Translate

Saturday, 19 February 2022

நன்றிக்காணிக்கை!

 யாது வேண்டும்...?யாது வேண்டும்...?

இனி வேறெது எமக்கு வேண்டும்...?!

இத்தனை பெருங்கருணை கொண்டே

இறையென வந்து நிற்கும்...

எம் ஆசான் நல்வாழ்த்துகள்!


எப்படி நன்றி சொல்வேன்...

இத்தனை பேரன்பில்...

எம்மை மூழ்கித்திழைக்க 

வைக்கும் போது...

என் மூச்சுக்காற்றே...

உமக்கு நன்றி சொல்லவே!


மகிழ்வுடன்!


உங்கள் பிள்ளை!

குருவின் அன்பு நிறைந்த...திருமணவாழ்த்து!

 சுக்கிரன் tr

 சட்டக்காரன்பட்டி


திருமணவாழ்த்து


என் அன்பின்

நிறைசேர் செல்வமே........


உன் கவித்திறன்

கண்டு களிப்புற்றேன்......


நான் எழுதிய

மகவு

என்னுள் நீ நுழைய

வைத்திருக்கிறது......

ஆனந்தம் கொண்டேன்

என் அன்பு மகனே.....


இப்போது...

நான் உன்னுள்

மகவாய்

நிற்கிறேன்......


என் உயிர்ப்பில்

எப்போதும்

உன் நினைவுகளே.......


பெரும் ஆலின்

நற்செறிவு விழுதாய்...

நீ...

நிற்பது கண்டு

பூரிப்படைகிறேன்......


அப்போது...

நான் உனக்கு ஆசான்...

இப்போது..

நீ எனக்கு ஆசான்.....


உன் கவிதையை

என் கவிதைக்கு

கருவாய்

கைக்குள் மூடிக் கொள்கிறேன்......


என் அன்பின்

அருட்செல்வமே.....

அடியெடுத்து வைக்கும்-உன்

இல்லறம்

ஓராயிரம் பேருக்கு

நல்லறமாய்

அமையட்டும்......


என் செல்வமே......


உன்

இல்லக்கிளத்தியோடு

எல்லா வளமும் பெற்று...


நீங்கா உறவு.....

மங்கா புகழ்....

அள்ளக்குறையா செல்வம்..


நிறை செல்வம்

குறையா அன்பு....

பதினாறு பேறுகள்

பல பெற்று

அன்போடு

பல 

கோடான கோடி ஆண்டுகள்

நிறைவோடு

நீவிர் வாழ

என்றென்றும்

இறைவனை

வேண்டி நிற்கும்

உன் ஆசான்


சுக்கிரன்அமுதா

சட்டக்காரன்பட்டி..!

இறையாகிய ஆசான்!

 எத்தனை பேரருள்...

இறையாகிய உம் வரிகளில்...

அத்தனைக்கும் தகுதி படைக்க...

அடியேன் எப்போதும் முயல்வேன்...!

இத்தனைக்கும் யான்...

நின் தாழ் ஒட்டிய சிறு தூசு...!


எப்பெப்போதும்...

என்னுள் நீயே இறையாகிய ஆசான்!

பெருங்கடல் குடிக்க

முயலும் சிறுதுளி...யாம்!


இன்று உம் பேரன்பு கடலில்...

கலந்து நிற்கிறேன்...

நின் வாழ்த்து மொழியில்

மகிழ்ந்து பறக்கிறேன்!


ஆயிரமாயிரம் நன்றிகள்...

என்றும் யான் கொண்டே

நிற்பேன்... நின் தாழ் பணிந்து...!


நின் தாழ் பணிந்து...

உம் அன்பையும்...ஆசிகளையும்

இல்லத்துணையோடு ஏற்கிறேன்!


மகிழ்வுடன்...


இளையபாரதி ஹரிஹரன்

நன்றி மடலும்...அன்பு அழைப்பும்!

 செங்கழனி தேடி விழும் வித்து

செங்கதிர் நீட்டி வளர்ந்து நிற்கும்

ஆயினும் அதன் சிறப்பெல்லாம்

செங்கழனி கொண்ட சிறப்பே!


செங்கதிரோன் பாய்ச்சிய ஒளியில்

துளிர் விட்ட தளிர் ஒன்று

விருட்சமானது "சுக்கிரன்"

பார்வை பட்டதால்!


ஏதுமற்று இருந்தநாளில்

தூதுவனாய் வந்த கல்விஆசான்!

கல்விசாலை பாடம் சொல்லி

கடமை முடித்து செல்லாது

வாழ்க்கை பாடம் சொல்லி

வழித்துணையாய் வாழும் ஆசான்!


