Translate

Sunday, 30 December 2018

நெஞ்சுக்குள் நீந்தும் உன் காதல் - கவிதை

நெஞ்சுக்குள் நீந்தும்
உன் காதல் எண்ணம்
எந்நாளும் என்னை உயிர்வாழ செய்யும்!

என் கண்கள் தேடும்
உன் பிம்ப தோற்றம்
கண்டாலே போதும்
வாழ்வெல்லாம் இன்பம் வந்தே சேரும்!

என் அருகே நீயும்
இருந்தாலே போதும்
அழகான நேரம்
நாள்தோறும் தோன்றும்!

ஓ!மாயாவி...
ஓ!மாயாவி...
வித்தைகள் செய்தாய்!
விளையாட வைத்தாய்!
உன் காதல் பூக்கள்
மழையாக பெய்தாய்!

ஓ! புல்வெளி எல்லாமே பனித்துளி!
நீ நடந்தே சென்றாய்...
அவையாவும் பொன்னாய்
மாறிட வைத்தாய்!

பூவென உன் மணம்
நிறைகின்ற நேரம்
மானுட வேட்கை
மறைந்தே தான் போகும்!

மறையாத நிலா!
நீ என்றே உலா!
என்றென்றும் விழா
நீ இங்கே பலா!
ஆகாகா! ஆனந்தம்...
நெஞ்செல்லாம் பேரின்பம்
உன்னாலே உண்டானதே!

Saturday, 29 December 2018

தாய்மை - கவிதை

#தாய்மை!


ஓ! என் மகவே!
மனம் நிறைந்த உன் தந்தை
என் மடி நிரப்பினார்
பேரன்பு புதையலாய் உன்னை!

நீ கருவாய் உருவான நிமிடம்
ஈடில்லா இன்பத்தின் எல்லைகள்
கடந்து வந்தேன்!
என்னுயிரில் உன்னுயிரை
தாங்கும் பொழுதெல்லாம்
மண் மீது நடந்ததில்லை நான்!
மகிழ் வானில் அன்றோ பறந்தேன்!

தாய்மை பதவி தந்த
தனிப்பெரும் கருணையடா நீ!
புளிப்பு மாங்காய் தேடின
சுவை மொட்டுக்கள்!
எனக்கான பசி கடந்து
உனக்கான உணவுகள் உண்டேன்!

அடி வயிற்றில் கரம் வைத்தே
மெல்லிறகாய் வருடினேன்
நீ உலவும் உணர்வை பெற!
ஒரு புறமாய் படுத்தே
உன் உயிர் காத்தேன்!

உதைக்கும் உன் கால்கள்
தடம் காட்டும் நேரமெல்லாம்
கண் வியந்தே ரசித்தேன்!
எப்போதும் உன் தந்தையின்
கரம் கோர்த்தே இருக்க
ஏங்கிய நாட்களெல்லாம்
பெருந்துணை நீயடா!

அன்று...
கோடி மின்னல்கள் தாக்கியதாய்
தோன்றி மறையும் வலி வந்தே
எனை துடிக்கச் செய்தது!
மரணத்தின் வாசல் வரை
சென்று...சென்று..திரும்பி வந்தது- உயிர்!

யாரென்ற தெரியாத நபர்கள்...
நிர்வாணமாய் நான்!
இருண்டு போகும் கண்களின்
கடைசி காட்சி...உன் தந்தையையே
தேடி நின்றது!

இடுப்பு எலும்புகள்
சடக்கென்று உடைவதாய் உள்ளுணர்வு உணர்த்திக்கொண்டே இருக்க
கண்கள் மூடி....கரங்கள் மடித்து
வலிகள் கடந்தும் வேண்டிக்கொண்டேன்
இறைவனை...!

குவ்வா... குவ்வா... என்றே
அழுகை சத்தம்!
முதலாய் உன் அழுகை கண்டு
அகமகிழ்ந்து ஆனந்தம் கொண்டேனடா!

அத்தனை வலிகளும்
கண்ணீரென கரைந்து ஓடிட
தொப்புள் கொடி உறவே
நெஞ்சோடு அனைத்தேன் உன்னை!

