Translate

Monday, 30 September 2019

மின்சாரம் இல்லா இரவொன்று... கவிதை

மின்சாரம் இல்லா இரவொன்று...
விளக்கினை ஏற்றி
அதில் உன்முகம் காட்டி
வெளிச்சங்கள் என்னில் பாய்ச்சினாய்!

பகலென்று இங்கே தேவைகள் இல்லை
உன்அன்பே எந்தன் தீராத தொல்லை
வாயேன்...எந்தன் வாசப்பூவே!
நேசம் கொண்டே என்நெஞ்சம் சாய!

பெண்ணே...!
நீ மட்டும் போதும்...
நித்திரை தீரும்...!
உன் சேலை வாசம்...
என் மேனி வீசும்
இந்த பொழுதுகள் நீளும்!

பூவின் மேல தேனீ உலவி
சிறு உரசலும் இன்றி தேனைப்பருகும்...
நீ பூவாய் இங்கே வண்ணங்கள் வீசி
என் தேனீ நெஞ்சம்...
உன்னோடு உலவி
செய்யும் கலவி...
வெகு காலங்கள் வேண்டும்!

#ஹரி

பெண்ணின்_காதல்_வரிகள் - பாடல்

 ஆகா.. இது மாலை நேரம்
ஆகா.. மழை பொழியும் காலம்
ஓகோ...மனம் உன்னை தேடும்
நீயும்... என் நெஞ்சம் பாயும்...பேரலை!

வாடா என் விண்மீன் வீரா
நேரா நீ என்னை சேரடா
காதல்... அது என்னில் பூக்கவே
விதையென விழுகிற
உன் பிம்பம் பேரின்பம்!

என் புடவையில் உந்தன் வாசமும்
ஒரு மடிப்பினில் உன் மீசைமுடிகளும்
இதயத்தில் பல ஆசை நொடிகளும்
இருந்திட எண்ணம் தோன்றுதே!

உன் தோள்களில்
நான் சாயும் வேளையில்...
புன்னகை...அது பூக்கும் பார்வையில்
நினைவுகள் அது நிலவின் ஓரத்தில்
நாம் மட்டும் தொலைந்து போகிறோம்!

என் மௌனங்கள்...உந்தன் புரிதலில்
என் அழுகைகள் உந்தன் மடியினில்...
என் மகிழ்வுகள் உந்தன் மனதினில்...
என் தாய்மையும் உந்தன் ஆண்மையில்...
என் தனிமைகள் உந்தன் இரவினில்...
இது யாவும் போதும்...
இனி உலகமே உனக்கென சுழலுமே!

என் தந்தையாய் நீயே இருந்திட
என் தோழனாய் நீயும் வாழ்ந்திட
என்னை நான்...எங்குமே... தொலைக்கவில்லை!

கடற்கரை..நாம் பேசி கழித்திட...
கடல் அலை...நம்மை பார்த்து ரசித்திட...
பறவைகள் நம் தோளில் அமர்ந்திட...
மழலையாய்.. மாறியே போகிறோம்!

#இளையபாரதி

90'ஸ் கிட்ஸ் லவ்வு சாங்கு!

எழந்தைப்பழ செவப்பழகி
எழவம்பஞ்சு சிரிப்பழகி
இஞ்சி முட்டாய் காரம் போல
மொறச்சு மொறச்சு பாக்குறியே!

அருக்கம்புல்லு மெத்தையிலே
நாமிருப்போம் ஒத்தையிலே
பேசிப்பேசி நேரம் போக
இரவு காத்தும் தீர்ந்திடுச்சு!

பட்டு துணியா என்ன
ஒட்டிக்கிட்ட பெண்ணே
சிட்டுக்குருவி போல நானு
சும்மா சும்மா பறக்குறேன்!

முத்தம் தந்தா போதும்
கொழந்தை வந்து சேரும்
இந்த புரளிய நம்பி வந்த
90'S கிட்ஸு நானு!

ஐசு வண்டி சத்தம் போல
உன் பேச்சு கேக்கும் திசையிலே
சுத்து முட்டாய் கயிறப்போல
சுத்தி சுத்தி பாக்குறேனே!

டயரு வண்டி ஓட்டிக்கிட்டு
கடைக்கு போன 90s கிட்சு நானு
சக்திமான போல உன்ன
வியந்து பாக்குறேன் பாரு!

சவ்வு மிட்டாய் பொம்மையபோல்
எனக்கு மகிழ்ச்சி தந்தவளே
பூம்பூம் மாடு போல
நீயும் போரதிசை நான்வருவேன்!

கடலைமிட்டாய் கால்கோனா...
உனக்கு வாங்கி தருவேனா...
சட்டையில் வச்சு ஆளுக்கு கொஞ்சம்
காக்கா கடி கடிப்போமா!?

#Dedicated to 90'S  Kidsue...

#இளையபாரதி

Saturday, 21 September 2019

புத்தாண்டு புதுசா பொறந்தாச்சு ரவுசா - 2019 கவிதை

புத்தாண்டு  புதுசா
பொறந்தாச்சு ரவுசா
கத்திதான் பெருசா
வாழ்த்துப்பாடு!

உல்லாச உலகம்
உனக்காக பிறக்கும்
எந்நாளும் இளமை
நிக்காம குதிக்கும்
வா... எறங்கி ஆட..
நீ ஆடிப்பாடு!

ஊரெல்லாம் நமக்கு
உற்சாகம் இருக்கு
தயக்கம் தான் எதுக்கு
தாருமாறா நீ ஆட்டம் போடு!

கெத்தா தான் கெளம்பி
வந்தாலே போதும்
வரும்காலம் நமக்கு
வெற்றிய பரிசா மாலை போடும்!

#லட்சிய_கனவுகள் யாவும் வெற்றி பெற
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
#2019

ஜாடைமாடைப் பார்வையிலே பாடல்

ஜாடைமாடைப் பார்வையிலே
சேதி சொல்லிப்போன புள்ள
சாயங்காலம் வந்தா
மடி சாயும் காலம் வருமே!

உள்ளாரா நெஞ்சுக்குள்ள
உன் நெனப்பு ஊரயில
கள்ளு போல போதை ஒன்னு
என் கண்ணை கட்டி விடுதே!

அக்கம் பக்கம் யாருமில்லை
உன்னைப்போல துணையுமில்லை
கட்டிக்கிற நேரத்தில
ஒட்டிக்கிற உன் அழகு
என்னை மொத்தம் மாத்திடுச்சே!

நெஞ்சோரம் உன் உசுர
அச்சடிச்சு வச்சிருக்கேன்
அச்சாரம் போட்டுப்புட
ஆசையத்தான் சொல்லிப்புட்டேன்
பஞ்சாங்கம் பாத்திடத்தான்
நல்ல நாளும் வருதே!

பஞ்சு மெத்தை தேகத்தில
என்னை தள்ளி விட்டபுள்ள
ஒட்டு மொத்த அழகையெல்லம்
அள்ளி அள்ளி கொட்டிவச்சு
என்னை வளைச்சு போட்டுப்புட்ட!

#அச்சச்சோ

Local கானா! பாடல்

Local கானா!

Heart குள்ள கலக்கலாக
ஏறங்குனியே style ஆ!
all timeu - உன்ன
love u பண்ணனும்
அதான் இங்க Bylaw!

