Translate

Friday, 22 February 2013

கலாச்சார தமிழ்ப்பெண்!

நிமிர்ந்தோங்கி வளர்ந்திட்ட செந்நெல்லை
பாக்கு வெற்றிலை சுண்ணாம்பு
சேர்த்திட்ட செவ்வாயுடைய பெண்டிர்
நா எடுத்து பாட்டுப்பாடி
நால்வர் சேர்ந்து அறுப்பதற்க்கு

கூர்பல் உடைய
கதிர் அருவாள் கையேந்தி
தொடை தெரிய
வீரமாய் எடுத்துக்கட்டிய-பாவாடை
ஆபாசமில்லை!

ஏனெனில் அவர்கட்கு மனதில் கள்ளமில்லை
மங்கை அவள் எண்ணத்தில் கலங்கமில்லை !

மஞ்சள் பட்டுடுத்தி
வெண்பால் நிறமொத்த
மல்லிகை கூந்தல் சூடி
சிவப்பு விளக்காய்-ஒளிரும்
அம்மன் பொட்டளவு
நுதல்தனிலே திலகமிட்டு –அடியிலே
வெள்ளை தீட்டியதாய் திருநீறுமிட்டு
சுங்குடிச்சேலை கட்டிய-சுந்தரி அவள்
மாந்தர்தம் தெய்வமவள்
அவள் தான் –தமிழ்மகள்!
கலாசார கலைமகள்!

கூந்தல் வகுப்பெடுத்து
உச்சிப்பொட்டிட்டு
நிலத்தாயின் நீல வண்ண அழகை
அள்ளிப்பருகுவதாய்
கண்களிலே காணுவதாய்
தலை சாய்த்து நடந்து
மண்ணின் மானம் காத்தாள்
தமிழ்ப்பெண் அன்று !

கோவணம் காட்டும்
கள்ளமில்லா ஆண்கள் எல்லாம்
உழைப்பால் உவப்பு நீரெல்லாம்
விரைந்தோடி வியர்வையாய் வெளிவர
பொன்ஏர் கையேந்தி
செழிய உடலுடைய
காளை  கோர்த்து
காட்டு வெளியிலே
ஆண் காளை அவன் உழுதுவர

வாசலில் கோலமிட்டு
துன்ப இருட்டைப்போக்க
வல்ல துளி அளவு
நெய் விளக்கேற்றி
மங்கை அவள் காத்திருப்பாள்

கருவிழி போல் கருத்த மேனியுடைய
கணவனைக் காண
அழுகின்ற குழந்தைக்கு
தேனமுதாய் தித்திக்கும் தன்பால் தந்து
அடுப்படியிலே மகிழ்வாய் பொங்கி வழியும்
நன் முத்துடைய சோற்றுப்பானை
தட்டகற்றி அகப்பை தனை
அகன்ற கையேந்தி
அளவாய் வெந்த
சோறு வடிப்பாள்!

வரியவர் வரவு காத்து
அவர்தம் வயிறாரா
உணவிட்டு பின்(தான்)
கொண்ட கணவனுக்கிட்டு

எஞ்சிய தேனமுதை-தானுண்டு
இரவுப்பொழுதிலே இன்பம் கண்டு
இனியவளாய் வாழ்ந்து மாறுகாலை வைகறையில்
ஆதவனை எழுப்பிவைத்து
பச்சரிசி மாவு கொண்டு
வண்ண்க்கோலமிடுவாள்-அதிலும்

பல உயிர் வாழ நல்லெண்ணம் கொண்டு-பின்
தான் கொண்ட கண் கண்ட
தெய்வமாம் கணவனை வணங்கி
வேலை துவக்குவாள்
“கலாச்சார தமிழ்ப்பெண்

No comments:

Post a Comment