மார் நிறைந்து
மனம் நிரம்பி வழியும் அமுதென அன்னையின் உயிர்த்துளி
தாய்ப்பாலாய் நீ அருந்திட
தாய்மையின் புனிதம் அடைந்தேன்
ஆருயிரே... என் அன்பு மகவே!
கோடி முத்தங்களடா...என் பெருநகையே!

#இளையபாரதி

Thursday, 27 December 2018

சில்லுக்கருப்பட்டியே பாடல்

சில்லுக்கருப்பட்டியே
செல்ல முயல்குட்டியே!
கண்ணு வச்சுட்டியே
கட்டி இழுத்துட்டியே
மொத்த உலகத்தையும்
உன்ன சுத்த வச்சுட்டியே!

காதல் தீய பத்தவச்சுட்டு
கரண்ட்டுபோல சுண்டி இழுக்குற
சும்மா என்ன ரவுசடிக்கிற
Cooling bear ஆ கலந்தடிக்குற

காத்தாடியா உன்ன வட்டமடிக்கிறேன்டி
பூஞ்சாடியா நீ மினுமினுக்கிறடி!
மின்னல் போல கண்ணு அடிக்கிற
ஜன்னல் காத்தா குளிரடிக்கிற
சில்லுத்தண்ணியா நெஞ்சுகுளிரவே
சில்லுக்கருப்பட்டியா உள்ள இனிக்கிற!

நெஞ்சு குழியில என்ன பதுக்குற
பெஞ்ச மழையில தள்ளி நனைக்கிற
ஐயோ... ராணியே...அழகு தேவியே
ஆள மொத்தமா  காலி பண்ணிப்புட்ட
தாலி கட்ட சொல்லி...
என்ன புருஷனாக்கிட்ட

இந்த ஜென்மம் போதுமாடிப்பெண்ணே
இன்னும் வேணும் காதல் பண்ணிடவே
சில்லுக்கருப்பட்டியே...
செல்ல முயல் குட்டியே

நெஞ்சுக்குள்ள உன்னை வச்சு
நித்தம் இன்பம் கொட்டிவச்சேன்
கட்டித்தங்கம் வாங்கி வந்து
உன்ன செலைய செஞ்சுவச்சேன்!

கல்லூரியின் மடியில் - அவளின் நான்

கல்லூரியின் மடியில்
நான் பிறந்திட்ட போது
நான் பேசிய முதல்பெண் அவள்!
தயக்கம் தானாகவே வந்திருந்தது!
அதுவரை என்னிடம்!

வாய் திறந்து கேட்டேன்
முதலாய் “பெயரை!”
இதழ் மலர்ந்து புன்னகைத்தாள்
பெயர் கூறி!
எட்டிய திசையில்
எழுமுனை நட்சத்திரமாய் “அவள் முகம்”!

கணிப்பொறியின் அறையில்
கவனமாய்ப்பேசின வார்த்தைகள்
அவளுடன் ஆவலுடன்!
உடன் கவிதையும் சிந்தினேன்
காந்தமாய் ஈர்த்துக்கொண்டாள்!

அதனால் தானோ அரும்புவிட்டன
எம் படைப்புகள் சிந்தையில்!
கவிதை பூத்த சிந்தை
காய்ந்தே இருந்தது
முள்மந்தையாய் அதுவரை!

கல்லூரியும் வகுப்பறையும்
வாய்விட்டுக்கேட்டன கவிதைகளை!
அதில் மழலை பிழை இருக்கலாம்!
தாயாய் ஏற்றனர் நண்பர்கள்!

அதனால்தான் சொல்கிறேன்!
அவள் எனக்குப்பிடித்தவள் என்று!
இவ்விடத்தில் காதல் இல்லை!
காலம் தீண்டும் நட்பு மட்டுமே !
ஆராதிக்கப்படுகிறது அவளுடன்!
அவள் என்றுமே எனக்குப்பிடித்தவள்!

மெழுகு செலையா உருகி வழியும் பாடல்

மெழுகு செலையா உருகி வழியும்
உன் அழகை அள்ளி
பூசிக்கிற ஆசை கொல்லுதடி...!
சிரிக்கும் நிலவா...
நீ சிதறி எறியும் சிரிப்பை எல்லாம்...
பொறுக்கி எடுத்து சேத்துக்கிறேன்டி...!