மாடர்ன்...beauty மயிலா
நீதான் ஊட்டி ரயிலா
ticketu வாங்கி காத்துனுக்கேன்
மாமன் style ஆ!

பச்சை புடவை கட்டிக்கினு
வந்த புயலா...மனசு சுட்டு நீயும்
எறிக்கிறியே கத்திரி வெயிலா!

Scene ஆ நடந்தது வராத
Light ஆ ஸ்மைலு பண்ணாத
ஊசி பட்ட பலூன் போல
ஒடையுதடி மனசு
ஆனா நீயும் இருக்குறடி
பவர்புல்லு லென்சு

ஒத்தைய கெத்து காட்டிதான்
வேட்டி ஏத்தி கட்டித்தான்
உனக்குன்னு வாங்கிவறேன் ரோசு ரோசு!
சிறிச்சிக்கின்னே வாங்கிக்கின்னா
மனசு பண்ணும் ரவுசு ரவுசு!

தாஜூமகால் கட்டணுமா
LOve பண்ணிட்டா...நம்ம
ஓட்டை குடிசை ஒழுகுதடி
இப்போ light ஆ!

Beachஆண்டை போயி நின்னு
கடலை போடத்தன்
காத்தடிச்சு கூப்பிடுதடி
மெரினா நம்மளத்தான்!

சாயங்காலம் போலாமடி
சிலுக்கு சிலையே
கால் நனைச்சு போகட்டுமே
கடலு அலையே!

அண்ணல் காந்தியடிகள்! கவிதை

என் மேல் பாசம் கொண்டு,
அதிகம் ஊக்கப்படுத்தும் #பெரியம்மாவின்
வேண்டுகோளுக்கு இணங்க
எழுதிய வரிகள்
#காந்தியடிகள்!

ஒற்றை துணியில்
நாட்டின் மானம் காத்து நின்றவர்!
எரியும் தீயின் நடுவே
அகிம்சை மெழுகை பார்த்துக்கொண்டவர்!
ஆயுதங்கள் உரசும் சண்டையில்
அன்பைப்பேசி தனித்து நின்றவர்!

போர்கள் ஓய்ந்து போகும்-சிந்தும்
ரத்தம் காய்ந்து போகும்
அன்பு மட்டுமே
உயிரின் ஆழம் பாய்ந்து
நாளும் வாழும் எனும்
தத்துவத்தில் வாழ்வை
அமைத்து தேசத்தந்தை ஆனவர்!

பொய்மை மறுத்து
மெய்யியலில் ஆட்சி செய்தவர்!
உலகப்பந்தில் இந்தியத்தின் சுதந்திரத்தை
வென்று வைத்தவர்!

எந்த நாளும் நம்மில்
புகழால் மறையாது
வாழ்ந்து கொண்டிருப்பவர்...!

அன்னை தேசத்து தந்தையானவர்
அனைவருக்கும் தாத்தா
எனும் உறவு தந்தவர்
காந்தியடிகள்!

பெருமையும் பெருமைப்படும்
அருமையானவர்-
அண்ணல் காந்தியடிகள்!

உன்னிடத்தே... கவிதை

உன்னிடத்தே...
நான் சொல்லிடாத
காதலின் ஜீவனாய்...
நினைவுகளாக என்னுள்ளே இருந்து
என் அத்தனை கவிதைகளுக்கும்
கரு தந்து...தாயுமானவளே...!

உன் பெயர் - நிச்சயம்
நான் சொல்லிடவேண்டும்
அறிஞர்பால் நிறைந்திட்ட
பெரும்சபையில்
வெற்றியின் பரிசுகளோடு
யான் நின்று
உன் பெயர்
நிச்சயம் சொல்லிடவேண்டும்!

நீயே...
என் கவிதைகளின்
"தாய்"என்று!
அந்த நாளைத்தேடி
உழைத்துக்கொண்டு இருக்கிறேன்
உன் நினைவுகளோடு!

#விசித்திரன்

ஒளி_ஓவியம்_இருளில்! கவிதை

ஒளி_ஓவியம்_இருளில்!

தீபத்தின் ஜூவாளை ஒன்று
நிமிர்ந்து எரிகிறது!
ஏனோ!?? இருள்...
அதன் அடியில் மட்டும்
விலக மறுக்கிறது!

உறுகிச்சாவும் மெழுகின் வலிகள்
உலகம் அறிவதில்லை!
அழுகைக்கண்ணீர் வழிந்து செல்வதை
மனங்கள் மறுப்பதில்லை- ஆயினும்...
அன்பைத்தருவதில்லை!

சிரிக்கும் முகத்தின் ஓவியம்
கண்ணீர் வடிக்கும்...
காட்சிகள் தெரிவதில்லை!
மீட்பார் யாருமின்றி
அழைப்பர் உடன் செல்லும்
அபத்தம் நீங்கவில்லை!

உடல் தீர்க்கும் பசியில்
செரித்தே போகும்
இவள் சிதிலங்கள் கிடைப்பதில்லை!

குடும்ப குத்துவிளக்கு
என்றே அடைமொழி சூடியவள்
சிவப்பு விளக்கில்
விட்டில் பூச்சியாய்
சின்னாபின்னம்
ஆகிப்போகிறாள்!

ஒளி ஓவியம்-இருளில்!

#சிவப்பு_விளக்கில்_பெண்!

#தொலைவு! கவிதை


காதலர்கள் பேசிக்கொள்வதாக!

#தொலைவு!

என்னுயுரே!
எத்தனையோ கிலோமீட்டர்கள் கடந்து நாம் இருந்த போதெல்லாம்
நான் உணரவில்லை
நீ தொலைவில் இருப்பதாய்!

இப்போது உணர்கிறேன்
நீ அருகில் இருந்தும்
உன் மூச்சுக்காற்று
படாத நேரங்களில்!

எல்லைகள் தூரம் என்றாலும்
இதயங்கள் இணைந்திருந்தால்
தொலைவென்று இங்கேது!

நெடுந்தொலைவுகள் கடந்தும்
கால்கள் ஓயவில்லை
உனைக்காணும் தேடலில்!

மனங்கள் பேசிக்கொள்ள
விட்டுவிடுவோமே!
தூரங்கள் இனி ஏது!?
அலைகள் அடித்து
ஓய்ந்துவிடவா போகிறது
கரையின் மீதான கடலின் காதல்!?

ஏன் இடைவெளி...?
நமக்கிடையேயான
சில மில்லிமீட்டர் தூரம் கூட
எனக்கு பெரும் தொலைவுகள் தான்!
வா... அன்பே அருகில்!
தொலைவுகள் இனியேது!

#தொலைவுகள்_தொலையட்டுமே!

#வாழ்க_நீ_எம்மான் - கவிதை

#வாழ்க_நீ_எம்மான்

தேசம் முழுவதும்
நேசம் கொண்ட பெரும் மனிதர்!
மனித ஆத்மாக்கள்
அடைந்திட முடியாத மகாத்மா!

சுதந்திரக்காற்று சிறைபட்ட நேரத்தே
வெகுண்டெழுந்த அகிம்சா மூர்த்தி!
அரிச்சந்திரன் வழியே
பொய்யுரையா பெருந்தகை!

