இன்பம் எனும் சூழல்
இல்லாது வாழும் மக்கா...
துன்ப விளக்கில்
விட்டில் பூச்சியாய்
விழுந்து சாக துணியாதே!
அணியாக வரும் நகைச்
சுவைகண்டு சுதந்திரப்படுத்து-உன்
துன்பச்சிறை மாட்டிய மனப்பறவையை!
இயற்கை
மடியென விரித்து வைத்திருக்கும்
பசுமை காட்சிகளில்
கண் பார்வைவிழ சுற்றி வாருங்கள்
மலை தேசங்களை!
நீண்டு கிடக்கும் நீலக்கடல்தனில்
ஓடம் இட்டு ஊர்ந்துசெல்லுங்கள்!
ஒய்வுநேரம் வரும்போதெல்லாம்
ஓடிக்களைத்த உடம்பை
நீர்தனில் நீந்த செய்யுங்கள்!
செவிகளில்
வரிகளை இசை எனும்
இன்பத்தேனில் நனைத்த
இளையராஜா பாடல்களை
பாயச்செய்யுங்கள்!
இதயம் எப்போதும் பூத்து குலுங்கும்
அன்பெனும் மலர்த்தோட்டதை
அனைவர்க்கும் திறந்து காட்டுங்கள்!
வலிகள் தந்துபோகும்
வார்த்தை பூச்சிகளை
ஒருபோதும் வாழவிடாது
உவகை தரும் சொற்களை
சுழற்றி வீசுங்கள்!
உறவு சுகம் பெறும்
மனமும் மகிழ் பெரும்
இன்பம் நிறைந்திருக்கட்டும்...
மகிழ்ந்திருப்போம்_மனிதனாக!
#இளையபாரதி
இல்லாது வாழும் மக்கா...
துன்ப விளக்கில்
விட்டில் பூச்சியாய்
விழுந்து சாக துணியாதே!
அணியாக வரும் நகைச்
சுவைகண்டு சுதந்திரப்படுத்து-உன்
துன்பச்சிறை மாட்டிய மனப்பறவையை!
இயற்கை
மடியென விரித்து வைத்திருக்கும்
பசுமை காட்சிகளில்
கண் பார்வைவிழ சுற்றி வாருங்கள்
மலை தேசங்களை!
நீண்டு கிடக்கும் நீலக்கடல்தனில்
ஓடம் இட்டு ஊர்ந்துசெல்லுங்கள்!
ஒய்வுநேரம் வரும்போதெல்லாம்
ஓடிக்களைத்த உடம்பை
நீர்தனில் நீந்த செய்யுங்கள்!
செவிகளில்
வரிகளை இசை எனும்
இன்பத்தேனில் நனைத்த
இளையராஜா பாடல்களை
பாயச்செய்யுங்கள்!
இதயம் எப்போதும் பூத்து குலுங்கும்
அன்பெனும் மலர்த்தோட்டதை
அனைவர்க்கும் திறந்து காட்டுங்கள்!
வலிகள் தந்துபோகும்
வார்த்தை பூச்சிகளை
ஒருபோதும் வாழவிடாது
உவகை தரும் சொற்களை
சுழற்றி வீசுங்கள்!
உறவு சுகம் பெறும்
மனமும் மகிழ் பெரும்
இன்பம் நிறைந்திருக்கட்டும்...
மகிழ்ந்திருப்போம்_மனிதனாக!
#இளையபாரதி