இரவிலே சூரியன் உறவினை சேரும்
வரும் பகலிலே வெறுமையில் கோபங்கள் வெயிலென உமிழும்!
நிலவது விளக்கினை ஏற்றியே செல்லும்
குளுமையை தந்துதான்
உறவின் வெக்கை போக்கும்!
சூரியன் சுடுமென
பூக்களின் மேலே
பனித்துளி சேர்வதாய்
உதடுகள் தேன்துளி நனைத்துதான்
காதலை பேசும்!
அருவியென விழுந்திடும்
தண்ணீர் யாவும்
தபாங்கள் தீர்க்கவே
பூமியில் பாயும்!
புதுஉயிர் பிறந்திடும் பொழுதெல்லாம்
புன்னகை தேசத்தில்
மகுடங்கள் பூக்களை சூடும்!
அந்தியில் வானமும்
மஞ்சளை பூசியே
மங்கலம் சேர்க்கும்!
மீண்டும் வரும் நாட்களும்
இதையே சுழற்றும்!
தேடி தேன்பருகின
காதலின் ஜீவன்கள்!
கண் சிமிட்டி புன்னகைப்போம்
நாளுமே நாமும்!
#இளையபாரதி
வரும் பகலிலே வெறுமையில் கோபங்கள் வெயிலென உமிழும்!
நிலவது விளக்கினை ஏற்றியே செல்லும்
குளுமையை தந்துதான்
உறவின் வெக்கை போக்கும்!
சூரியன் சுடுமென
பூக்களின் மேலே
பனித்துளி சேர்வதாய்
உதடுகள் தேன்துளி நனைத்துதான்
காதலை பேசும்!
அருவியென விழுந்திடும்
தண்ணீர் யாவும்
தபாங்கள் தீர்க்கவே
பூமியில் பாயும்!
புதுஉயிர் பிறந்திடும் பொழுதெல்லாம்
புன்னகை தேசத்தில்
மகுடங்கள் பூக்களை சூடும்!
அந்தியில் வானமும்
மஞ்சளை பூசியே
மங்கலம் சேர்க்கும்!
மீண்டும் வரும் நாட்களும்
இதையே சுழற்றும்!
தேடி தேன்பருகின
காதலின் ஜீவன்கள்!
கண் சிமிட்டி புன்னகைப்போம்
நாளுமே நாமும்!
#இளையபாரதி
No comments:
Post a Comment