திருமணம்!!!
ஆணும்
பெண்ணும் ஆசை கொண்டு
அதன்
பெயர் காதல் என்று
சுற்றித்திரியும்
பறவைகளாய்
எல்லைகள்
உடைத்து
காற்றலைகளால்
செல்போன் வழி தூது!
மனதோடு
மனம் சேர்வதாய்ச்
சொல்லி
மறந்திட்ட
நினைவுகள் ஏராளம்!
மனிதனாய்
சமூகத்தில்
உயர்வென்றும்
தாழ்வென்றும்
மானம்
என்னும் பிரிவுகளில்
உயிரை
வைத்துஉறவுகளோடு வாழும் போது
வழிப்போக்கில்
வருவதே வழித்துணை!
அதையே
வாழ்க்கைத்துணை என்றாக்கி
பெற்றோரையும்
சுற்றத்தையும் மறந்து
சுற்றித்திரியும்
பொழுதுகளில்
காதல் பேசி
கல்யாணம்
என்ற போது
விட்டுச்செல்வது
பல காதல்!
இருந்தும்
மாலை இடுவது சில காதல்!
என்ற
போதும்
ஆசையாய்
வரன் தேடி
உற்றார்
உறவினர் அழைத்து
கெட்டிமேளம்
முழங்கச்சொல்லி
மங்கள
மேடையில்
பொன்
தாலி கட்டும்
திருமணங்கள்
போல்
இனிப்பதில்லை
உயிர்
மானம் காப்பதும் இல்லை
அலுவலக
நோட்டில் சாட்சியோடு
தானும்
சேர்த்து கையொப்பமிட்டு செய்யும்
காதல்
திருமணங்கள் !
பலமுறை
அது செய்வது
தியாகம்
என்னும் தற்க்கொலைகள்
வேண்டாமே
வாழ்வினில்!!!!
No comments:
Post a Comment