மூங்கில்பூவா அழகை நிரப்பிவச்சு
புல்லாங்குழலா பேசும்
அந்த பேச்சை ரசிச்சே பார்ப்பேன்!
செல்ல முறைப்பில்...
ஓரம் ஒதுங்கும்...ஒத்தக்கண்ணு பார்வை
எப்போ என்ன சேர்வை
என்றே கேட்டுத்தாக்கும்!

அடியாத்தி...
உன் அழகு மொத்தம் பாத்தேன்
என்னை மறந்தே வியந்துபோனேன்
வயசான பிறகும்...
காதல் நிரம்பி வழியும்
முழுசான அன்பை
மனசு கொட்டித்தீர்க்கும்...

நீ வந்தா...
என் நிழலுகூட பேசும்...
பூப்பந்தா...
மனசு பறந்தே போகும்...
அடியாத்தி...
அசர வைக்கிற நீயே...
மனதில் சந்தன தீயே...
பத்திக்கிச்சே...
காதல் ஒட்டிக்கிச்சே...

Tuesday, 25 December 2018

மழை பெஞ்சா மனசெல்லாம் - பாடல்

இசையின் இணைதலுக்கு
காத்திருக்கும் மெலடி!

மழை பெஞ்சா மனசெல்லாம்
நனையாம குளிரும்!
நீ வந்தா உசுரெல்லாம்
உற்சாகம் பிறக்கும்!
அடியே அழகு களவானியே
கண்ணில் கனவெல்லாம்
வந்தாய் நீயே!

நிஜமாக நீதானே வந்தாய் பெண்ணே
நினைவெல்லாம் சுகமாக
நின்றாய் கண்ணே!
ஒரு நூறு ஜென்மம்
எடுத்தாலும் உன்னை
வரமாக கேட்பேன்
வாயாடிப்பெண்ணே !

அலைமோதும் கடல் தாண்டி
இருந்தாலும் உன்னை
அன்பாலே அடைகின்ற
திமிர் தானே என்னை
உந்தன் அருகே இணை சேர்க்கும்!

இல்லாத உலகங்கள்
இருந்தாலும் அங்கே
உன்னோடு நான் சென்று
வருவேனே பெண்ணே!

பனிதூவும் நிலமெல்லாம்
அனில் போல உன்னை
சுமந்தேதான் சுற்றி
வருவேனே பெண்ணே!

குளிர்க்காத்து வீசும் பொழுதெல்லாம்
எந்தன் மூச்சுக்காற்றாலே
உனக்கு இதம் என்றும் தருவேன்!
பதமான சொல்லெல்லாம் பூமாலையாக்கி
பொன்னான பெண்ணே
உனக்கென்று தருவேன்
கவிதை நிலவே!

#காதல்_மெலடி

Saturday, 22 December 2018

கலவி கவிதை

கலவி கவிதையாக மட்டும்!

கால் கொலுசின் பெரும் புன்னகை காதோரம் இசைக்கட்டும் என்றே
உளவுகிறேன் உன்னோடு!
ஒவ்வொரு இரவும் கலவியின்
களைப்பு மறந்தே
களிகொள்கிறது-மனது!

ஆடைகள் தொலைந்த இரவில்
ஆரவாரம் அதிகம் தான்
மகிழ்வின் மழலை
பிறக்கும் வழி என்றே
பிழை இன்றி கரைகிறது இரவின் நிலவு!

இடைவெளி ஏதுமில்லா
கட்டியணைப்பில் கலவரம் ஏதுமில்லை!
காதோரம் கிசுகிசுக்கும்
உன் முந்தானை சத்தம்
மூங்கில் இசையாய் அறை நிரம்புகிறது!

தீர்ந்து போகும் இரவிலும்
தீராத காதல் கலவி கொண்டே
கட்டில் நிரம்புகிறது!
மனங்களின் சங்கமத்தில்
மடை திறக்கிறான் காமன்!

உடைகளின் விடுதலை
உணர்வுகளின் கைவிலங்கை உடைத்து
உறவின் நீட்சிக்கு உன்னதம் சேர்க்கிறது!
பொங்கும் பெருவெள்ளம்
புதையல் கொணர்ந்தே கடல் நிரம்புகிறது!

