Translate

Thursday, 14 February 2013

எனக்குள் ஒரு பாடல்!!!!


கொடிமுல்லைத் தீவே 
கொடைக்கானல் பூவே 
அலைபாயும் காற்றே
அடிநெஞ்சில் அடி வைக்க 
வைக்க வா அழகே !

கடல் காற்று வீசும்
மணல் வீட்டுத் தோட்டம் 
மணக்கின்ற பூவே,
வா அருகே !

அணைக்கின்ற தூரம் 
இருக்கின்ற நீயும் 
சுவைக்கின்ற தேனை 
நெஞ்சில் ஊற வைத்தாய் 
உன் நினைவால்-என்னை 
உருக வைத்தாய் !

கண்களால் உன் கண்களால் 
என்னை நீயும் பருகி வைத்தாய் !
எச்சம் இன்றி மிச்சம் இன்றி 
எச்சில் தேனை சுவைக்க வைத்தாய் !

சுடும் பனியே 
குளிர் தீயே 
வளர்க்கின்றாயே !
என்னுள் வளர்கின்றாயே 
ஒரு காதல் வளர்க்கின்றாயே !!!
பூ தூவும் உன் காதல் 
என்னுள் சுகமாய் 
சுகமாய் இருக்குதடி கண்ணே !

No comments:

Post a Comment