Translate

Monday, 18 February 2013

உழவனின் உறவு!

உழவனின் உறவு!


மழை வரும் காலம்- தண்ணீர்
விரையம் செய்ய
மனதுக்குள் ஈரம் வற்றிவிடும்!

நெல்லடித்த வயல்
நீரற்றுப்போகுமாயின் – உலகு
சொல்லற்றுப்போய்விடுமே!!

ஏர் பிடித்த கைகள்
உயிர் குடிக்கும் மருந்தால்
உலகை விட்டுப்போகுமாயின்
உயிரினத்தில் உறவென்று யாரிருப்பார் !?!
உழவின் உறவென்று யாரிருப்பார்!
?!

நன்னீர் அடைத்து வைத்து எம்
கண்ணீர் திறந்துவிடும்
கயவர் நாட்டில்
செந்நீர் சிந்தி நீ போனால்
மண்”நீர்” வற்றிவிடும் – தமிழா
மண் “நீர் வற்றிவிடும்!

நீ வேண்டும்
நிலமும் நீரும் நித்திரை கொள்ளாது
நெடுநாள் மண்ணில் வளம் தர
நீ வேண்டும் தமிழா
நீ வேண்டும்!!!!

உம்மோடு இருப்போம் யாம் துணையாய்
எம்மோடு நீ வேண்டும் உயிர் உறவாய்!!!!
அன்போடு அடியேனின் வேண்டுகோள் உமக்கு!!!


No comments:

Post a Comment