கடித்தே முத்தமிட்ட குழந்தைத்தனத்தில்
உன் குறும்புகள் ஏராளம்
ஆனாலும் நீ தந்த அன்பும் தாராளம்!

நம்பிக்கை பயணம் கவிதை

கனவெல்லாம் நிஜமென்று
நடக்கும் நாள் எதுவோ!?
உழைப்பெல்லாம் பயனாக
கிடைக்கும் நாள் எதுவோ!?

உறங்காமல் விழித்தேதான்
இருக்கும் இலக்குகளே
உனை அடைந்தே தான்
தீரும் எந்தன் கனவுகளே!

கண்ணீரே கரைந்தாலும்
காயம் ஆரவில்லை!
செல்லும் பாதையெல்லாம்
முள்ளென்றாலும் பயணம் முடிவதில்லை!

தீராத பெரும்தாகம் கொண்டேதான்
நாட்கள் நடக்கிறதே!
ஓயாத உழைப்பேதான்
எந்தன் முதலீடே!

காயங்கள் பட்டாலும்
களைப்பென்றே வந்தாலும்
கால்கள் ஓய்வதில்லை!
பெரும் ஆழத்தில் புதைத்தாலும்
விதைகள் சாவதில்லை!

மீண்டும் மீண்டும் மோதிடும்
துணிவே என்றும் துணையாகும்!
துயரென்று வந்தாலும்
பயம் என்று ஏதுமில்லை!

வேரோடு சாய்ந்தாலும்
மரங்கள் சாவதில்லை!
சோர்வென்று அறியாத
தாழ்வென்று நினையாத
நம்பிக்கை தோற்பதில்லை!

இதோ இதோ என் வெற்றி!
அது எட்டும் தூரத்திலே!
இதோ இதோ என் வெற்றி!

#போராடு

Tuesday, 18 December 2018

தென்றலே! உன்னை தேடிப்பார்க்கிறேன்!

தென்றலே! உன்னை தேடிப்பார்க்கிறேன்
மோதியே நீ ஓடிப்போகிறாய்!
பூக்களே உம்மை நுகர்ந்து பார்க்கிறேன்
வாசமாய் நீ காற்றில் கறைகிறாய்!

மின்னலே!
உன்னைப்பிடிக்க நினைக்கிறேன்!
ஒரு நொடியிலேன் உடைந்து போகிறாய்!
மேகமே உன்னில் நடக்க துடிக்கிறேன்
நகர்ந்து நீ மறைந்து போகிறாய்!

மூங்கிலே உன்னை இசைக்க துடிக்கிறேன்!
இருந்தும் ஏன் நீ துளைகள் மறைக்கிறாய்!
ஆடையே உன்னை அணிய நினைக்கிறேன்!
இருந்தும் ஏன் நீ பறந்து செல்கிறாய்!

தாரரா.... தாரத்தாரரா...
தாரரா....தரத் தாரத்தாரரா...

வானிலே வந்த வெண்ணிலா
நாளுமே நீ எந்தன் கண்ணிலா...
மோகமே..என்றும் பெண்ணிலா!?
என்றுதான்..தீரும் என்றுதான்...
ஏங்கியே.. நானும் நடக்கிறேன்!
தீயென...இந்த பாதை கடக்கிறேன்!

பெண்மையை உன்னை
காணத்துடிக்கிறேன்!
கண்களில் ஏன் மறைந்து கொள்கிறாய்!?
நெஞ்சிலே உன்னை அணைக்க நினைக்கிறேன்
பஞ்சென ஏன் பறந்து செல்கிறாய்!?

வாணி.. வா... வா.. நீ...வா
பார்க்கலாம்...பேசலாம்...பழகலாம்...
பூக்களை தந்துதான்
கரங்கள் கோர்க்கலாம்!
வாணி.. வா... வா.. நீ...வா

Saturday, 15 December 2018

உள்ளுக்குள்ள பேராசை...கவிதை

உள்ளுக்குள்ள பேராசை
உன்னைக்கண்டு நான் பேச
என்ன சொல்லி கூப்பிடட்டும்
பூவா பொறந்த பேரழகை

பஞ்சாரத்து கோழி போல
என்ன பொத்தி வச்ச நீயே
இன்னும் உன்னை பாத்திடவே
உள்ளம் இருக்கு பெருந்தவமே!

