அன்பின் மொழியில்
ஆயிரம் வார்த்தைகள் இருந்தாலும்
என்னை பார்க்கும் போதெல்லாம்
"மாமா..." "மாமா..." என்கிறாள்!
காரணம் இன்றியே
கண் அடிக்கிறாள்!
எங்கோ தொலைவில்
நான் இருப்பதாய்
ஒவ்வொரு முறையும்
பறக்கும் "முத்தம்" தருகிறாள்!
நான்கு பற்கள்
நன்றாக தெரியும் படி
மழலை மாறா
புன்னகை பூக்கிறாள்!
எனக்கென்றே நலினமாய்
நடந்து காண்பிக்கிறாள்...!
அள்ளி அணைக்கச் சொல்லி
வாஞ்சையோடே
கரங்கள் நீட்டுகிறாள்!
இத்தனை நாட்கள்
இல்லாத காதலை
காவேரி என
கரை புரள வைக்கிறாள்!
ஆயுளின் பெருமகிழ்வை
அங்கம் தோறும் நிறைக்க வைத்து
நெஞ்சில் இன்பத்தேன்
நிறைத்து வைக்கிறாள்!
அவள்...அவள்....
ஆம்... அவள்...
என்...
அன்பு தங்கை மகள்...
ஹாசினி...!
#தாய்மாமன்
#இளையபாரதி
ஆயிரம் வார்த்தைகள் இருந்தாலும்
என்னை பார்க்கும் போதெல்லாம்
"மாமா..." "மாமா..." என்கிறாள்!
காரணம் இன்றியே
கண் அடிக்கிறாள்!
எங்கோ தொலைவில்
நான் இருப்பதாய்
ஒவ்வொரு முறையும்
பறக்கும் "முத்தம்" தருகிறாள்!
நான்கு பற்கள்
நன்றாக தெரியும் படி
மழலை மாறா
புன்னகை பூக்கிறாள்!
எனக்கென்றே நலினமாய்
நடந்து காண்பிக்கிறாள்...!
அள்ளி அணைக்கச் சொல்லி
வாஞ்சையோடே
கரங்கள் நீட்டுகிறாள்!
இத்தனை நாட்கள்
இல்லாத காதலை
காவேரி என
கரை புரள வைக்கிறாள்!
ஆயுளின் பெருமகிழ்வை
அங்கம் தோறும் நிறைக்க வைத்து
நெஞ்சில் இன்பத்தேன்
நிறைத்து வைக்கிறாள்!
அவள்...அவள்....
ஆம்... அவள்...
என்...
அன்பு தங்கை மகள்...
ஹாசினி...!
#தாய்மாமன்
#இளையபாரதி
No comments:
Post a Comment