உன்னைத்தேடி தொலைகிறேன்
கண்ணில் பார்வை மறைக்கிறேன்
என்னில் எங்கோ இருக்கிறாய்
இதயம் கூற கேட்கிறேன்!
நித்தம் பிறக்கும் குழந்தையாய்
நாளும் உனக்கென பிறக்கிறேன்!
ஓடிக் களைத்த பொழுதெல்லாம் - உன்
அன்பை அமுதென பருகினேன்!
யாரை கேட்டு சொல்வதோ?
இந்த உலகம் நமக்கென பிறந்ததை!
இன்னும் தூரம் செல்கையில்
காதல் ஜுரம் கூடுமே!
நெருப்பை விழுங்கிய பொழுதென
நீ இல்லா நொடிகள் தவிக்கிறேன்!
கருப்பை வளரும் குழந்தையாய்
நீ இருக்கும் தருணம் மகிழ்கிறேன்!
அன்பை விதைக்கும் நிலமென
உன் இதயம் இருக்க காண்கிறேன்!
உண்மை பேசும் உதடுகள்
காதல் சுவை தர பருகினேன்!
கண்மை பூசிய காதலி உன்
விழிகளில் விழுந்ததை அறிவாயா!?
பெண்மை புனிதம் சேர்க்கும் உன்
பிறப்பின் ரகசியம் அறிவாயா!?
உனக்கென உவமை சொல்லிட
பூமியில் யாரும் பிறக்கல!
அந்த உவகை கொண்ட உயிரென
உந்தன் காதல் அடைகிறேன்!
என்னில் எத்தனை மாற்றங்கள்
அத்தனையும் செய்தவள் நீ தானே!
உன்னில் பிறக்கும் என் குழந்தையும்
நெஞ்சில் வார்க்கும் இன்பத்தேன்தானே!
#இளையபாரதி
கண்ணில் பார்வை மறைக்கிறேன்
என்னில் எங்கோ இருக்கிறாய்
இதயம் கூற கேட்கிறேன்!
நித்தம் பிறக்கும் குழந்தையாய்
நாளும் உனக்கென பிறக்கிறேன்!
ஓடிக் களைத்த பொழுதெல்லாம் - உன்
அன்பை அமுதென பருகினேன்!
யாரை கேட்டு சொல்வதோ?
இந்த உலகம் நமக்கென பிறந்ததை!
இன்னும் தூரம் செல்கையில்
காதல் ஜுரம் கூடுமே!
நெருப்பை விழுங்கிய பொழுதென
நீ இல்லா நொடிகள் தவிக்கிறேன்!
கருப்பை வளரும் குழந்தையாய்
நீ இருக்கும் தருணம் மகிழ்கிறேன்!
அன்பை விதைக்கும் நிலமென
உன் இதயம் இருக்க காண்கிறேன்!
உண்மை பேசும் உதடுகள்
காதல் சுவை தர பருகினேன்!
கண்மை பூசிய காதலி உன்
விழிகளில் விழுந்ததை அறிவாயா!?
பெண்மை புனிதம் சேர்க்கும் உன்
பிறப்பின் ரகசியம் அறிவாயா!?
உனக்கென உவமை சொல்லிட
பூமியில் யாரும் பிறக்கல!
அந்த உவகை கொண்ட உயிரென
உந்தன் காதல் அடைகிறேன்!
என்னில் எத்தனை மாற்றங்கள்
அத்தனையும் செய்தவள் நீ தானே!
உன்னில் பிறக்கும் என் குழந்தையும்
நெஞ்சில் வார்க்கும் இன்பத்தேன்தானே!
#இளையபாரதி
No comments:
Post a Comment