ஆயுதக் காட்டிலும்
அன்புச்செடி வளர்த்தவர்
அடிமை விலங்கை
அறத்தால் பிளந்தவர்!

மதங்கள் கடந்தும்
மனிதம் நிறை(த்)ந்தவர்!
இந்தியத்தாய்க்கும் தந்தையானவர்
சிந்தை முழுவதும் அகிம்சை நிறைந்தவர்!

எதிரிகள் ஆண்டபோதும்
இரும்பென சுழன்றவர்
சுதந்திர நாட்டில்
சுடப்பட்டு மாண்டவர்!

இறக்கும் தருணத்திலும்
எத்தனை இனியவர்?!
குண்டுகள் தந்த
கோட்ஸேவுக்கும்
கருணை தந்தவர்!

இன்னொரு பிறப்பு
இவர்போல்
இறைவனுக்கும்
சாத்தியமில்லை!

இந்நாள் மறைந்திட்ட
அண்ணல் நினைவுகள்
அனைவரும் போற்றுவோம்!

அவர்போல் அணுவேணும்
வாழ்ந்திட
பெரும்முயற்சி
செய்திடுவோம்!


என்னடா நெனைக்கிற - கவிதை

என்னடா நெனைக்கிற
நெஞ்சுல மிதிக்கிற
பொட்டப்புள்ள பொறப்பையே
புழுவா நீயும் நசுக்குற!

தனியா நடக்குற
பொண்ண நீயும் தொரத்துற
பஸ்சுல கிட்டவந்து
ஒட்டி ஒட்டி ஒரசுர!

உனக்கு இல்லையாடா
அக்கா.. அம்மா..தங்கச்சி...
எதுக்கு நசுக்குற...நெஞ்சுமேல கைவச்சி!

சாதிதான் பெருசுன்னு
soundஅ கூட ஏத்துற
காதலு பண்ணிப்புட்டா
கலாட்டா பண்ணுற
கவுரவம் பெருசுன்னு
என்னை கொலை செய்யுற!

பொம்பள பொறப்பெல்லாம்
உனக்கு அடிமையாகுமா!?
முன்னேறி வரணுமுன்னா
"Adjust" பண்ண வேணுமா!?

கத்திய நீட்டுற
காதல் பண்ண சொல்லுற!
வேணான்னு தள்ளிப்போனா
வாயி மேல வெட்டுற!

பொம்பள உடம்பையே
உத்து உத்துப்பாக்குற
குழந்தைய சிரழிச்சும்
ஆடைய குத்தம் சொல்லுற!

ஆம்பளத்தனமுன்னு
அடக்க நீயும் நெனைக்கிற
அடிமை இவளுன்னு
திமிராத்தானே நடத்துற
கோவிலும் உனக்கின்னு
குதியாக்குதிக்கிற...
எதித்து நின்னாக்க
அடிச்சு ஏன்டா தொறத்துற!

தூங்காத கண்கள் - நெஞ்சம் கவிதை

தூங்காத கண்கள் - நெஞ்சம்
நீங்காத உன்னை தேடுதே!
ஓ!..ஓ!..பெண்ணே!
இந்த இரவுகள் பாரமே
நீ தூரம் இருப்பதனால்!

துயில் கொள்ளா கண்கள்
ஏனோ... உன்னை தேடுதோ!
உன் அழகிய பிம்பம்
என் அருகினில் இருக்க
மழலை போலே மனம்
ஏதேதோ பேச
சிரிப்புகள் வந்து என்
உதடுகள் உரசுதே!

உன்னோடு...என் வாழ்வு-என்றே
எந்நாளும் உள்ளம் கூறிடும்
அந்த வார்த்தை கேளடி!
உன் பார்வை பூக்களை
என் மீதே தூவடி!

நான்... இங்கே...!
நீ.. அங்கே...!
இந்த பிரிவினை...
இதயம் தாங்குமா..?
உனை விட்டு மனமே தூங்குமா!?

உன் செல்போன் இணைப்பால்
நம்மை பிணைக்கலாம்!
இணையம் இருக்க
தூரம் தொலைக்கலாம்!

காதல் பேச்சுக்கள்...
நள்ளிரவுகள் நீளட்டும்!
உந்தன் நினைவுகள்
என் இதயம் நீந்தட்டும்...!

ஓ! பெண்ணே...!
என் வார்த்தைகள் பாரடி...
வந்தே நீயும்...
உயிரில் சேரடி!

#காதலன்

தீபம் யாவும் விழி மூடிப்போன - கவிதை

தீபம் யாவும் விழி மூடிப்போன
நடு இரவின் கருப்பில்
உன் நினைவு என்னில்
வெள்ளை ஒளியாய் வெளிச்சம் போட்டு
மனதின் திரையில் உந்தன் பிம்பம்
காட்டி வைக்கிறதே!

மறந்து போன நினைவின் தூண்டல்
உன்னால் தன்னால் நிகழ்கிறதே!
கண்ணால் பேசி... மனதால் பார்த்து
இதயம் நிறையும் காதல் வேண்டும்!

ஆசை வந்து ஆளைத்தாக்கும்
நேரம் யாவும் உன் நினைப்பில்
உருகி வடியும் என் இதயவழியை
கேளடிப்பெண்ணே!

இன்னும் இன்னும் காதல் கூடும்
எந்தன் எண்ணம் யாவும்
உன்னைத்தேடும்!
நீ நடந்து போகும் பாதை யாவும்
பூவாய் வந்து என் இதயம் நின்று
உன்னைத்தாங்கும்!

ஓ! காதல் தீபம் ஏற்றும் மாலை
காற்றும் வந்து மோதிப்பார்க்கும்
தோற்றுபோயி வெட்கம் வந்து
உன் காலடியில் விழுந்து வாழும்!

மயக்குதே வானம்
மயங்குறேன் நானும்
தயக்கமே தொல்லையே - உன்னிடம் எல்லைகள் தாண்டியே
வருகுதே நினைவு யாவும்!

நீலவானம் நீந்திப்போகும்
நிலவும் கூட உன்னைக்கண்டால்
காதல் செய்ய ஏங்கிச்சாவும்!
நான் மட்டும் விதிவிலக்கா!??
உன் மீது காதல் வைத்தேவிட்டேன்!
இதோ. .இதோ. என் காதல் வரிகள்!

#இளையபாரதி

முன்னேதும் இல்லாத பெரும்காதல் - கவிதை

முன்னேதும் இல்லாத பெரும்காதல் உன்மீது இப்போது தோன்றுதே!
எப்போதும் இல்லாத பேராசை
புதிதாக என்னை சூழுதே!

நீயின்றி நானில்லை...
நானின்றி நீயில்லை...
என்றாகும் நாள் தேடி
என் நெஞ்சம் ஓடுதே!

அன்பாலே நாம் பேசி
ஒன்றான உயிராக
நாம் மாறும் காலங்கள்
கண் முன்னே தோன்றுதே!
வாயேன்...என் வாயாடி!

#இளையபாரதி

Corporate companyக்கு காலு அமுக்குறான்! கவிதை

Corporate companyக்கு
காலு அமுக்குறான்!
Government அ commision கடையா மாத்தி வைக்கிறான்!!

நாடுநாடா சுத்திப்புட்டு
போஸ் கொடுக்கிறான்!
அப்போ...அப்போ...rest எடுக்க
Return ஆகுறான்!

