Translate

Friday, 22 February 2013

உணர்வின் அழைப்பு உயிர் காக்க!


கொலை களம்!!!

கொத்துக்கொத்தாய் கொலைவெறி குண்டுகள்!
ரத்தமெல்லாம் வீதிஉலா வர
வஞ்சகர் கூட்டம் செய்த
வரம்பு இல்லா வன்மத்தின் ஆட்டம்
கண்ணில் கண்ணீர் நிறப்பி
அவர்தம் செந்நீர் எடுக்க வெறிதறுகிறது!

மனித சதைகள் மண்ணில் துடிக்க அப்போதும்
அடங்கா வெறியன் அவர்தம் உயிரைபரிக்க
இது காணவா உயிர் வாழ்கிறோம்
என் மனதின் துடிப்பு தாளவில்லை!

செம்பால் ஓடும் வீதியில்
தாய்ப்பால் வேண்டிய குழந்தை
மார்போடு  மனிதமும் வெட்டப்பட்ட தாயின்
மாரிடத்தில் தலைவைத்து அழும் கொடுமையும் பின்
அக்குழந்தையும் கொலையான வன்மமும்
மனிதத்தின் கொலை அன்றோ!

என்றோ கொலையான இவர் தலைவனின் உயிருக்கு
பழி தேடி அழையும் பிசாசுகளின்
பித்தலாட்ட அரசியலால்
உயிர் மாண்ட தமிழன் கோடி!

ஓடிப்போய் உதவா பாவிகளாயினோம் என்றபோதும்
ஒருவார்த்தை ஆதரவுதரா அநீதி செய்தோமே நாமெல்லாம்!
எங்கோ ஒருவன் உயிர்த்துடிப்பாள்
மனசாட்சி கொண்டு மனிதத்தின்
மரணம் பதிக்கப்பட்ட காட்சிகள் காட்டும்போது
இதற்க்கெல்லாம் துணை போன
இவர்களை கொன்றால் என்ன
எனும் வெறியே என்னுள்!!!!

நமக்கா வந்தது எனும் அசட்டை புத்தியோடு
நாமெல்லாம் விலகி நிற்கவே
நம் இனம் அன்றோ அழிக்கப்பட்டது!

அங்கே வீதிகள் ரத்தத்தாலும்
உடலாலும் நிறைந்து கிடக்க
நாமெல்லாம் வேடிக்கை பார்ப்பதா!

தமிழினமே திரண்டு  வா!
தடயங்கள் அழியும்முன்
அவர் தம் நீதி காக்க நீ
போர்க்களம் போகாவிடினும் ஒரு
போராட்டக்களம்மாயினும் நிரப்ப வா!

உனக்குள்ளும் உயிர் இருக்குமானால்
அதிலும் உணர்வு இருக்குமானால்
உன் ரத்தமெல்லாம் கழிவுநீர் சாக்கடை அல்லாது
சிவப்பும் வெள்ளையுமான அணுக்கள் கொண்ட
ரத்தமாயின் உணர்வு வெடித்து கிளம்பி வா!

உயிரே போராட்டம் என்றான தமிழனுக்கு
ஒருமுறையேனும் உன் கரம் நீட்ட வா!!!

உயிர் குடிக்கும் அரக்கன்
ராஜபக்சேவுக்கும் அவனது அரக்க இனத்துக்கும்
கல்லறை கட்டிவிட செங்கல் எடுத்துவா!
கருங்கல் மனமில்லாது
நீ கிளம்பி வா தமிழா நீ கிளம்பி வா!


போராட்டக்களம் போவோம்
புயலென பொங்கி அநீதி கொல்வோம்!!!!

கலாச்சார தமிழ்ப்பெண்!

நிமிர்ந்தோங்கி வளர்ந்திட்ட செந்நெல்லை
பாக்கு வெற்றிலை சுண்ணாம்பு
சேர்த்திட்ட செவ்வாயுடைய பெண்டிர்
நா எடுத்து பாட்டுப்பாடி
நால்வர் சேர்ந்து அறுப்பதற்க்கு

கூர்பல் உடைய
கதிர் அருவாள் கையேந்தி
தொடை தெரிய
வீரமாய் எடுத்துக்கட்டிய-பாவாடை
ஆபாசமில்லை!