அன்பை பொழியும் புதுமழையே
ஆவாரம்பூ முகத்தழகே

காதோரமா கதை சொல்லம்மா...கவிதை

காதோரமா கதை சொல்லம்மா
நீயாகவே எனை சேரம்மா
தானாகத்தான் வரும் காதலை
பேரின்பமாய் ஏற்போமே
என்னாளுமே உயிராகவே
இனி வாழ்வோமே!

உயிரே...உயிரின் உறவே...
இரவே..இரவின்...பனியே
பகல் போலவே ஒரு சூரியன்
இரவெல்லாமே இருந்தாலென்ன
நீயாகிய மறு நிலவினை
நான் கொண்டேனடி!

அழகே...அழகின் மொழியே
விழியே...விழியின் வழியே
உனை சேர்ந்திடும்
என் பிம்பத்தின்
உயிர் ஆகிய பெரும் தவமே!

கனவே கனவில் தோன்றும் உலகே
உன்னோடுதான் நான் வாழ்ந்திட
என்னோடுதான் நீ சேர்ந்திட
ஆகாககா ஆனந்தமே!
ஆயுள் எல்லாம் பூ வாசமே
வந்ததே தென்றலே நீயாகிறாய்!

#இளையபாரதி

ஓ! புதிய புயல் ஒன்று கெளம்பியே! கவிதை

ஓ! புதிய புயல் ஒன்று கெளம்பியே
கரை கடந்திட துடிக்குதே
பெரும் மழை வந்து அடித்துதான்
மரம் செடியெல்லாம் சாய்க்குதே!

ஆனாலும்...
இந்தச்சாலை ஓரம்
நடக்கும் பூ இவள்
ஒரு புன்னகையால்
புயலை கடக்கிறாள்!

ஒரு மெல்லிசை இடியென இசைக்கிறாள்!
ஹே! இது என்ன மாயம்!?
இவள் செய்யும் மாயம்!?
ஹோ! இவள் சக்திகள் கொண்ட தேவதையா!
இல்லை சாட்சிகள் அற்ற கற்பனையா!

ஓ! காதல் கொண்டேன்...
அவள் கண்ணில் கண்டேன்...
என்னை விழுங்கிடும் பேரழகி...
உன்னில் புதைகிறேன்
மெல்ல எழுகிறேன்...

இன்னும் புரியலையே...
வந்த புயல் வந்த எங்கே!
இந்தப்பயல் நெஞ்சில்
ஓ! புதுக்காத்து அடிக்குதே!

பேராண்மையை நீ கொண்டவா! கவிதை

பேராண்மையை நீ கொண்டவா!
தீராப்புகழ் தான் வெல்ல வா!
தோள் உயர்த்தியே சினம் காட்டி வா!
கண் அசைவிலே படை திரட்டி
பகை முடித்திடும் திரன் கொண்டு வா!

திசை எங்குமே புகழ் ஒலித்திட
பெரும் அன்பினை பறை சாற்றி வா!
பரண் ஏறியே திறன் காட்டிடும்
மறம் கொண்டே தான்
சிரம் நிமிர்த்திடும் பெருந்தகையே!

வா!..வா!..

வாள் சுழற்றிடும் களம் இறங்கியே
பகை அறுத்திடும் வீரா
வெற்றி வெற்றியாய்
குவித்து வைக்கும் நேரமே இது
எழுந்து வா!

#வீரம்

அவளுக்கு...மழை என்றே பெயர்...! கவிதை

அவளுக்கு...மழை என்றே பெயர்...!
பெரும் கடலின் துளித்துளி
பிம்பம் அவள்!
மின்னலை கட்டிக்கொண்ட
மேகத்தின் மகள் அவள்!

இடியென கோபமாய் கொந்தளிக்கும்
கணவனின் கண்ணீர்த்துளி அவள்!
காற்றை காதல் கொண்டே
மரங்களின் மோகம் கொண்டவள்!

