மின்சாரம் இல்லா இரவொன்று...
விளக்கினை ஏற்றி
அதில் உன்முகம் காட்டி
வெளிச்சங்கள் என்னில் பாய்ச்சினாய்!
பகலென்று இங்கே தேவைகள் இல்லை
உன்அன்பே எந்தன் தீராத தொல்லை
வாயேன்...எந்தன் வாசப்பூவே!
நேசம் கொண்டே என்நெஞ்சம் சாய!
பெண்ணே...!
நீ மட்டும் போதும்...
நித்திரை தீரும்...!
உன் சேலை வாசம்...
என் மேனி வீசும்
இந்த பொழுதுகள் நீளும்!
பூவின் மேல தேனீ உலவி
சிறு உரசலும் இன்றி தேனைப்பருகும்...
நீ பூவாய் இங்கே வண்ணங்கள் வீசி
என் தேனீ நெஞ்சம்...
உன்னோடு உலவி
செய்யும் கலவி...
வெகு காலங்கள் வேண்டும்!
#ஹரி
விளக்கினை ஏற்றி
அதில் உன்முகம் காட்டி
வெளிச்சங்கள் என்னில் பாய்ச்சினாய்!
பகலென்று இங்கே தேவைகள் இல்லை
உன்அன்பே எந்தன் தீராத தொல்லை
வாயேன்...எந்தன் வாசப்பூவே!
நேசம் கொண்டே என்நெஞ்சம் சாய!
பெண்ணே...!
நீ மட்டும் போதும்...
நித்திரை தீரும்...!
உன் சேலை வாசம்...
என் மேனி வீசும்
இந்த பொழுதுகள் நீளும்!
பூவின் மேல தேனீ உலவி
சிறு உரசலும் இன்றி தேனைப்பருகும்...
நீ பூவாய் இங்கே வண்ணங்கள் வீசி
என் தேனீ நெஞ்சம்...
உன்னோடு உலவி
செய்யும் கலவி...
வெகு காலங்கள் வேண்டும்!
#ஹரி