வரப்பின் எல்லை தாண்டும்

கிளையை கிள்ளி வைத்து

நல்வழி சொல்லி 

நடைபயில வைத்த நன்னெறி உமது!


ஆறாம் வகுப்பு பையனாய்

இருக்கும் போது

ஆறாம் அறிவை தூண்டி

வார்த்தை மலர்களை

கவி மலர்களாக மாற்ற வைத்தீர்!


மகவு எனும் நின் கவிதை

தந்து என் கவிதை முளைக்க வைத்தீர்!

இதோ இன்று என்னுள்

மூவாயிரம் கவிதைகள் 

இணைய பக்கம் எங்கும்

உலவி நிற்கிறது உம் பெயர் சொல்லி!


இதோ இன்று இச்சிறு மகவும்

மனிதனாய் மாறி

மற்றொரு வாழ்வை தொடங்க

இருக்கிறது..மண மேடை ஏறி!

மனம் நிறைந்த பெண்ணை

மாலை சூடி மாங்கல்யம் கட்டி

மங்கள மண விழா காணும்

எம்மை உம் மனம் நிறைந்து

மகிழ் வாழ்த்து பொழிய

நின் தாழ் பணிந்து 

அன்பு நிறைத்து

மகிழ்வுடன்...

அழைக்கின்றேன்...!


வாருங்கள்...அன்பு கொண்டே வாழ்த்துங்கள்...

உம் மகவை!

🙏💐👏🏻🤝🏻


மதிப்புடன்...

ஹரிஹரன்

Thursday, 30 December 2021

வழிவிடும் முருகன் திருப்புகழ்

 மார்க்கம்பட்டி மண்ணில் வாழும் வேல்முருகையா...

மக்களை காத்தருளும் வேல்முருகையா...

ஊர் நடுவே கோயில் கொண்டாய் 

வேல் முருகையா...

உலகையே காத்தருளும் வேல்முருகையா..


உமையாள் திருமகனாம்...

வேல்முருகையா...

உலகெங்கும் உன் புகழே..

வேல்முருகையா...

காவடிகள் தூக்கி வந்தோம்

வேல்முருகையா...

கால் நடையாய் நடந்து வாறோம்

வேல்முருகையா...

கண்கொள்ளா காட்சி தர

வேல்முருகையா...

கண்ணெதிரே நீயும் வேண்டும்

வேல்முருகையா...


கஷ்டங்களை போக்கிடவே

வேல்முருகையா...

கந்தனாக நீயும் வேண்டும்

வேல்முருகையா...


மார்க்கம்பட்டி மண்ணில் வாழும் வேல்முருகையா...

மக்களை காத்தருளும் வேல்முருகையா...

ஊர் நடுவே கோயில் கொண்டாய் 

வேல் முருகையா...

உமையாள் திருமகனாம்...

வேல்முருகையா...


உலகெல்லாம் செழித்திடவே...

வேல்முருகையா....

மயிலேறி வர வேண்டும்

வேல்முருகையா....

கொரோனோ ஒழிந்திடவே

வேல்முருகையா....

கொற்றவனாய் நீயும் வேண்டும்

வேல்முருகையா...


தைப்பூச திருநாளில்

வேல்முருகையா...

ஊரெல்லாம் உன் பவணி

வேல்முருகையா...

உன்னையே கண்டிடவே...

வேல்முருகையா...

பக்தரெல்லாம் ஒன்றுகூடி..

வேல்முருகையா...

தென்பழனி நோக்கி வாறோம்

வேல்முருகையா...

துணையாக நீயும் வேண்டும்

வேல்முருகையா...


வா.. வா..வா..வேல்முருகையா...

வந்தெம்மை காத்தருள்வாய்...

வேல்முருகையா...

வழிவிடும் முருகனாக...

வேல்முருகையா...

வந்தெம்மை காத்தருள்வாய்...

வேல்முருகையா...


மார்க்கம்பட்டி மண்ணில் வாழும் வேல்முருகையா...

மக்களை காத்தருளும் வேல்முருகையா...

ஊர் நடுவே கோயில் கொண்டாய் 

வேல் முருகையா...

உலகையே காத்தருளும் வேல்முருகையா..

Sunday, 14 November 2021

கடவுளுக்கு ஒரு கடிதம்!

 

                     கடவுளுக்கு ஒரு கடிதம்!

 

                எங்கெங்கும் நீ இருக்கின்றாய் என்பதை எப்போதுமே உணர்ந்தவன்.என் எண்ணத்தில்...

நீ உறைகின்றாய்என் செயல்களில் நீயே நிறைகின்றாய் இறைவா என இப்போதும் உரைப்பவன்.

ஆனபோதும் உன்னோடு முறனுண்டு எனக்கு!

