Translate

Sunday, 3 February 2013


அப்பனும் ஆத்தாளும்!


கண்டாங்கியில் ,
களிமண் ஒட்டிய புடவையில்
வெட்கத்தோடு உறவாடியவள்
வரப்புக்கரையோரம் வந்துபோகும்
அழுக்கு வேட்டி “அழகனை
கண்ணான கணவனாய்
பொன்னான புருசனாய்
நல்லறம் கூட்டி
தொட்டில் ஆட்டினாள் –என்னை!
மண்கலையம் பிரியில் ஊஞ்சல் ஆட
விரல் கோர்த்து அள்ளிய பருக்கையில்
துள்ளிய மகிழ்ச்சி ,
பெற்றெடுத்த பிள்ளைக்கு ஒருவாயும்
கண்கள் பார்த்து கைகள் நீட்டும்
கணவனின் கைகளில் ஒருகையும் கொடுத்து,
மிஞ்சிய நீரை மெதுவாய் பருகி
ஏரு ஓட்டும் கணவனோடு
பிள்ளைப்பாசம் காட்டி
என்னை வளர்த்தவளே
“அப்பனும் ஆத்தாளும்!

No comments:

Post a Comment