Translate

Tuesday, 9 October 2018

பாடல்-ஓ இந்த மாலை!

ஓ! இந்த மாலை...பெண்ணே!
நீ வந்த வேலை
என் நரம்புகள் நடமாடுதே!
ஹே!...நளினத்தில் குயில் பாடுதே!

சிக்கிக்கொண்ட காற்றில்
சில்வண்டு சிறகாடுதே!
சில நேரம் பூக்கள்...
தனனன தலையாட்டுதே!

உயிரோடு மெல்ல
உன் சுவாசம் செல்ல
உடல் இங்கு பனியாகுதே!

பறப்பற பட்டாம்பூச்சி
தொடுத்தொடு தொட்டுப்போக
ஒட்டிக்கொண்ட வண்ணங்களை
ஒத்திக்கொண்ட கண்ணங்களே
என் முத்தங்களை வாங்குங்களே!

ஒருவொரு வெள்ளைப்பூவை
தினம்தினம் காதல் கொண்டு
தேடிச்சென்ற தேன்வண்டுகள்
தேகம் எங்கும் பூ முத்தங்கள்!

கண்டுவிட்ட நானும்
வந்துவிட்டேன் தேடி
எங்கே என் பங்குகள்
மிச்சம் இன்றி தாருங்களே!
தவனைகள் இல்லை
அதில் தவறுகள் இல்லை!

நெடுவயல் யாவும்
நிரம்பிய பச்சை
விழிகளில் விருந்தானதே!

மழை கொஞ்சம் வேண்டும்
மயில் கொஞ்சம் வேண்டும்
இசை இங்கு வேண்டும்
இன்பத்தில் நாம் ஆடலாம்!
இயற்கையை பண் பாடலாம்!

பெண்ணே!
என்ன தயக்கம்
நீ வந்துவிட்டால் தொடங்கும்
பேரின்ப பெரும்பண்டிகை!

#இளையபாரதி

No comments:

Post a Comment