மீசை முறுக்கி மின்னல் தரித்து
ஆசை கணவன் அருகில் வர
பாச வலைவீசும் பெண்ணால்
நேச கரம் நீட்டி நெஞ்சில் அணைக்கிறாள்!
காசுக்கடவுளை தேடிக்கொணர்ந்திட
நாளும் கிளம்பிடும்
நன்முத்து மணியை
பாவை உதடுகளால்
முத்தமிட்டு நெற்றி நிமிர்கிறாள்!
வாசல் படிவரை
வந்து நின்று வழியனுப்பி
பறக்கும் முத்தங்களை
பட்டம் விடுகிறாள்...!
வீசும் காற்றிலே
விரைந்து பறந்திடும் முத்தம்
அவனுக்கு முகமலர்ச்சி தந்து
வேலை சென்றிட
வழியனுப்பி விடுகிறது!
நாளும் பொழுதெல்லாம்
நங்கை காத்திருக்க
வரும் மாலை வேளையில்
மல்லிகையை தன்கை கொணர்ந்து
பாசமங்கையின் வாச குழலிலே
வஞ்சயோடு வைக்கிறான்!
இரவு பொழுதங்கே
விரகம் தந்திட
பரதம் ஆடும்
பைந்தமிழ் முத்தங்கள்
பொன்மேனி ஊர்ந்தே
காம ரசத்தினில்
கட்டில் நிரப்புது!
ஆடை துறந்திட்ட
நாணல் மேனிகள்
நலினமாகவே காதல் பேசிடும்
வேலை வந்தங்கு
விரகதாபம் விதையுமாகுது!
மழலை ஒன்றங்கே
மடியில் சேர்ந்திட
குவியல் குவியலாய்
மகிழ்வங்கே நிறைகிறது!
மனங்கள் யாவுமே
மழலை பேசிட
நற்குணங்கள் யாவுமே
நளினம் காட்டுது!
அன்பு மொழிகளில்
அன்னைதந்தையர்
பாசம் காட்டிட
உலவும் இறையென
பழகும் குழந்தையும்
மலர் போலவே
மனங்கள் நிறைக்குது!
மழலை பேரானந்தம்!
ஆசை கணவன் அருகில் வர
பாச வலைவீசும் பெண்ணால்
நேச கரம் நீட்டி நெஞ்சில் அணைக்கிறாள்!
காசுக்கடவுளை தேடிக்கொணர்ந்திட
நாளும் கிளம்பிடும்
நன்முத்து மணியை
பாவை உதடுகளால்
முத்தமிட்டு நெற்றி நிமிர்கிறாள்!
வாசல் படிவரை
வந்து நின்று வழியனுப்பி
பறக்கும் முத்தங்களை
பட்டம் விடுகிறாள்...!
வீசும் காற்றிலே
விரைந்து பறந்திடும் முத்தம்
அவனுக்கு முகமலர்ச்சி தந்து
வேலை சென்றிட
வழியனுப்பி விடுகிறது!
நாளும் பொழுதெல்லாம்
நங்கை காத்திருக்க
வரும் மாலை வேளையில்
மல்லிகையை தன்கை கொணர்ந்து
பாசமங்கையின் வாச குழலிலே
வஞ்சயோடு வைக்கிறான்!
இரவு பொழுதங்கே
விரகம் தந்திட
பரதம் ஆடும்
பைந்தமிழ் முத்தங்கள்
பொன்மேனி ஊர்ந்தே
காம ரசத்தினில்
கட்டில் நிரப்புது!
ஆடை துறந்திட்ட
நாணல் மேனிகள்
நலினமாகவே காதல் பேசிடும்
வேலை வந்தங்கு
விரகதாபம் விதையுமாகுது!
மழலை ஒன்றங்கே
மடியில் சேர்ந்திட
குவியல் குவியலாய்
மகிழ்வங்கே நிறைகிறது!
மனங்கள் யாவுமே
மழலை பேசிட
நற்குணங்கள் யாவுமே
நளினம் காட்டுது!
அன்பு மொழிகளில்
அன்னைதந்தையர்
பாசம் காட்டிட
உலவும் இறையென
பழகும் குழந்தையும்
மலர் போலவே
மனங்கள் நிறைக்குது!
மழலை பேரானந்தம்!
No comments:
Post a Comment