Translate

Thursday, 17 January 2019

திமிலு முழுக்க திமிரு இருக்க - கவிதை

திமிலு முழுக்க திமிரு இருக்க
சீறி வாடா சிங்ககுட்டியே!
கொம்பு சீவி அங்கம் சிலிர்க்க
பாய்ஞ்சு வாடா பாலமேட்டுல!

அடங்காத ஊரு ஆளுக யாரு
அலங்காநல்லூர் பேர கேளு
பீட்டா கூட்டத்துக்கு அல்லு விட்டுரும்
ஜல்லிக்கட்டு புரட்சி வெடிச்ச
மண்ணு இதுதான் வணங்கி நிப்போமே!

மெரினா அதிர...உலகம் உதர
கூடி நின்னோம் கோடி சனங்க
கேடிப்பயல்லாம் ஆடி அடங்க
வேட்டை யாடுனோம்!

கோட்டை சுவரில் அதிர்வு கிளம்ப
வீர முழக்கம் எழுப்பிக் காட்டினோம்
இது மண்ணோட பெருமை
முன்னோர் தந்த அருமை ஜல்லிக்கட்டுதான்!
நாங்க விடமாட்டோம்தான்!

எங்கெங்கோ தமிழன் இருந்தாலும்
எல்லாரும் ஒன்னுன்னு கூடி நின்னோமே!
வீரம் தான் பொறப்புன்னு
பொளந்து கட்டினோமே!

வாடா ஜல்லிக்கட்டு வீரா...
களத்துல கொம்புக்கு நேரா
நிக்கிற கூட்டம்...திமிரான ஆட்டம்
ஆடுறத பாக்க கோடி சனம் கூடும்!

சீறி பாய்ஞ்சு வரும்...
சிங்கமா சிலிர்த்து வரும்...
கொம்ப சிலிப்பிக்கின்னு
எங்க காளை சுத்தி வரும்
புழுதி கிளம்புர களத்துல-கெத்தா ஜல்லிக்கட்டு நடந்து வரும்
இது எந்நாளும் எங்க தமிழ்மண்ணு!
உயிரும் தமிழும் எமக்கொன்னு!

அனைவருக்கும் தமிழர் திருநாள்
நன்றிப்பெருநாள் மாட்டுப்பொங்கல்
நன்னாள் நல்வாழ்த்துக்கள்!

#கவிஞர்_இளையபாரதி

No comments:

Post a Comment