யாரு..யாரு...!?னு பேரக்கேட்டா
என்ன சொல்லுவேன்!??
Goback trendingல
பாக்க சொல்லுவேன்!?

டெல்லியில விவசாயி
அழுது பொழம்புனான்!
அப்போயெல்லாம் பாக்காம
கதற வச்சுட்டான்!

இப்போ வந்து 6000 தரப்பாக்குறான்!?
அதச்சொல்லி ஓட்டுக்கேட்க
மேடை ஏறுறான்!??
ஏழைத்தாயி மகனுன்னு
கண்ணீர் வடிக்கிறான்!???

"ஹமாரே.. தேஸ்க்கே"னு
கைய விரிக்கிறான்!??
Gunஅ வச்சு மக்களையே
சுட்டுத்தள்ளுறான்!??

"கழகமில்லா தமிழகம்"னு
கூவித்திறிஞ்சவன் இப்போ
5 சீட்டு வாங்கித்தொலைக்க
Queue இல் நிக்கிறான்!

எப்படியும்...ஏமாத்த கிளம்பிவருவான்!
" தேசபக்தி" என்று சொல்லி
ஓட்டுக்கேட்பான்!??
அப்பக்கூட ஏமாந்திராதே தமிழினமே!
ஒருத்தனையும் ஜெயிக்கவிடாதே
தமிழினமே!???

#இளையபாரதி

வெட்கமே நீ விலகிப்போகாதே! கவிதை

வெட்கமே நீ விலகிப்போகாதே!
பக்கமாய் ஒரு நாணம் சேர்க்காதே!
இத்தனை நாட்களாய்
எங்கு நீ
இருந்து தொலைந்தாயோ!??
இன்றுதான் இதயம் சேர்கிறாய்!

ஆகா...
அண்டார்டிகா பனிமழையாய்
என்னுள் பெய்கிறாய்!
பெண் Heart-இலே
என்னை விதைக்கிறாய்!

இது புது அனுபவம்!
வாழ்வெங்கும் பெரும்தவம்
வரமாய் வந்தவள் நீயா!
மனதிலே ஒளி ஏற்றிடும்
அன்பு தீயா!!?

அருகில் வந்து...
எதிரில் நின்று...
கண்கள் அணைக்கிறாய்!
ஓ!
அந்த விழிகள் என்னை விழுங்குதடி!
இந்த நொடிகள் நெஞ்சம் பறக்குதடி!

நீயே!
உயிரோவியம்!
காதல் ஆயிரம்
கண்டு கொண்டேன்
தூரிகையின் பாதத்தடத்தில்!

என்னவளே!
என்னுயிராய் இனி நீதான்
வாழ்வளிப்பாய்!
இதயம் எங்கும்
குதூகளிப்பாய்!

கேள்...!
என் காதல் மொழிகள்...
கேள்...!
உன் அழகின் பெருமை பேசும்
அவை அற்புதவரிகள்!

#I_Am_Back

என் இதயத்தின் ஓசை கவிதை

என் இதயத்தின் ஓசை
நீ பேசும் பாசை அது
எப்போதும் இனிதாகும்
உணர்வாலே உருவாகும்
ஒரு காதல் வரமாகும்!

வரும் போகும் நிமிடங்கள்
உன் நினைவாலே புதிதாகும்!
பயணங்கள் தொடர்ந்தாலும்
பாதைகள் கரைந்தாலும்
உன் கரம் கோர்த்து இருந்தாலே
காலங்கள் வரமாகும்!

அழகான மொழியாவும்
உன் பேச்சு என்றாகும்!
பிறக்கின்ற பூவெல்லாம்
உனக்கே என்றாகும்!

அழகியே...நாம் பழகியே
பார்க்கின்ற தருணங்கள்
மனமெங்க்கும் மகிழ்கொட்டும்!

ஓட்டுப்போடுவோம் - கவிதை

வீட்டுக்குள்ள திருடன் வந்தா என்ன செய்வோம் நாம!??
அஞ்சு பத்து வாங்கிக்கிட்டு உள்ளவிடுவோமா... !??
இல்லை...
ஊரைக்கூட்டி அடிச்சு நொறுக்கி
ஓட விடுவோமா!???

சொல்லுங்க...சொல்லுங்க மக்கா...
நீங்க சொல்லுங்க மக்கா...
கால்ல விழுந்து சேவை செய்யும்
நல்லவனா இவிங்க..!?
காசு கொடுத்து பதவி வாங்கும்
கேடிகதான் இவிங்க!

ஓடி...ஓடி..உழைப்போம்முன்னும்
உங்க வீட்டுப்பிள்ளையின்னும்
சொல்லிடுவான் பாரு!
ஜெயிச்சபின்னே கேட்டுடுவான்
யாரு!?? ஆமா நீ யாரு!!

கண்ணுமுன்னே கொள்ளையடிப்பான்
மண்ணை அள்ளி கடத்திவைப்பான்
வீட்டை காட்டை பிடுங்கிக்கிட்டு
வளர்ச்சியின்னு வயித்துல அடிப்பான்!

சாராயம் வித்திடுவான்
ரவுடித்தனம் பண்ணிடுவான்
எல்லாம் மோ(ச)டி கூட்டம்
எறங்கி போடுவான் ஆட்டம்!

இது எல்லாம் அடங்கிப்போக
ஒன்னா தொடங்கிடுவோம் நாம!
ஓட்டு என்னும் ஆயுதத்தால்
விரட்டி விரட்டி அடிச்சுடலாம்!
நல்ல ஆள தேர்ந்தெடுத்தா
இவிங்களை ஓட ஓட தொரத்திடலாம்!

#ஓட்டுப்போடுவோம்

அவள்... மூச்சுக்காற்றில் முனகல் சத்தம் - கவிதை

அவள்...
மூச்சுக்காற்றில் முனகல் சத்தம்
பேசும் மொழியில் போதை உச்சம்
கண்கள் சொருகும் நேரம்
கரங்கள் இறுக்கி அணைக்கப்பார்க்கும்
ஓ! இன்ப வீதியில் இன்றும் உலா!
மேக மெத்தையில் மோக நிலா!

முத்தங்கள் தின்கிறேன் நான்...
முரட்டுத்தனம் என்றேதும் இல்லை...
மோதல் மட்டும் உண்டு
ஊடலின் கூடலில்!

கூந்தல் களைந்த நேரம்
மல்லிகை மழையென தூவும்!
வாசம் வந்து தாக்கும்- புது
நேசம் புன்னகை யாகும்!

யாவும் மறந்து யாவும் துறந்து
தாவும் முயல்கள் தாபம் தீர்க்கும்!
இன்னொருமுறை என்றே மனம் கேட்கும்!
இதுவரை இதயம்
உச்சத்தில் துடிக்கும்
இன்பம் இதுவென
மிச்சத்தை கொடுக்கும்!

இரவுகள் கரையும் நேரம்
இன்பங்கள் நிறைந்து ஓடும்!
மீண்டும் முத்தங்கள் மட்டும் பேசும்
மௌனம் வந்து மூச்சின் காற்றாய் வீசும்!
போதும்...போதும்...என்றே தோன்றும்
ஆனபோதும் ஆரம்பம் மீண்டும் ஆகும்!