ஏனெனில் அவர்கட்கு மனதில் கள்ளமில்லை
மங்கை அவள் எண்ணத்தில் கலங்கமில்லை !

மஞ்சள் பட்டுடுத்தி
வெண்பால் நிறமொத்த
மல்லிகை கூந்தல் சூடி
சிவப்பு விளக்காய்-ஒளிரும்
அம்மன் பொட்டளவு
நுதல்தனிலே திலகமிட்டு –அடியிலே
வெள்ளை தீட்டியதாய் திருநீறுமிட்டு
சுங்குடிச்சேலை கட்டிய-சுந்தரி அவள்
மாந்தர்தம் தெய்வமவள்
அவள் தான் –தமிழ்மகள்!
கலாசார கலைமகள்!

கூந்தல் வகுப்பெடுத்து
உச்சிப்பொட்டிட்டு
நிலத்தாயின் நீல வண்ண அழகை
அள்ளிப்பருகுவதாய்
கண்களிலே காணுவதாய்
தலை சாய்த்து நடந்து
மண்ணின் மானம் காத்தாள்
தமிழ்ப்பெண் அன்று !

கோவணம் காட்டும்
கள்ளமில்லா ஆண்கள் எல்லாம்
உழைப்பால் உவப்பு நீரெல்லாம்
விரைந்தோடி வியர்வையாய் வெளிவர
பொன்ஏர் கையேந்தி
செழிய உடலுடைய
காளை  கோர்த்து
காட்டு வெளியிலே
ஆண் காளை அவன் உழுதுவர

வாசலில் கோலமிட்டு
துன்ப இருட்டைப்போக்க
வல்ல துளி அளவு
நெய் விளக்கேற்றி
மங்கை அவள் காத்திருப்பாள்

கருவிழி போல் கருத்த மேனியுடைய
கணவனைக் காண
அழுகின்ற குழந்தைக்கு
தேனமுதாய் தித்திக்கும் தன்பால் தந்து
அடுப்படியிலே மகிழ்வாய் பொங்கி வழியும்
நன் முத்துடைய சோற்றுப்பானை
தட்டகற்றி அகப்பை தனை
அகன்ற கையேந்தி
அளவாய் வெந்த
சோறு வடிப்பாள்!

வரியவர் வரவு காத்து
அவர்தம் வயிறாரா
உணவிட்டு பின்(தான்)
கொண்ட கணவனுக்கிட்டு

எஞ்சிய தேனமுதை-தானுண்டு
இரவுப்பொழுதிலே இன்பம் கண்டு
இனியவளாய் வாழ்ந்து மாறுகாலை வைகறையில்
ஆதவனை எழுப்பிவைத்து
பச்சரிசி மாவு கொண்டு
வண்ண்க்கோலமிடுவாள்-அதிலும்

பல உயிர் வாழ நல்லெண்ணம் கொண்டு-பின்
தான் கொண்ட கண் கண்ட
தெய்வமாம் கணவனை வணங்கி
வேலை துவக்குவாள்
“கலாச்சார தமிழ்ப்பெண்

இன்றைய நிலைமை!



கணினியும் இனையமும்
இனையில்லா படைப்புகள்!
காணும் இடமெல்லாம்
அறிவியலின் தடயங்கள்!

தொலைக்காட்சியும் அலைபேசியும்
மனிதனின் சிகரங்கள்!
நொடி நொடி அறிவியலின் ஆரவாரம்!
இவை மனிதனின் மகத்தான சாதனைகள்!

ஆனால்,
யாவும் இயங்காது போயிற்று
இல்லாத மின்சாரம் எனும் படைப்பால்!
மீண்டும் என்ன ?
இங்கே கற்காலமே!

ஊழல்...



