மழைதரும் மாலையே
தூரலாய் பூக்கிறாய்!
சாரலில் நனைக்கிறாய்!
சாலையின் பள்ளங்கள்
இல்லமாய் சேர்கிறாய்!
குடையின் உள்ளேயும்
உறவென வருகிறாய்!
மரங்களை நனைத்தும் நீ
துளிகளாய் உதிர்கிறாய்!
சென்னையில் வெள்ளம்வரும்
எனும் புரளிகள் எழுதியே
புழுக்கம் தருகிறாய்!
ரயிலின் ஜன்னல் வழியே
என்பயணத்தில் உடன்வந்து
உடல் முழுதும் நனைக்கிறாய்!
அலுவல் நாட்களில்
பேருந்துகள் குடை கேட்கின்றன
ஊழல் ஓட்டைவழி
உள்ளேயும் ஒழுகுவதால்!
சாலைப்பள்ளங்கள்
மழைநீரோடு உயிரும்
குடிக்கும் ஆவலில்
அரசியல் வியாதிகளால்!
சாக்கடைகள் வெளிநடப்பு செய்கின்றன
சாலைகள் அரவணைக்கும் தைரியத்தில்!
இத்தனையும் பார்த்துவிட்டே
புதைகிறாய் மண்ணில்
மழையே இன்று நீ எம் மண்ணில்!
தூரலாய் பூக்கிறாய்!
சாரலில் நனைக்கிறாய்!
சாலையின் பள்ளங்கள்
இல்லமாய் சேர்கிறாய்!
குடையின் உள்ளேயும்
உறவென வருகிறாய்!
மரங்களை நனைத்தும் நீ
துளிகளாய் உதிர்கிறாய்!
சென்னையில் வெள்ளம்வரும்
எனும் புரளிகள் எழுதியே
புழுக்கம் தருகிறாய்!
ரயிலின் ஜன்னல் வழியே
என்பயணத்தில் உடன்வந்து
உடல் முழுதும் நனைக்கிறாய்!
அலுவல் நாட்களில்
பேருந்துகள் குடை கேட்கின்றன
ஊழல் ஓட்டைவழி
உள்ளேயும் ஒழுகுவதால்!
சாலைப்பள்ளங்கள்
மழைநீரோடு உயிரும்
குடிக்கும் ஆவலில்
அரசியல் வியாதிகளால்!
சாக்கடைகள் வெளிநடப்பு செய்கின்றன
சாலைகள் அரவணைக்கும் தைரியத்தில்!
இத்தனையும் பார்த்துவிட்டே
புதைகிறாய் மண்ணில்
மழையே இன்று நீ எம் மண்ணில்!
No comments:
Post a Comment