Translate

Thursday, 17 January 2019

மறையாத சூரியனோ காதல் கவிதை

மறையாத சூரியனோ
மங்காத முழுநிலவோ
தெரியவில்லை!
பெண்ணென வந்து கண்முன்னே
அழகென தோகை விரிக்கிறது
"அவள்" எனும்
பெண் மயில் விந்தையாய்!

நீ சென்ற பின் வரும்
முழு இரவையும்
முன்பகலையும்
உனை காணும் நன்பகல் வரை
முழுவதாய் வெறுக்க வைத்தாய்!

மனமெங்கும் மகிழ்பரப்பி என் எண்ணங்களையெல்லாம்
உன்னோடே இருக்கச்செய்தாய்!

கணினிக்கும் எனக்குமான
இடைவெளியில்
உன் பிம்பம் மட்டும் தெரிகிறதே!?
நீ என்ன "#Virtual_Reality"ஆ!

Mutual Friend Listல் இல்லாமல்
இன்னும் ஏன் இடைவெளி!
கண்களின்
ஒருநொடி Scanning ல்-எத்தனை ஸ்பரிசங்கள் செய்கிறாய்
தெரியுமா!

மனம்விட்டு சொல்லிடும் ஆசை
குளிர் அருவியாய் கொட்டுதடி
என் கோவிலமே!
வாழ்க்கைப் பெருந்துணையாய்
உன் கை பிடிக்கப் பார்க்கிறேன்
மறுக்காதே மயிலறகே!

இதயங்கள் இணைப்புவிழா
கொண்டாடட்டும் - வா
விழா நாயகம் ஆவோம்!

முழங்கால் மடித்து
உன் முன்னே ரோஜா நீட்டிடுவேன்
ஆனால் உன் அழகின் முன்னால்
மரணித்து விடுமே ரோஜா இனமும்!

இதோ...
என் முகநூலைப் பாரடி!
உனக்கென கவிதை படிக்கிறது!
Friend List ல் நீ இல்லை இன்னமும்!
அதனால்தான் என்காதலின்
கடிதங்கள் உன் கண்தரிசனம்
பெறவில்லை போலும்!

உன் முன்னே கடந்துபோகையில்
எப்படி சொல்லிட முடியும்
வெறும் வார்த்தைகளால்
நீ என் உயிரென!

என் கண் பாரடி கலைநிலவே!!
கண்கள் பேசிக்கொள்ளும்
நம் பெருங்காதலை!

வா... வசந்தமே...
வாழ்க்கைத்தென்றல்
வீச செய்வோம் ஒன்றாக!

#கவிஞர்_இளையபாரதி

No comments:

Post a Comment