 
பணம் என்ற சொல்
தன்னோடு சேர்த்துக்கொண்டு
பிறந்ததுவோ ஊழல்
தகுதியின் அடையாளம் செல்வம் என்பதனாலோ
சேர்த்துக்கொள்வதில் பணம்
சேர்த்துக்கொள்வதில் மனம் திளைக்கிறது?!!!

உயிர் காக்கும் மருந்தில் விசமாய் ஊழல்!
பசி போக்கும் உணவில்
பசியோடு ஊழல்!

ஆயிரம் கோடி பணம்-ஆயிரம் கோடி
அரசன் அள்ளிப்போவதுவே ஊழல்_என்றெண்ணி
அரை ரூபாய் விஷயங்களில் மறைக்கின்றது மனம்
பணம் சேர்க்கும் ஆசையால் !

ஆனால் எவரும் உணர்வதில்லையோ?
ஆடை இன்றி பிறந்தவன்
எடுத்துக்கொண்டு போவது
நற்பெயரன்றி ஏதுமில்லை!
ஊழல் ஒழிக்கப்படல் வேண்டும்-அனைவரிடத்திலும்!






ஹரியின் பொன்மொழி!

“நான் எனும் “அகம்பாவம் அழிந்து
“நாம் எனும் “நல்லுணர்வு பிறந்தால்தான்
“ஒற்றுமை எனும் “உன்னதம் பிறக்கும்!
“வேற்றுமை என்ற “விரோதம் ஒழியும்!

ஆசை வரிகள்




உன்னாலே வாழும் நெஞ்சம் !
உயிரோடு உன்னை கொஞ்சும்!
மனம் உன்னில் அடையும் தஞ்சம்
அன்புக்கு இங்கு இல்லை பஞ்சம்!!!

இடம் உண்டு இங்கு கொஞ்சம்
உனை வைக்க அதுவும் கெஞ்சும்!

இதழ் பட்டாலே உடல் சுட்டாலே
உயிரே தெரிக்குது உன்னாலே!
அனல் காற்றாலே அலை அடித்தாயே
அணைத்து  என்னை மறைப்பாயே!

நீ தீண்டினால்
உயிர் தூண்டிலால்
நான் மாட்டினால்
மனசில் இருப்பது காதலே!
மனங்கள் செய்வது ஊடலே!
சொர்க்கம் காணுது உடலே!
ஆனந்தம் பொங்குது கடலே!

இனி உன் மடலே
என் சுவை படலே !
றைந்தே போய்விடும் உடலே!

இது காதல் பறவை வானம்
புதுப்புது மழையைத்தூவும்!
நனைவோமே ! நாம் நனைவோமே!
ஆனந்த மழைதனில் நனைவோமே!






காதல் வரிகள்

அழகு தேவதையே
நீ அசைந்து போவதெங்கே !?!
கிழக்கு திசை முழுவதும் உன்னால்
கிரங்கி நிற்கிறதே !

அசைவ மாமியே
உன்னிடம் காலி சாமியே!

கோலி சோடாபோல் நீ
சுல்லுனு (இ)ருக்குறியே !
கொஞ்சம் தள்ளுனு தாக்குறியே!!

தேக மேகத்திலே
மழை எப்பொழுதடி – காதல்
மழை எப்பொழுதடி!?!

நிலவு பக்கத்திலே
நீயும் இருந்தீன்னா
நெனப்ப தொலைச்சுட்டு
தற்கொலை செய்யுமடி
நிலவும் தற்கொலை செய்யுமடி!!!!

அழகு ராட்சசியே
அள்ளிட்டுப்போறியடி – நெஞ்ச
கிள்ளிட்டுப்போறியடி !!!

சந்திரன் பக்கத்திலே
இந்திரன் சேர்ந்ததுபோல்
மன்மத வில்லெடுத்து
அம்புதான் விடுறயேடா !!?! நீயும்
அம்புதான் விடுறயேடா!!!

என்னில் வம்புதான் செய்றயேடா !
கண்ணில் பட்டபோதெல்லாம் என்னை
களவு செஞ்சுட்டியே!!