#என்னது#

இதய கூட்டுல இருந்து வாட்டுற - கவிதை

இதய கூட்டுல இருந்து வாட்டுற
மனச தாக்கியே உசுர கிழிக்கிற
ஏண்டி...
என்ன பாத்துதான்...
கண்ணடிச்சு தான் காதல் ஏத்துன!

நெருப்பு ஓரமா இருக்கும் பூவ..மா
இருட்டு காட்டுல அழையும் ஆளம்மா
ஐசப்போலதான் வந்து சேரம்மா
வெளிச்சப்பூவென ஒளியை காட்டம்மா

அன்பு மொத்தமா அள்ளிக்கொள்ளத்தான்
இன்ப தேனையும் எடுத்து பருகத்தான்
மழையின் சாரலில் நனைந்து ஆடத்தான்
பனியில் இரவிலே நடந்து செல்லத்தான்
துணை நீயடி... இனி துன்பம் ஏதடி
என்றும் நீயேதான் எந்தன் தாய்மாடி!

#அப்படியா

உன் அழகு மொத்தம்... அள்ளித்திங்க - பாடல்

உன் அழகு மொத்தம்... அள்ளித்திங்க
ஆசைப்பட்ட மனசு இங்க
தேடித் திரியுதடி ...
உன்ன...தேடித்திரியுதடி

உன் கண்ணைப்பார்த்தா போதும்
அது காதல் ரொம்ப பேசும்
உன் பார்வை பட்டாப்போதும்
மனம் பூக்கள் வாசம் வீசும்

கொஞ்சிக்கொஞ்சி பேசும்
சில குருவிகள் உன்னைப் பாடும்
தத்தித்தத்தி ஆட
மலை அருவிகள் உன்னை தேடும்

யாரடி...நீ தேவதை
கூறடி நம் காதலை
பாரடி என் நானிலம்...
நீயடி!

உன் அழகு மொத்தம்... அள்ளித்திங்க
ஆசைப்பட்ட மனசு இங்க
தேடித் திரியுதடி ...
உன்ன...தேடித்திரியுதடி

இன்னும் என்ன தூரம்
நீ சென்றால் கூட தேடும்
காதல் கனவுகள் கூடும்
கரங்கள் ஒன்றாய் சேரும்!

சோலையே...
மலர் மாலையே
அதிகாலையே
என் கண்கள் உன்னைப்பார்க்கும்
இந்தப் பொழுதுகள்
இன்பம் சேர்க்கும்!

தொலைவிலே என் பயணங்கள்
அருகிலே உன் நினைவுகள்
அடடடா ஒரு ஆனந்தம்
மனதிலே தோன்றுதே
மகிழ்வெல்லாம் எல்லை மீறுதே!

காதலே நீ காற்றிலே கரைகிறாய்
மனமெல்லாம் நினைவென நிறைகிறாய்!

உன் பாதம் படருதே கவிதை

உன் பாதம் படருதே
என் நெஞ்சம் மலருதே
வாராய் கண்மணியே!
பெண் பூவாய் பூத்தவள்
தேன்கனிகள் காய்த்தவள்!

அன்பே...நீ நிஜமாகிறாய்!
நீண்ட கடலாகிறாய்!
பெய்யும் மழையாகிறாய்!
பொழியும் துளியாகிறாய்
நடந்து நீ சென்றுதான் நதியாகிறாய்!

மீண்டும்...மீண்டும்
பெண்ணின் ஸ்பரிசம்
வேண்டும் என்றே
கேட்கும் மனதில்
மாயங்கள் நீ செய்கிறாய்!

நாணலே... நாணலும்...
நாணிதான் போகுதே...!
விழிகளில் விழுந்த நான்
எழுந்து போக பார்க்கிறேன்!
இருந்து வாழும் வரங்கள் தந்து
என்னை உன்னில் சேர்க்கிறாய்!

யாரடி...பூங்குயில்!??
இது உன் ராகமா!??
நீயும் சொல்வாயமா!!!
என்னை வெல்வாயமா!

காற்றிலே தவழ்கிறேன்...
காதலாய் மகிழ்கிறேன்...
உன் நெஞ்சமா...அது என் தஞ்சமா...!??
ஆஹ..ஹா...ஆனந்தம்
சென்னை மழை போலவே
என்னை வந்து சேருதே...!

#கடினம்
#மீள்

வானத்து மேகங்களே... கவிதை

வானத்து மேகங்களே...
வாழ்த்துக்கள் தூவுங்களே...
வார்த்தைகள் தீருமோ...
வான் நிலா போதுமோ...
அவளிடம் காதலை சொல்லியே
செல்லுதே பனிக்காற்று!

அவள்...
முகமெல்லாம் வெட்கங்கள் படருதே...!
கண்களும் மெல்லமாய் பார்க்குதே...! பருவத்தின் பறவைகள்...
யாரிடம் அனுமதி கேட்டு நிற்கும்...!??

ஓ!
சிறகையே... திறந்துதான்
பறந்து செல்லும்...!
புது உலகையே கடந்துமே
கால்கள் செல்லும்...
காதலின் ஊட்டங்கள்...
அளவிலா நாட்டங்கள்...
அவளது மொழிகளின் மீதிலே!

முதல் முறை பார்க்கிறேன்...
முகிலென்று வியக்கிறேன்...
அகில் போலே...
அவள் வாசம்...
நாசிகள் துளைக்குதே!

நான் எனை மறந்துதான்
அவளிடம் கறைகிறேன்
அனுமதி கேட்காமல்
வெகுமதி கொடுக்கிறாள்!
புன்னகை மொழியிலே
முத்தங்கள் தருகிறாள்!

அவள்...அவள்...
இனி...
என் வாழ்க்கை...!
அது யாவுமே
இனி அவள்...அவள்...மட்டுமே...
மலருதே காதலும்...
மறுமொழி தேவையா!
கண்கள் தான்
பேசிக்கொண்டு விட்டனவே!

23.07.2019
#மீண்டும்... #மீண்டும்
#எழுகிறேன்

தீரா காதல் கொள்கிறேன்! கவிதை

தீரா காதல் கொள்கிறேன்!
என்தேவதை நீ மட்டும் என்கிறேன்!
ஆசை முழுவதும் சொல்கிறேன்-என் ஆயுள்முழுவதும் வா!வா! அழைக்கிறேன்!

யாரடி பெண்ணே நீ யாரோ!?
நீ இருக்கும் நிமிடங்கள்
நான் வேரோ!??
பொழியும் பனியிலே
தவழும் மழைத்துளி
உன் உதடுகள் உரசிட - உஷ்ணம்
நான் இங்கே உணர்கிறேன்!

அடைமழை நேரத்தில்
உன்புடவை சாரத்தில்
இருந்தே ரசிக்கிறேன்
இயற்கையின் கருணையை!

அடடா...ஆடைக்குள்
மழைத்துளி விழுந்ததே!?
முத்தாய் மேனியில்
முத்தங்கள் கொடுக்குதே!

வெட்கப்பறவைகள்...
விலகிட பார்க்குதே...
சொக்கும் விழிகளில்
காதலும் முளைக்குதே!

கண்கள் பார்த்து உன்னை கவிதை

கண்கள் பார்த்து உன்னை
எந்தன் காதல் சொல்ல வேண்டும்!
காலம் யாவும் கரங்கள்
கோர்த்து நடந்திட வேண்டும்!

