ஒத்த நொடியில ஓர விழியில
கட்டி இழுத்துட்டுப்போறபுள்ள
மொத்தசனம் நின்னு...
கண்ணு விரிச்சுப்பாக்குதடி
காத்திலாடும் தாவணி
முகத்தில் மோத யாவும் நீ
ஆகிப்போன தேவியே
மடி சாயவா? மனம் நிறையவா!?
போதும் போதும் என்றுதான்
அன்பை கொட்டும் தேவதை
கருப்பு முகத்தில் ஒற்றையாய்
சிவந்து நிற்கும் பொட்டென
உன்னை நானும் சேர்கிறேன்!
உன்னை என்னில் தேடியே
கடந்து போகும் நாட்களில்
என்னை உன்னில் மறைக்கிறேன்
உலகம் வியக்க எழுகிறேன்!
விழுந்து விழுந்து எழுந்துதான்
உந்தன் மடி சாய்கிறேன்!
இன்று பிறந்த குழந்தையாய்
உந்தன் அன்பில் நனைகிறேன்!
மரங்கள் தோறும்
பறந்து திரியும்
சின்னச்சின்னக் குருவிகள்
சிறகு விரிக்கும் அழகினை
நீயும் நானும் காண்கிறோம்!
திறந்த வானம் பறந்துதான்
காதல் கீதம் பாடினோம்
உலர்ந்தமேகம் சென்றுதான்
ஒன்று என்று ஆகிறோம்!
#இளையபாரதி
கட்டி இழுத்துட்டுப்போறபுள்ள
மொத்தசனம் நின்னு...
கண்ணு விரிச்சுப்பாக்குதடி
காத்திலாடும் தாவணி
முகத்தில் மோத யாவும் நீ
ஆகிப்போன தேவியே
மடி சாயவா? மனம் நிறையவா!?
போதும் போதும் என்றுதான்
அன்பை கொட்டும் தேவதை
கருப்பு முகத்தில் ஒற்றையாய்
சிவந்து நிற்கும் பொட்டென
உன்னை நானும் சேர்கிறேன்!
உன்னை என்னில் தேடியே
கடந்து போகும் நாட்களில்
என்னை உன்னில் மறைக்கிறேன்
உலகம் வியக்க எழுகிறேன்!
விழுந்து விழுந்து எழுந்துதான்
உந்தன் மடி சாய்கிறேன்!
இன்று பிறந்த குழந்தையாய்
உந்தன் அன்பில் நனைகிறேன்!
மரங்கள் தோறும்
பறந்து திரியும்
சின்னச்சின்னக் குருவிகள்
சிறகு விரிக்கும் அழகினை
நீயும் நானும் காண்கிறோம்!
திறந்த வானம் பறந்துதான்
காதல் கீதம் பாடினோம்
உலர்ந்தமேகம் சென்றுதான்
ஒன்று என்று ஆகிறோம்!
#இளையபாரதி
No comments:
Post a Comment