உன்னத அழைப்பு!!!




பறந்தவானம் திறந்துகிடக்கு !
பிறந்த பூமி விரிஞ்சுகிடக்கு !
வரிஞ்சு கட்டி வாடா
வாழ்க்கையில் தோதா
ஜெயிச்சிடலாம் நண்பா !

வெற்றிபெற  கிளம்பிடு !
வீண்பேச்சு குறைச்சுடு !
ஊர்பேச்சு எல்லாமே
உன்பேச்சு என்றாகும்
ஒருநாளை நீ காண  உழைத்திடு !
நண்பா உழைத்திடு !

நன்றான வாழ்க்கையிலே
ஒன்றான மனுசங்களா நாமிருப்போம்!
நண்பா  நாமிருப்போம்!

பச்சமரம் செடிகொடிதான்
பரந்தநிலம் பரப்பிடுவோம்!
சிறுஎறும்பு ஒன்று முதல்
ஒவ்வொரு உயிரிடமும்
உன்னத அன்பை வைத்து நாம்
உருவாக்கிக்காட்டிடுவோம் !
உயர்ந்த சமூகத்தை நாமும்
உருவாக்கிக்காட்டிடுவோம் ! 
     

Monday, 18 February 2013

உழவனின் உறவு!

உழவனின் உறவு!


மழை வரும் காலம்- தண்ணீர்
விரையம் செய்ய
மனதுக்குள் ஈரம் வற்றிவிடும்!

நெல்லடித்த வயல்
நீரற்றுப்போகுமாயின் – உலகு
சொல்லற்றுப்போய்விடுமே!!

ஏர் பிடித்த கைகள்
உயிர் குடிக்கும் மருந்தால்
உலகை விட்டுப்போகுமாயின்
உயிரினத்தில் உறவென்று யாரிருப்பார் !?!
உழவின் உறவென்று யாரிருப்பார்!
?!

நன்னீர் அடைத்து வைத்து எம்
கண்ணீர் திறந்துவிடும்
கயவர் நாட்டில்
செந்நீர் சிந்தி நீ போனால்
மண்”நீர்” வற்றிவிடும் – தமிழா
மண் “நீர் வற்றிவிடும்!

நீ வேண்டும்
நிலமும் நீரும் நித்திரை கொள்ளாது
நெடுநாள் மண்ணில் வளம் தர
நீ வேண்டும் தமிழா
நீ வேண்டும்!!!!

உம்மோடு இருப்போம் யாம் துணையாய்
எம்மோடு நீ வேண்டும் உயிர் உறவாய்!!!!
அன்போடு அடியேனின் வேண்டுகோள் உமக்கு!!!


Thursday, 14 February 2013

எனக்குள் ஒரு பாடல்!!!!


கொடிமுல்லைத் தீவே 
கொடைக்கானல் பூவே 
அலைபாயும் காற்றே
அடிநெஞ்சில் அடி வைக்க 
வைக்க வா அழகே !

கடல் காற்று வீசும்
மணல் வீட்டுத் தோட்டம் 
மணக்கின்ற பூவே,
வா அருகே !

அணைக்கின்ற தூரம் 
இருக்கின்ற நீயும் 
சுவைக்கின்ற தேனை 
நெஞ்சில் ஊற வைத்தாய் 
உன் நினைவால்-என்னை 
உருக வைத்தாய் !

கண்களால் உன் கண்களால் 
என்னை நீயும் பருகி வைத்தாய் !
எச்சம் இன்றி மிச்சம் இன்றி 
எச்சில் தேனை சுவைக்க வைத்தாய் !

சுடும் பனியே 
குளிர் தீயே 
வளர்க்கின்றாயே !
என்னுள் வளர்கின்றாயே 
ஒரு காதல் வளர்க்கின்றாயே !!!
பூ தூவும் உன் காதல் 
என்னுள் சுகமாய் 
சுகமாய் இருக்குதடி கண்ணே !