதிரு வளர்த்தோம்!
கஞ்சிப்பானையில
புளிச்சத்தண்ணியத்தான்
குடிச்சிப்புட்டு
ஏறு புடிச்சோம்
அடி அம்மாடி
குடிச்சிப்புட்டு
ஏறு புடிச்சோம்!
புழுதிக்காட்டுலதான்
உழைப்பக்கொட்டிவச்சு
ஊருக்கெல்லாம்
அரிசி படைச்சோம்
காயிகனிகளோடு
பூக்கள் பழங்களுன்னு
அத்தனையும் வெளையவச்சோம்
கானக்கருங்குயிலு
காக்கைக்கிளிகளோடு
சிட்டுக்குருவிகளும்
கொத்தித்திண்ண
கண்டுமகிழ்ந்தோம்
அடி அம்மாடி
கொத்தித்திண்ண
கண்டுமகிழ்ந்தோம்!
கருக்கொண்ட மங்கையென
உருக்கொண்ட பிள்ளையென
உயர்ந்து வளர்ந்த பயிர்
மகிழ்ந்து நிறைந்த கதிர்
களம்வர தலை சுமந்தோம்
அடி அம்மாடி
களம்வர தலை சுமந்தோம்!
நீ கண்ட பசிக்கெல்லாம்
நான் கண்ட பொருள்தந்து
உன்னைக்காத்து நின்று
உலகை வாழவைத்த
விவசாயி
நாங்களல்லோ
அடி அம்மாடி
விவசாயி
நாங்களல்லோ
காலங்காலமாக
கட்டிக்காத்த நிலம்
காஞ்சு போக
மனங்களங்கிட கண்ணீர் வடிச்சோம்
அடி அம்மாடி
களங்கிட
கண்ணீர் வடிச்சோம்
ஏரி குளம் வெட்டாம
ஆறுகள இணைக்காம
நிலத்துத்தண்ணி வத்திப்போச்சு!
வாழ்க்கை இப்போ
வானம் பார்த்த பூமியாச்சு
அடி அம்மாடி
வானம் பார்த்த பூமியாச்சு!
உழைப்புக்கேத்த
கூலியில்லை
விலை சொல்ல உரிமையில்லை
எல்லாம் இப்போ வணிகமாச்சு
ஏ வாழ்க்கையுந்தான்
கருகிப்போச்சு
அடி அம்மாடி
வாழ்க்கையுந்தான்
கருகிப்போச்சு!
எனக்கு மட்டும் ஆச்சுதுன்னு
ஏளனமா விட்டீங்கண்ணா
கணக்கு இங்கே தப்பாப்போகும்
அந்த கடவுளுக்கும் வயிறு காயும்
சும்மா விட்டுப்புட்டா
கடவுளுக்கும் வயிறு காயும்!
நாட்டுப்புறப்பாட்டு படிச்சுத்தாங்க
கழனியில கதிரு வளர்த்தோம்
அடி அம்மாடி
கழனியில கதிரு வளர்த்தோம்!
கஞ்சிப்பானையில
புளிச்சத்தண்ணியத்தான்
குடிச்சிப்புட்டு
ஏறு புடிச்சோம்
அடி அம்மாடி
குடிச்சிப்புட்டு
ஏறு புடிச்சோம்!
புழுதிக்காட்டுலதான்
உழைப்பக்கொட்டிவச்சு
ஊருக்கெல்லாம்
அரிசி படைச்சோம்
காயிகனிகளோடு
பூக்கள் பழங்களுன்னு
அத்தனையும் வெளையவச்சோம்
கானக்கருங்குயிலு
காக்கைக்கிளிகளோடு
சிட்டுக்குருவிகளும்
கொத்தித்திண்ண
கண்டுமகிழ்ந்தோம்
அடி அம்மாடி
கொத்தித்திண்ண
கண்டுமகிழ்ந்தோம்!
கருக்கொண்ட மங்கையென
உருக்கொண்ட பிள்ளையென
உயர்ந்து வளர்ந்த பயிர்
மகிழ்ந்து நிறைந்த கதிர்
களம்வர தலை சுமந்தோம்
அடி அம்மாடி
களம்வர தலை சுமந்தோம்!
நீ கண்ட பசிக்கெல்லாம்
நான் கண்ட பொருள்தந்து
உன்னைக்காத்து நின்று
உலகை வாழவைத்த
விவசாயி
நாங்களல்லோ
அடி அம்மாடி
விவசாயி
நாங்களல்லோ
காலங்காலமாக
கட்டிக்காத்த நிலம்
காஞ்சு போக
மனங்களங்கிட கண்ணீர் வடிச்சோம்
அடி அம்மாடி
களங்கிட
கண்ணீர் வடிச்சோம்
ஏரி குளம் வெட்டாம
ஆறுகள இணைக்காம
நிலத்துத்தண்ணி வத்திப்போச்சு!
வாழ்க்கை இப்போ
வானம் பார்த்த பூமியாச்சு
அடி அம்மாடி
வானம் பார்த்த பூமியாச்சு!
உழைப்புக்கேத்த
கூலியில்லை
விலை சொல்ல உரிமையில்லை
எல்லாம் இப்போ வணிகமாச்சு
ஏ வாழ்க்கையுந்தான்
கருகிப்போச்சு
அடி அம்மாடி
வாழ்க்கையுந்தான்
கருகிப்போச்சு!
எனக்கு மட்டும் ஆச்சுதுன்னு
ஏளனமா விட்டீங்கண்ணா
கணக்கு இங்கே தப்பாப்போகும்
அந்த கடவுளுக்கும் வயிறு காயும்
சும்மா விட்டுப்புட்டா
கடவுளுக்கும் வயிறு காயும்!
No comments:
Post a Comment