தாகம் தீர்க்கும்
தடாகங்களை பிரசவிக்கும்
தாயுமானவள்...தயை செய்பவள்!

இரவு பகலுக்கும்
சிற்றுயுர் பேருயிருக்கும்
மேடு பள்ளத்துக்கும்
பேதங்கள் காட்டிடா
பெரும் கருணை அவள்!

மலை சிகரத்தில் விழுந்து
அடி நகரத்தில் நதியாய் நடந்து
கடலாய் கரைந்து போகிறாள்!

இதில் எத்தனை கவிஞனின்
கரங்களுக்கு கவிதையாகிறாள்!??
எத்தனை உயிர்களின்
உயிர்ப்பாய் இருக்கிறாள்!

ஓ! பெருமழை என்றே
வந்துவிட்டாள் இப்போதும் இங்கே!
வாடி! ராசாத்தி!

#இளையபாரதி

பேட்டராஜா பாடல்

#Rajiniyisam

எதிரி கூட்டமெல்லாம்
ஒன்னா கெளம்பி வந்தா
இவனை எதிர்த்து நின்னா
அடிச்சு நொறுக்கிடுவான்
சல்லி சல்லியா
புயலா கெளம்பிடுவான்
தள்ளி நில்லையா!
Single லாவே கெத்து காட்டும்
சிங்கம் இவன் தான்...

ராஜா...ரா..ரா ராஜா
பேட்ட...ராஜா
Scene u விழுமே Single அ நடந்தா
Danu ரகம் டா இது காளியோட களம்டா
திமிரா கெளம்பி வர்றான்
திருப்பி கொடுக்க வர்றான்

விழுற அடியில அடக்கி ஆள வர்றான்
பேட்ட .. ராஜா
கெத்தா கெளம்பி வர்றான்
சேட்டையெல்லாம் காட்ட வர்றான்...
பேட்ட .. ராஜா
Pulse U எகிற...உனக்கு படபடக்கும் heartu
Scene அ stepவச்சு
single ஆ சிங்கம் வர்றான்
பதறி...நீயும் செதறி
கொஞ்சம் அலறி... ஓடு...

நாட்டை எல்லாம் அதிரவைக்கும்
பேட்ட ராஜா கெளம்பி வர்றான்...தீயா!
தீரா கோபம் கொண்டு
திமிரா நடந்து வர்றான்...
வாடா..எதிர வாடா...
தில்லிருந்தா எதிர்த்து வாடா...

தெறிக்கும் பாரு Mass u
தலைவன் தாண்டா Boss u
எதிரி எல்லாம் piece...u
Eyes அ பாரு sharp u

அன்பாலே அடக்கலாம் இவனை
வம்பா நீ வந்தாலே சவமே...
ராஜா..பேட்ட ராஜா...
கெளம்பி வந்தா
Sound u எகிறும்... Bulb u செதரும்
ஊரே அலறும்...ராஜா..பேட்ட ராஜா..

ஆகா... அந்த தேவதை - பாடல்

ஆகா... அந்த தேவதை
ஏனோ ஒரு பூமழை
தானா இங்க பொழியுறா
தேனா பேசி சிரிக்கிறா!
உள்ளுக்குள்ள பத்திக்கிச்சு நெருப்பு
உன்னாலே பொழுதாச்சு சிறப்பு!

கண்ணால சிரிக்கிறா...
கன்னம் காட்டி கவுக்குறா
முன்னால நடந்துதான்
தன்னாலே தாக்குறா...
அய்யய்யோ... ஆகிப்போச்சு சேதாரம்...
ஆனாலும்... அவ எனக்கு ஆதாரம்....

என்னமா..அழகுடா...
மொத்தமா...நிலவுடா...
சத்தமா கத்தியே...
காதலை சொல்லவா...

ஒத்தையா... பூ தந்து...
உன் முன்னால் நிக்கவா...
சொல்லுடி....சுவீட்டு corn u
கொடைக்கானல் புள்ளி மானு...
லவ்வுல விழுந்துட்டேனே...
உம்மேலே..தானே நானும்...
ஓகே..வா...
உன்னை நான் ..
மொத்தமா அள்ளவா..

Are you ready Baby...
I am you your Darby...