இப்பொழுதுதான் மலர்ந்த மலரென
எப்போதும் வசீகரிக்கும் பேரழகு அவள்!
இரட்டைசடை பிண்ணி
இரண்டுக்கும் இணைப்புவிழா நடத்திய கனகாம்பரம் சூடி
வெள்ளை முகத்தில்
மஞ்சள் நாட்டியம் செய்து
புதுப்பொழிவோடே புன்னகைப்பாள்!
நானும் அவளும்
ஒரே வகுப்புதான் பள்ளியில்!
அவளுடன் ஆவலுடன்
பேசும் வாய்ப்புகளை
தேடிக்கொண்டே இருக்கும் மனது!
மதிய உணவிற்கு வீடு செல்வாள்!
பின் சென்றே பழகியது என் கால்கள்!
அவள் திரும்பும் நேரமெல்லாம்
பற்களின் எண்ணிக்கையை
காட்டி விடுவேன்!(சிரிப்பு)
ஒரு கண் மட்டும்
சிமிட்டும் முயற்சியில்
சேர்ந்து கொள்ளும்
மற்றொரு கண்ணும்!
இரண்டு கண்களையும் சிமிட்டி
அம்பு விடும் ஆர்வம்!
எப்போது தான் என்னை பார்ப்பாள்!??
என்ற கேள்வியால் எப்போதுமே
பார்த்திருப்பேன் அவளை!
அப்பப்போ பார்த்தும் விடுவாள்!
அப்பப்பா பட்டாம்பூச்சிகள்
சிறகு விரித்துவிடும்
என் சிறு இதயத்தில்!
சொக்கட்டான் கல்லும்,
நொண்டி ஆட்டமும்
மாலைநேர தரிசனத்தை
காண செய்துடும்!
இரவிலும் கனவில்
முகம் காட்டிவிடுவாள்!
அது காதல் என்ற இலக்கணத்தில்
சேர்ந்திடாத ஈர்ப்பு!
#Love என்ற வார்த்தையாக மட்டுமே
வாழும் ஒரு பேரானந்தம்!
ஒரு மாலை...
ஊர் நடுவே அடிகுழாய்!
பாட்டி.. ஒரு சிறுகுடம் தண்ணீர்
கொண்டுவர சொல்லியும்
மறுத்து ஓடியவன்!
அவள் அடிகுழாயில் நின்றதை பார்த்தபின்,
3 குடம் தண்ணீருக்கே
நிரம்பிய தொட்டியில்
10 குடத்திற்கும் மேல்
ஊற்றிக்கொண்டு இருந்தேன்-அவளால்!
ஒவ்வொரு நாட்களையும்
உன்னதமாக மாற்றிக்கொண்டு இருந்தால் பள்ளி பருவத்தில்!
இப்போதெல்லாம்...
திருவிழா நாட்களில் காண்கிறேன்-அவளை!
இடுப்பில் ஒன்று, அருகில் ஒன்று என
குழந்தைகளோடு!
முதல் காதல்
இதயத்தில் இப்போதும்
இனிமைதந்தே வாழ்கிறது
யாவருக்கும்!
#இளையபாரதி
Arumai...
ReplyDeleteAwesome start
ReplyDelete