Translate

Wednesday, 6 February 2013


விஸ்வரூபம் - கமல்!

நெருப்புக்குள் கிடந்து நீந்தி வந்தாய்!
நீருக்குள் மூழ்கடிக்க முயன்றோரெல்லாம்
மூக்கில் விரல் வைக்க
வெளிவருவாய் தமிழா!!!

கருத்தின் கழுத்துக்கு கயிறு வந்தபோது
காற்றாய் புயலாய் போராடினாய்!

வீரத்தின் உச்சம் அகிம்சை என்று சொன்னவா!
பொறுமையின் உச்சம் தாண்டியும்
நீ காத்த பொறுமையால்
எம் வெறுமை(வெறுப்பை) பெற்றுக்கொண்டார்
விலங்கினும் கேடுகெட்ட மனிதர்!

கண்கலங்கி நீ நின்றபோதும்
உயிர் வெறுத்து ஊர் செல்வேன் என்ற போதும்
உண்மையில் தமிழன்
உரைந்தே போய்விட்டான்!

அன்றைய சினிமாவின் கதாநாயகி!
இன்றைய சினிமாவிற்கு "சொர்ணா அக்கா"
ஆடிய அரசியல் ஆட்டத்தால்
நாடிய தமிழனெல்லாம்
நரம்புகள் புடைக்க காத்திருந்தான்
உன் வார்த்தை எதிர் பார்த்திருந்தான்- ஆனால்

"அன்பே சிவம் " தந்த "நாயகனே"
"உன்னைப்போல் ஒருவனால்" மட்டுமே
"தசாவதாரம்" சொன்ன "நீதி" காத்து
எம் "சிவப்பு ரோஜாக்கலெல்லாம்"
"விஸ்வரூபம் " காட்டாது
"குருதிப்புனல் " கொதித்தும்
"குணாவாய்" இருந்து போனான் -"உன் ரசிகன்"

உண்மையில் "இந்தியானாய்"
"பஞ்ச தந்திரத்தோடு "
"மும்பை X பிரஸ் "சென்ற
"இளமை ஊஞ்சலாடும்" "சிங்காரவேலா"
தடைகளை தாண்டி சரித்திரம் படைத்த
"சகலகலா வல்ல " "ஆளவந்தானே "
 வாழ்த்துகிறேன் "விஸ்வரூபம்"
"வசூல் ராஜாவாய்" வெற்றிபெற!!!

No comments:

Post a Comment