Translate

Wednesday, 22 August 2018

கலைஞர்!

புகழ் மறையா சூரியனே!
பூ என்று உதிரா சூரியகாந்தியே!
மறையா கதிரொளியே!
மாந்தர்தம் விழிச்சுடரே!
மறைந்தும் போனதேனோ!?

இப்போதும்,
துளிக்கண்ணீர்
மறைக்கும் கண்களில்
வியந்தே பார்க்கிறேன்
சிந்தை கவர்ந்த பெருந்தலைவா
உன் உடல் மட்டும் மேற்கொண்ட
இறுதி யாத்திரையை!

உயிரும், புகழும்,
உன் உற்ற தமிழும்,
கற்றதோர் நல்லறிவும்
நானிலத்தில் எம்மோடே
இருக்கும் எந்நாளும்!

#கலைஞர்

No comments:

Post a Comment