கால்கள் நனையும் வரையில்
கடல் நுரைகள் மோதிட வேண்டும்!
காற்றும் களையும் வரையில்
மடி கிடந்து சிரித்திட வேண்டும்!

பகலும் கரையும் நேரம்
பசும் புல்வெளி கிடந்திட வேண்டும்!
இரவுகள் இருக்கும் வரையும்
பேசி மகிழ்ந்திட வேண்டும்!

இளமை தீரும் வரையும்
இறுக்கம் இருந்திட வேண்டும்!
இன்னும் நீளும் நேரம்
இன்ப நினைவுகள் சேர்ந்திட வேண்டும்!

முதுமை வந்த பின்னும்
முத்தங்கள் முளைத்திட வேண்டும்!
தோல்கள் சுருங்கிய போதும்
இதயம் இணைந்திட வேண்டும்!

நடுக்கம் வந்த பின்னும்
உன்னோடு நடை பயின்றிட வேண்டும்!
பொக்கை விழுந்த போதும்
நாம் காதல் பேசிட வேண்டும்!

கண்கள் மூடும் நேரம்
நாம் இல்லாது போகிட வேண்டும்!
இந்த வாழ்வே
நீயும் நானும் என்றாகிட வேண்டும்!

#கனவு

ஒருவார்த்தை சொன்னால் போதும் கவிதை

ஒருவார்த்தை சொன்னால் போதும்
உயிர் வேண்டும்...என்றால் கூட
உனக்காக நான் தருவேனே!
ஒரு பார்வை பார்த்தால் போதும்
பெரும்காதல் பகிர்ந்துடுவேனே!

பெண்ணே...நீ!
எந்நாளும்... என் வாழ்வில்...
மகிழ்பூக்கள் தூவும் மாமழை!
மனதோடு சிலிர்க்கும் பேரலை!

ஒரு விரலில் உலகத்தை தூக்கி
உனக்கென நான் தருவேன்!
உன் அன்பில் கறைந்துறுகி
உருவங்கள் நான் தொலைப்பேனே!

என்னோடு...நீ!
உன்னோடு நான்!
நம்மோடு நாம்!
ஆகாகா...ஆனந்தபூ மழை!

#இளையபாரதி

வெள்ளந்தி சிரிப்பா...? கவிதை

வெள்ளந்தி சிரிப்பா...?
வெளையாட்டு முறைப்பா...?
தாலாட்டும் பேச்சா...?
தலைகோதும் விரலா...?
எதை வைத்து எனை
எட்டிப்பிடிக்கிறாய்
விடாது நெருப்பாய்!

ஓ...இன்னும் இருக்கிறதோ ரகசியம்!?
இந்த உலகத்து அதிசயம் நீயான பின்பு!
முன்போல் முத்தங்கள் கேட்காமல்
இல்லை நீ இப்போதெல்லாம்!

அப்போதெல்லாம்...
அசட்டு சிரிப்பை
உதட்டு தேனில் குழைத்து
சகட்டு மேனியாய்
ஊட்டிவிடுகிறாய் முத்தகளின் வழி!
விழி பிதுங்குகிறேன் நான்!
வியர்வை மழை பொழிவதினால்!

#கவிஞனோ_நான்!???
#உன்_காதல்_சொல்லும்_போதெல்லாம்!

#இளையபாரதி

ஒரு நெடும்பயணம்...கவிதை

ஒரு நெடும்பயணம்...
நீ வா போகலாம்...
ஒரு மயில் நடனம்...
நீ வா ஆடலாம்...

ஒரு கடும் சண்டை...
நீ வா போடலாம்...
ஒரு காதல் முத்தம்...
நீ வா பகிரலாம்...

ஒரு பெரும் தேடல்....
எங்கே நீ என...
என் பயணத்தின்
பக்கத்து இருக்கை
உனக்கென காத்திருக்கு!

மண் மோதும் என் நிழலும்
உன் நிழலை எதிர்பார்த்திருக்கு...
என் கண்ணில் படும்
உன் பிம்பம் எங்கே
உளவுதடி எம் பெண்ணே!

ஓ!
வாழ்க்கையின் வழிப்பயணம்
நீ வந்து கொண்டு இருக்கிறாயா!??
வா.. வா...
மகிழ்மனம்
மலர்கொத்துகளோடு
காத்திருக்கு உனக்கென
கரங்கள் விரித்து!

#காதலுடன்_இளையபாரதி

இத்தனை பேரழகா...கவிதை

இத்தனை பேரழகா...
ஓ! பிறந்தவள் நீதானே...!
அத்தனை அழகினையும்
நீ ஆடையில் மறைத்தாயே!

பெருமழையாய் பேரன்பை
பொழிபவள் நீதானே!
குடையின்றி நான் நனைய
கட்டளை இட்டாயே!

ஒரு துளியில் மூழ்கடித்து
மோகம் என்றாயே!
கால் நனைக்கும்
கடல்அலையாய்
உயிர் நனைக்கும்
காதல் தந்தாயே!

ஆளில்லா நள்ளிரவில்
மஞ்சள்... ஒளிவெள்ளம்
பாயும் தெருவில்
போதை கண்களால் கிறங்கடித்து
எனை பித்தன் என்கிறாய்!

பாதையெங்கும் கரம்கோர்த்து
உடன் நடந்திட கேட்கிறாய்!
பஜக்கென்று முத்தம் தந்து
வெகுளியாய் சிரிக்கிறாய்!
இப்படியாய் எனை மயக்கி
மனம் எங்கும் மகிழென மலர்கிறாய்!

#இளையபாரதி

அதிகாலை நேரம்... கவிதை

அதிகாலை நேரம்...
இரவெல்லாம் பெய்த
பெருமழையின் ஈரம்...
ஊசிக்காற்றாய் நாசி துளைக்க
மொட்டவிழ்த்த பூ ஒன்று
வாசம்வீசி உனை தேடிப்பார்க்கிறது!

நிலவின் இரவு ஒளியை
இரவல் வாங்கிய
பதுமையென...
நீ...
வெண்முகத்தில்
புன்சிரிப்பை விரவச்செய்து
நடந்து வருகிறாய்
பூக்கடை சாலையில்!

ஆளில்லா அறவம் கண்டு
உன் வாசம் யாவையும்
களவு கொள்கின்றன
பூக்கடை மாலைகள்!

ஓ!
இப்படித்தான் மணம் வீசுகின்றனவோ
இறைவன் திருவடி
மாலைகள் யாவும்!

#ரகசியம்_கண்டேன்!

நான் தொலைந்து போகிறேன்! - கவிதை

நான் தொலைந்து போகிறேன்
நீ மறைந்து பார்க்கிறாய்
வான் நிறைந்து மேகமும்..
மழையென உடைந்து வீழுதே!

உடைகள் மாற்றும் தேகமாய்
பொழுதும் மாறிப்போகுதே!
விடிந்த காலை...
நடந்து சென்று மாலையாய்
மஞ்சள் ஆடை சூடுதே!

வெள்ளி முளைத்த வானமும்
நிலவை பூத்து சிரிக்குதே!
இரவு வந்து இங்குமே
இனிமை தேனை பருகுதே!

