உன்னாலே வாழும் நெஞ்சம் !
உயிரோடு உன்னை கொஞ்சும்!
மனம் உன்னில் அடையும் தஞ்சம்
அன்புக்கு இங்கு இல்லை பஞ்சம்!!!
இடம் உண்டு இங்கு கொஞ்சம்
உனை வைக்க அதுவும் கெஞ்சும்!
இதழ் பட்டாலே உடல் சுட்டாலே
உயிரே தெரிக்குது உன்னாலே!
அனல் காற்றாலே அலை அடித்தாயே
அணைத்து என்னை மறைப்பாயே!
நீ தீண்டினால்
உயிர் தூண்டிலால்
நான் மாட்டினால்
மனசில் இருப்பது காதலே!
மனங்கள் செய்வது ஊடலே!
சொர்க்கம் காணுது உடலே!
ஆனந்தம் பொங்குது கடலே!
இனி உன் மடலே
என் சுவை படலே !
உறைந்தே போய்விடும் உடலே!
இது காதல் பறவை வானம்
புதுப்புது மழையைத்தூவும்!
நனைவோமே ! நாம் நனைவோமே!
ஆனந்த மழைதனில் நனைவோமே!
No comments:
Post a Comment