கொலை களம்!!!
கொத்துக்கொத்தாய் கொலைவெறி குண்டுகள்!
ரத்தமெல்லாம் வீதிஉலா வர
வஞ்சகர் கூட்டம் செய்த
வரம்பு இல்லா வன்மத்தின் ஆட்டம்
கண்ணில் கண்ணீர் நிறப்பி
அவர்தம் செந்நீர் எடுக்க வெறிதறுகிறது!
மனித சதைகள் மண்ணில் துடிக்க அப்போதும்
அடங்கா வெறியன் அவர்தம் உயிரைபரிக்க
இது காணவா உயிர் வாழ்கிறோம்
என் மனதின் துடிப்பு தாளவில்லை!
செம்பால் ஓடும் வீதியில்
தாய்ப்பால் வேண்டிய குழந்தை
மார்போடு மனிதமும் வெட்டப்பட்ட தாயின்
மாரிடத்தில் தலைவைத்து அழும் கொடுமையும் பின்
அக்குழந்தையும் கொலையான வன்மமும்
மனிதத்தின் கொலை அன்றோ!
என்றோ கொலையான இவர் தலைவனின் உயிருக்கு
பழி தேடி அழையும் பிசாசுகளின்
பித்தலாட்ட அரசியலால்
உயிர் மாண்ட தமிழன் கோடி!
ஓடிப்போய் உதவா பாவிகளாயினோம் என்றபோதும்
ஒருவார்த்தை ஆதரவுதரா அநீதி செய்தோமே நாமெல்லாம்!
எங்கோ ஒருவன் உயிர்த்துடிப்பாள்
மனசாட்சி கொண்டு மனிதத்தின்
மரணம் பதிக்கப்பட்ட காட்சிகள் காட்டும்போது
இதற்க்கெல்லாம் துணை போன
இவர்களை கொன்றால் என்ன
எனும் வெறியே என்னுள்!!!!
நமக்கா வந்தது எனும் அசட்டை புத்தியோடு
நாமெல்லாம் விலகி நிற்கவே
நம் இனம் அன்றோ அழிக்கப்பட்டது!
அங்கே வீதிகள் ரத்தத்தாலும்
உடலாலும் நிறைந்து கிடக்க
நாமெல்லாம் வேடிக்கை பார்ப்பதா!
தமிழினமே திரண்டு வா!
தடயங்கள் அழியும்முன்
அவர் தம் நீதி காக்க நீ
போர்க்களம் போகாவிடினும் ஒரு
போராட்டக்களம்மாயினும் நிரப்ப வா!
உனக்குள்ளும் உயிர் இருக்குமானால்
அதிலும் உணர்வு இருக்குமானால்
உன் ரத்தமெல்லாம் கழிவுநீர் சாக்கடை அல்லாது
சிவப்பும் வெள்ளையுமான அணுக்கள் கொண்ட
ரத்தமாயின் உணர்வு வெடித்து கிளம்பி வா!
உயிரே போராட்டம் என்றான தமிழனுக்கு
ஒருமுறையேனும் உன் கரம் நீட்ட வா!!!
உயிர் குடிக்கும் அரக்கன்
ராஜபக்சேவுக்கும் அவனது அரக்க இனத்துக்கும்
கல்லறை கட்டிவிட செங்கல் எடுத்துவா!
கருங்கல் மனமில்லாது
நீ கிளம்பி வா தமிழா நீ கிளம்பி வா!
போராட்டக்களம் போவோம்
புயலென பொங்கி அநீதி கொல்வோம்!!!!