உறவுப்பெண்ணாய் நீயும்
உரிமையாக இருந்து தான்
இதயவானில் பறவையாய்
இன்பம் கொண்டு பறக்கிறாய்!

ஓ...! நெடுஞ்சாலை- கவிதை

ஓ...!
நெடுஞ்சாலை...
நீ... என் பின்னே...!
தோளோடு தோள்சாய்ந்து...
நாம் போகிறோம்!

ஓ...!
எதிர் காற்று...!
உன்னைப்பார்த்து...
எனைத்தாண்டி...
உனைத்தீண்ட...
ஒடியாருதே!

ஓ...!
சூடான பேச்சு...
காதோரம் நீ பேச...
உன்மூச்சு...
பலமாக
எனைத்தாக்குதே!

ஓ...!
இரு சக்கரவண்டி...!
இணைந்தே ஒரு பயணம்...!
தோளோடு மார் சாய
பள்ளங்கள்...
பயனாகுதே!

ஓ...!
இது நெடுந்தூரம்...
புதுப்புதுக் காட்சி...!
மரமெல்லாம்...
பின்னோடுதே!

ஓ...!
சரசரக்காத்து...
தொடத்தொடப்பார்த்து...
சங்கீத குயில் பாடல்
நமை சேருதே!

ஓ...!
பெண்ணே...பெண்ணே...!
நீ... என்...பின்னே!
இறுக்கி அணைத்து...
இருந்தால் போதும்
வாழ்வின்...வெகுஎல்லை...
நாம் போகலாம்!

#ஒரு_Bike_Ride
#Dream_Girl
#காலை_நேரத்து_கனவு
#மீண்டும்_இளையபாரதி

நீ மழையாய் பொழிந்தால் - கவிதை

நீ மழையாய் பொழிந்தால்
நான் மரமாய் நனைவேன்!
நீ புல்லாய் முளைத்தால்
நான் பனியாய் அமர்வேன்!

விழுதென விழுந்துமே
உன்னை நான் தாங்குவேன்
அகிலென இருந்தே தான்
உன் வாசமாய் வாழுவேன்!

உன் சிரிப்பு போதும்
என் ஜென்மங்கள் நீளும்!
உன் கண்கள் போதும்
என் பார்வை பரவும்!

முத்தங்கள் போதுமென்று
பொய்களை நான் சொல்வேன்
நித்தமும் உணர்ந்து நீயும்
மொத்தமாய் தான் தருவாய்!

அன்னையை போலென்னை
அணைக்கும் பேரன்பு நீ!
குழந்தையாய் உனைத்தாங்கும்
மற்றோரு தகப்பன் நான்!

#அவள்

ஒரு பூவில் பலவாசம் கண்டேன் - கவிதை

ஒரு பூவில் பலவாசம் கண்டேன்
உன்மடியில் தலைசாய
நான் ஆசை கொண்டேன்
யாதொரு பொழுதுமே
உன் நினைவு நெஞ்சில்!
வேறொரு மனிதனாய்
நான் உணர்ந்து கொண்டேன்!

இனிதொரு தருணம்
நீ இருந்தால் மட்டும்!
நீ இல்லா நிமிடங்கள் தனிமையில்
நான் மாட்டிக்கொண்டேன்!

தலைக்கவசம் அணிந்தே
சாலையில் சென்றேன்
உன் நினைவு வர
ஓரமாய் நின்றேன்!

உன் முகம் நினைத்து
நான் சிரித்து சென்றேன்...
போலீசுகாரனும் எனை
பித்தனாய் பார்த்தான்!

புது புது கனா...
இப்போது என்னில்...
நீ அழைப்பில்
வந்தாய் செல்போன் எண்ணில்...
வேறென்ன வேண்டும்...
உன் பேச்சு போதும்...
பொழுதென்ன ஆச்சென்ற
அச்சங்கள் தீரும்!

உறவே... நீ எங்கே? கவிதை

உறவே... நீ எங்கே?
நானோ தனி இங்கே!
யாரோ..உன் அருகில்...
நெஞ்சம் பூ போலே மென்மையாய்
இன்னும் நீ வேண்டும் உண்மையாய்!

இதோ சிறுபறவை பறக்கின்றது...
அது நீ என்றே...
மனம் நினைக்கின்றது!

விரலிடுக்கில் வார்த்தைகள்
வந்து வந்து முளைக்குது
அவை...
உன்னை மட்டும்
கவிதையாய்...
செல்போனில் வடிக்குது!

உயிரின் ஆழம் இறங்கியே - கவிதை

உயிரின் ஆழம் இறங்கியே
உனது மூச்சும் பரவுதே!
பனி வீசும் குளிரென
படபடக்க வைக்குதே!

சிறகு விரித்த பறவைகள்
சிந்தை யாவும் பறப்பதை
உணர்ந்து கொண்ட நொடியிலே
உந்தன் நினைவு வந்ததே!

மகிழம் பூவு வாசமாய்
மடியில் சேரும் குழந்தையாய்
சேலைத்தலைப்பு இருக்கவே
வேலை மறந்து திரிகிறேன்!

கொலுசின் சினுங்கள் ஒலியிலே
இசையின் மழலை பிறப்பதை
இதயம் உணர்ந்து கொண்டதோ
ஒரு துளி நதியென
மகிழின் கண்ணீர் வழியுதே!

பிகில் ஒரு பாடல்

என்னிடம்...#பிகில் படத்துக்கு
ஒரு song எழுத சொன்னா...
அது இப்படி தான் இருக்கும்...

வெறித்தனமா...
வேட்டையாடத்தான்...
வேங்கையன் வந்துருக்கான்!

அந்த காட்டுக்குள்ள
இந்த நாட்டுக்குள்ள
குள்ளநரி கூடிப்போச்சு...
அது குரலிவித்தை
காட்டிக்காட்டி...போடும்
ஆட்டமும் கூடிடுச்சு...

எடுடா...எடுடா...
வேலுக்கம்பை..
அடிச்சு...
உடைடா...உடைடா...
முதுகெலும்பை...

இனிமேலுமே...பொறுமை எல்லாம்
வேலைக்கு ஆகாதுங்க...
எதித்து நின்னு சண்டை செஞ்சு
வேட்டை ஆடிடனும்...
அவன்...வெவகாரத்தை...
அந்த அதிகாரத்தை
அடிச்சு உடைச்சிடனும்...

இனிமே..இனிமே...
போடும் ஆட்டம்...
பிகில...ஊதும்....நம்ம கூட்டம்...

எதிரி..சிதறி..ஓடனுமே...
அடிச்சு ஆட்டம் போடணுமே..
ஊருக்கெல்லாம்...
நல்லபிள்ளை...
இவன் தான்..இவன் தான்... பாத்துக்கோங்க...
சொல்லுறது சரியா இருந்தா...
ஒன்னா வந்து கூடிக்கோங்க....

பிகிலு...பிகிலு...சத்தம் போட்டா...
அரங்கம்...அதிரும் அதிருவேட்டா...

வெ..றி..த்தனமா...வேட்டைக்காரன்...
கெளம்பி...கெளம்பி...வந்துட்டான்டா...
எதிர வந்து நின்னுடாத...
உசுர வீணா விட்டுடாத...

பிகிலு...பிகிலு...
சத்தம்...திகிலு.. திகிலு...