                பகல் கனவாய் மாறி என்னை இம்சித்து இருக்கின்றது திருமண தடை.. இத்தடையும்  அகன்றிடவே, ஆயிரமாயிரம்... ஆண்டுகள் பெருமை கொண்ட மதிரையம்பதியை அன்னையாய் ஆட்சி செய்யும் அம்மை மீனாட்சியின் பாதம் பணிந்து வேண்டுதல் வைக்க... பல முறை முயன்றும் அன்றுதான் நல்வாய்ப்பு வாய்த்தது. இறைவா உன் முன்னர், புழு பூச்சி முதல் பெரும் மன்னர் வரை அனைவரும் சமம் என்று நினைக்கின்றேன். ஏனெனில் இவை யாவற்றையும், படைத்து, காப்பவன் நீயன்றோ! அதுவும் மெய்யன்றோ! 

                அதனால், எப்போதும் எந்த முன்னுரிமையையும் பணம் கொடுத்து பெற்றுவிடாமல், அனைவரும் சமம் என்று பொது தரிசனத்திலேயே..  உன்னை கண்டுமகிழ கொள்கைகொண்டவன். அன்றும் அப்படித்தான், நானும் குடும்பமும்..பொது தரிசனத்திற்காக சிலமணிநேரம் உன் பாதங்களின் அருகே காத்துக்கிடந்தோம். நடை திறந்தது... மெதுவாக நகர்கின்றது கூட்டம். எண்ணமெல்லாம் உன்னையே தாங்கியபடி நகர்கின்றேன். மனபாரம் கண்ணீராய் உன்முன்னர் கசிகின்றது. என்னோடு தங்கையின் சிறு குழந்தை... பக்குவமாய் அழைத்துக்கொண்டு உன்னை தரிசிக்கும் பாதை அடைந்தேன். என் சிந்தனையில் நீக்கமற நீயே நிறைந்து இருந்தாலும், உன்னையையும் என் சிந்தையில் இருந்து விரட்டி அடிக்கச்செய்யும் படியாக இரு அநியாயக்குரல்கள்.

                 ம்...ம்‌..ம் .. சீக்கிரம் போங்க.. ஏம்மா நகரும்மா.... ஏய்... வேகமா வா...

என காதுகளில்  கடப்பாரையை செருகிக்கொண்டு இருந்தன.  சிறு குழந்தையும், நானுமாய் உண்டியலில் மிகச்சிறு காணிக்கையை செலுத்த எத்தனிதோம்.

                ஏய்..சீக்கிரமா நகருங்க....  வாம்மா... வாம்மா.... சீக்கிரம்..போ...போ...

என எங்களையெல்லாம் விரட்டி அடித்துக்கொண்டு இருந்தது. உன் பாதம் கண்டு.. பெருமகிழ்வு கொண்டு... என் கண்ணீரெல்லாம் உன் முன்னர் காணிக்கையாக்கிட வேண்டியவன்.... ஆனால் மனமெங்கும் பெரும் வேதனை.உன் முகம் பார்த்தும்...அதை மனதில் நிலைநிறுத்த இயலாவண்ணம் இந்த குரல்கள் எங்களை கொடுமை செய்கின்றதே என்று...மீண்டும் மீண்டும்... ஆத்திரம்.

                 “ஏனைய்யா.... இப்படி விரட்டுகிறீர்கள்... சில மணித்துளிகள் தானே எம் அன்னையை பார்க்கின்ற பாக்கியம் எங்களுக்கு. இப்படி அணுவளவும் அன்பற்று எம்மை துரத்தி அடிக்கின்றீர்கள். இறைவன் திருக்கோயிலிலே கூட சிறு அன்பும் அற்றவராய் எம்மை துரத்துறீங்க” என்றேன். எல்லாம் உங்களை எல்லோரையும் சாமி தரிசனம் பார்க்க வைக்கத்தான் “என்றார்.

                 ஆனால் கொடுமை என்னவென்றால்...என் இறைவனின் தரிசனத்தை கெடுப்பதே அவர்கள் தான். மனம் வேதனையில் உறைகின்றது. காரணம்... அந்த கனத்திலே கூட.. சில பேர், அதிகாரியின் துணை கொண்டு.. கருவறைக்கு அருகிலே... இறைவனை தரிசிக்கின்றனர். இன்னும் பலபேர் கட்டண தரிசனம் எனும் பெயரில்.. பொறுமையாக இறைவனை காண்கின்றனர். நாங்களோ மனம் நிலைகொள்ள கூட அவகாசம் இன்றி விரட்டி அடிக்கப்படுகின்றோம். இறைவா இவையாவும் உன் முன்னர் தானே நடக்கின்றது.... ஏன்... இத்தனை முரன்கள்! ஏன் இந்த அதர்மம்!

