சட்டென நீயும்
கண்கள் சிமிட்ட
தொட்டதே வானம்
போதும் போதும்!
உன் கன்னங்கள் மோதும்
காற்றை பிடித்து
சிறையில் அடைக்க
தோன்றும் தோன்றும்!
செவ்விதழ் ஓரம்
பூக்கும் சிரிப்"பூ" எல்லாம்
என்னையே வந்து சேரும் சேரும்!
மாயம் செய்யும் மாலைப்பொழுதில்
மேற்கே சூரியன் மஞ்சள் குளிக்கும்
நீர்துளி ஒன்று உன்னை சேர்ந்து
பொன்னிறமாக முகத்தில் மிளிரும்!
அந்த சிலநொடி...
நான் சிக்கித்தவிப்பேன் பாரடி - நீ
வரும்வழி யாவும் இங்கே
வாசனை பரவும் நுகரடி!
நுனிப்புல் ஆடும் பனித்துளி மேலே
உன் பிம்பம் விழுந்து அதிசயம் ஆகும்!
இந்த காட்சிகள்
காதலை பருகச்சொல்லி
மது கோப்பையில்
மனதை மூழ்க வைக்கும்!
#காதலன்
#அந்திமாலை
#அவளுடன்_நான்
#இளையபாரதி
கண்கள் சிமிட்ட
தொட்டதே வானம்
போதும் போதும்!
உன் கன்னங்கள் மோதும்
காற்றை பிடித்து
சிறையில் அடைக்க
தோன்றும் தோன்றும்!
செவ்விதழ் ஓரம்
பூக்கும் சிரிப்"பூ" எல்லாம்
என்னையே வந்து சேரும் சேரும்!
மாயம் செய்யும் மாலைப்பொழுதில்
மேற்கே சூரியன் மஞ்சள் குளிக்கும்
நீர்துளி ஒன்று உன்னை சேர்ந்து
பொன்னிறமாக முகத்தில் மிளிரும்!
அந்த சிலநொடி...
நான் சிக்கித்தவிப்பேன் பாரடி - நீ
வரும்வழி யாவும் இங்கே
வாசனை பரவும் நுகரடி!
நுனிப்புல் ஆடும் பனித்துளி மேலே
உன் பிம்பம் விழுந்து அதிசயம் ஆகும்!
இந்த காட்சிகள்
காதலை பருகச்சொல்லி
மது கோப்பையில்
மனதை மூழ்க வைக்கும்!
#காதலன்
#அந்திமாலை
#அவளுடன்_நான்
#இளையபாரதி
No comments:
Post a Comment