#இளையபாரதி

மனசுக்குள் ஆயிரம் பூக்களே- கவிதை

மனசுக்குள் ஆயிரம் பூக்களே
உன்பேர் சொல்லி தினமும் பூக்குதே
கை மடிப்புக்குள்
மறைத்திட்ட நினைவுகள்
கடல் அலையென திமிறி கிளம்புதே

ஒருவித உணர்வுகள் உயிரிலே
உனை மட்டும் உணர்ந்து கொள்ளுதே
அதைவிட பெரிதென ஏதுமே
எனக்கெதும் இருந்திடவில்லையே...

அரைநொடி பிரிவின் தவிப்பிலே
பனியென உறைந்து போகிறேன்
புதிதொரு உலகத்தின் வானத்தை
உன் கண்களால் திறந்து பார்க்கிறேன்

இனிமைகள் உலவிடும் இதயத்தில்
மேகமாய் நானே படர்கிறேன்
இதழது பேசும் மொழியிலே
நதியென தேன்சுவை கிளம்புதே

பெண்மையின் சாரலில் நனைகிற
மீசையின் ஆசைகள் புனிதமே
இறுக்கியும் அணைக்கும் நேரத்தில்
இறகுகள் உரசிடும் மென்மைதான்

ஆண்மனம் நீட்டிய கரங்களில்
பெண்மையும் சுகமாய் உளவுதே
இதுவரை யாவும் காதலே
இனியும் அதுதான் காதலே!

#நள்ளிரவு
#புதுநினைவு
#ஒரு_கவிதை

#இளையபாரதி

சட்டுன்னு...சட்டுன்னு சட்டுன்னு பாடல்

ஆண்:

சட்டுன்னு...சட்டுன்னு சட்டுன்னு ஒரு பார்வை பாத்துட்டு போகுறா...
பட்டுன்னு..பட்டுன்னு. பட்டுன்னு.. என்
மனசில பச்சை குத்துறா...

ஒரு பூக்கடை நடந்து போகுதா
ஒரு தேன்மழை திகட்ட பாயுதா
ஒன்னும் புரியல...
உண்மை வெளங்களை
அசந்து நிக்கிறேன் ஆம்பளை..

பெண்:

மனசுல மல்லி பூக்குது
நீ வந்ததா வாசம் வீசுது
பெண்மையும் கொஞ்சம் சிதறுது
போதையாய் உன்னை தேடுது

என்னவோ நீயும் பண்ணுற
என்பேர் சொல்லி கொஞ்சம் குழப்புற
மனசெல்லாம் ஒரு நடுக்கந்தான்
சுகமெல்லாம் அதில் இருக்கத்தான்
இனியுமே என்ன செய்யனும்
சொல்லடா என் தேவதா...

ஆண்:

உன் கண்ணுதான்...ஆயுதம்
என் மனசெல்லாம் இப்ப போர்க்களம்
ஒரு சண்டை போடலாம்
அதில் வென்று பார்க்கலாம்
இன்றும் நாளையும்
இனி வாழ்ந்து பார்க்கலாம்!

ஒரு மகன்...தாய்க்கு எழுதுவது!

நீயின்றி நானிங்கே ஏதம்மா
உன் நினைவின்றி என் நெஞ்சம் வாழுமா
அன்பின்றி போகும் உயிர்கள் யாவும் உயிரின்றி வாழும் உருவம் தானே
தாயன்பை பெற்ற பிள்ளைகள் யாவும்
தவமின்றி அடையும்
வரம்தான் வாழ்க்கை!

உன் அன்பில் உலவும்
ஓராயிரம் கோடி...அர்த்தங்கள் யாவும்
தாய்மையின் பெருமை பேசுமே..!
என் போன்ற பிள்ளை
உன் முன்னே நிற்க
இன்னமும் நெஞ்சம் ஏங்குமே!

பசியென்ற ஒன்று...
இல்லாத போதும்
தாய்ப்பாலை தந்த தெய்வம் நீ...!

எனைக்காக்க...
இரவென்றும் பகலென்றும்-நீ
உறங்காத பொழுதுகள்
இன்னும் இங்கே  நீளுதே!

அந்த நிலையிங்கு
இனியேதும் போதுமே...!
என்மடி உனையே
இனி எப்போதும் தாங்குமே!

உன் தந்தை போலே...
உன் அண்ணன் போலே..
உன்பிள்ளை...
உனைநான் தாங்குவேன்...
அது ஒன்றே போதும்
எப்போதும் இன்பத்தில் இயங்குவேன்...!

உன்பசி தீர்த்து...
என் உணவுகள் தீரட்டும்...
உன் அன்பில்...
எந்தன் வாழ்விங்கே...
வாழட்டும்!

#இளையபாரதி

என்னங்கடா இங்க சட்டம்

என்னங்கடா இங்க சட்டம்- நீங்க
கொள்ளையடிக்க போடும் திட்டம்
குண்டும் குழியா ரோடவச்சு
Helmet-அ கேட்டு டார்ச்சர் பண்ணுற
போலீசு குறுக்க லத்திய விட்டு
கர்ப்பிணியை கூட
காவு வாங்குறான்
அதுக்கும்...
விலையை ஏத்தி காசு வாங்குறான்!

தெருவிளக்கு எறியலைன்னு...
சாக்கடை சரியா போகலைன்னு...
ரோட்டுல தண்ணி நிக்குதுன்னு
சாமானியன் கத்தி சொன்னா கேக்கலை...!
கரண்ட்டு கம்பம் விழுந்து செத்தான்
என்னான்னு கூட பாக்கலை!

பஸ்சுல பிதுங்கி போகுது பாரு
Train ல தொங்கி நோவுது கூட்டம்
இப்போ...எங்க போச்சு உங்க சட்டம்
மழை பெஞ்ச தண்ணியில்
ரோடும் போச்சு
நாடும் குட்டி சுவரு ஆச்சு!

முதுமைக்காதல்

காதலே... காதலே...
நரைவந்து நாமும்...
கிழம் எய்தபோதும்
கைத்தடி வைத்து நாமும்...
நடைசெல்லும் போதும்...
கண்கள் மங்கி...
பார்வை இருண்ட போதும்
உன் பக்கமே நானிருப்பேன்!

பெற்ற பிள்ளைகள்...
நம்மை பேனாதுபோயின்
பேரக்குழந்தைகள்...
நம்மின் அண்டாதுபோயின்
அன்பாலே உன்னிருப்பேன் நான்...!

செவியாவும் தூங்கி செவிடானபோதும்
பழமைகள் பேசியே...
நம் பொழுதுகள் கழியும்!

உன் மௌனம் அறிந்தே...
என்மனம்...
ஏதென்று கேட்கும்...!
உன் மேனி நடுங்க
என் உயிர் காயும்...!

பெருங்கூட்டத்தில் நின்றும்
கண்கள் உன்னையே தேடும்...
பெரும்பந்தி என்றாலும்
என் குழந்தை நீ என்றே...
கரம் அன்னத்தை நீட்டும்!

வரும் வெட்கத்தில்...
பொக்கை...
சிரித்தேதான் மகிழும்!

#முதுமையிலும்...
#இளமை_தீரா_காதலுடன்
#உன்னோடு_நானிருப்பேன்

#இளையபாரதி