Translate

Wednesday, 22 August 2018

நாம் தமிழர்!

எங்கே விழுந்தோம்...
அங்கே எழுவோம்...
திங்கள் திசையை
திருப்பிட துணிந்தோம்!
எங்கள் பகையை
நறுக்கிட முனைந்தோம்!

மறத்தமிழச்சி கொங்கை
பால் குடித்த
வேங்கை இனம் ஒன்று
எழுந்திடல் கண்டு
வீசும் பகை காற்றும்
விலகியே ஓடும்!

நஞ்சை நிலமென்னும்
தரணியைஆண்ட
தஞ்சை சோழ
இனம் என எழுந்தே
நெடுங்காவிரியை
கொணர்ந்தே வருவோம்!

புயலென கிளம்பி _வரும்
புலிப்படை கண்ணில்
தனலென எரியும்_பெருந்தீ
எரித்தே முடிக்கும்
எதிரியின் பிணத்தை!

தடையென எதையும்
நினையா மனமே அதை
உடை என முழங்கி
உறுமுதல் கேளீர்!

இனியும்,
ஏளனம் கொண்டு
மதி சூழ்ச்சிகள் செய்யின்
இவன் படை எழுந்தே
உனை எதிர்த்தே வெல்லும்!

அஞ்சி நடுங்கிடு...
அலறி துடித்திடு...
ஒரு போதும் எனை
எதிர்க்க மறந்திடு!

#நாம்_தமிழர்

No comments:

Post a Comment