பணம் என்ற சொல்
தன்னோடு சேர்த்துக்கொண்டு
பிறந்ததுவோ –ஊழல்
தகுதியின் அடையாளம் “செல்வம் என்பதனாலோ
சேர்த்துக்கொள்வதில் –பணம்
சேர்த்துக்கொள்வதில் மனம்
திளைக்கிறது?!!!
உயிர் காக்கும் மருந்தில்
விசமாய் –ஊழல்!
பசி போக்கும் உணவில்
பசியோடு ஊழல்!
ஆயிரம் கோடி பணம்-ஆயிரம்
கோடி
அரசன் அள்ளிப்போவதுவே ஊழல்_என்றெண்ணி
அரை ரூபாய் விஷயங்களில்
மறைக்கின்றது மனம்
பணம் சேர்க்கும் ஆசையால் !
ஆனால் எவரும் உணர்வதில்லையோ?
ஆடை இன்றி பிறந்தவன்
எடுத்துக்கொண்டு போவது
“நற்பெயரன்றி ஏதுமில்லை!
ஊழல் ஒழிக்கப்படல்
வேண்டும்-அனைவரிடத்திலும்!
No comments:
Post a Comment