செத்தே தொலைகிறாள்
நெடுங்காவேரி-நீங்கள்
விற்றே தீர்த்த பெரும் மணலால்!
அங்கே,
கன்னட கொடும் மண்ணில்
அடைத்தே வைத்த
பெருங்கோடுமை தாளாது
அவள் அழுது புலம்ப
வந்த கண்ணீரும்
புயல் மழையாய் அணை நிரம்ப
நீண்ட நெடும்பாதை தான்கொண்ட காவேரி
கரை நிரம்பி வருகிறாள்
அன்னைத்தமிழ் மடிதேடி!
ஆனந்த பெருநுரையாய் ஆர்ப்பறிக்க
அழகுமகள் வருகிறாள்...!
அள்ளி அணைத்து
அணைதனில் தேக்கி
நிலமகளோடு நீந்தி விளையாட
ஒரு அணை உண்டோ அரச படுபாவியே!
அவள்...
அழுது புழம்பியே
கடல்கலப்பதால் தானோ...?
உப்பாய்போனதோ
பெருங்கடல்!
#காவேரி
No comments:
Post a Comment