                 என்னைக்கேட்கலாம்...” வேண்டுமானால் நீயும் பணம் கொடுத்து செல்ல வேண்டியதுதானே என்று. என்னிடமும் பணம் இருக்கின்றது தான்... நானும் கொடுத்து சுகமாக தரிசனம் செய்யலாம் தான். ஆனால் அப்போதும் கூட... என் அருகிலே இன்னொரு நபர்... பொது தரிசன பாதையில் விரட்டி அடிக்கப்படுவாறே! அவருக்சகு என்ன பதில்.? கட்டண தரிசன பாதையையும் , சிறப்பு சலுகை பாதைகளையும் பொதுவாக்கினால் என்ன? அப்போது தானே ஒரு சமநிலை உண்டாகும். அப்போது தானே... நீ அனைவருக்கும் அன்னை. இரு குழந்தைகளில்.. ஒரு குழந்தைக்கு...பாலும் ஒரு குழந்தைக்கு தண்ணீரும் எந்த அன்னையாவது கொடுப்பாளா ? நீயும் அப்படித்தானே... !

                 இந்த அநியாயங்களெல்லாம்... உன் கண் முன்னர் நடக்கின்றதே இறைவா? எப்போது தீரும்... இந்த அவல நிலை? அன்னைக்கும்.... பிள்ளைக்கும் நடுவே யார் இந்த இடைத்தரகர் கூட்டம்?

200 வை...200 வை என உன் அருளை.. உன் கருணையை கடைச்சரக்காக்கி... உன் முன்னரே ஏலம் விடுகின்றனரே? இந்தத்தரகர் கூட்டத்தின் கொட்டம் எப்போது மடியும்? கோவில்களில் மட்டுமா நீ இருக்கின்றாய்? கொடி இலையிலும்... மலர்ந்த மலரிலும்... வீசும் காற்றிலும்.... விரிந்து கிடக்கும் நிலத்திலும்... பறந்து கிடக்கும் ஆகாயத்திலும்.... கண் எதிரே படும் காட்சிகள் யாவிலும் நீ... இருக்கின்றாராய்... நீயே இருக்கின்றாய்! ஆனபோதும் என்ன செய்ய... ஒரு அறம் அற்று உன் கோவில்கள் இயங்கின்றனவே? சாதியில் உயர்ந்தேன் என அவர்களே சொல்லிக்கொண்டு... உன் அங்கம் தீண்டும் உரிமையில் எம்மை துரத்தி அடிக்கின்றனர். உன் அருளையெல்லாம்... மொத்தமாய் குத்தகைக்கு எடுத்தார் போல... மிரட்டும் வண்ணம்... காசு கேட்கின்றனர்...

             இவை யாவிலும் என்ன இருக்கின்றது தெரியுமா இறைவா? உன் மீதான பயம். உன் மீதான எங்களின் நம்பிக்கையை...விரட்டி அடித்துவிட்டு... உன் மீதான பயத்தினை எம்மீது திணித்து.... எங்களை ஏமாற்றுகிறது ஒரு கூட்டம்.

                 உன் அருளை யான் பெறவே...

                அனுமதிச்சீட்டும் வேண்டுமோ!

                என் மனமே நீ அமர

                இடைத்தரகரும் வேண்டுமோ?

                பேரொளியாய் நீ இருக்க

                பெருங்கருணை கொண்டிருக்க

                உன் திருஉருவம் கண்டிடவே

                காசு பணம் வேண்டுமோ?

                ஆலயம் யாவிலும்  

                அந்தணர் மட்டுமே

                உன் அருகே வேண்டுமோ?

                உன் மகவே நான் என்றால்

                என் உரிமை போனதெங்கே?

                பொன் பொருளும் இருக்குமிடம்

                 சுகமென்றே நீ சென்றால்

                என் மனமே ரனமென்று

                இருந்திடத்தான் வேண்டுமோ?

                எப்போதும் உன் முன்னர்

                யாவருமே ஒன்றுதான்...

                என்பதெல்லாம் உண்மையென்றால்

                அன்பு செய்யும் திரு மனமே

                நீ இருக்க வேண்டுமே...!

                அதிகார எல்லையெல்லாம்...

                அகங்கார சிந்தையெல்லாம்

                நீ உடைக்க வேண்டுமே!

                எப்போது செய்திடுவாய்

                பதில் ஒன்றும் வேண்டுமே!

                இப்போதே நீதி வேண்டும்

                பதில் ஒன்றும் தந்திடுவாய்...

                எதிர்பார்த்தே எழுதுகின்றேன்

                இக்கடிதம் நானுமே!

                இறைவா...

                அனுப்புகிறேன்.....

                கடவுளுக்கு ஒரு கடிதம்!  

 

                #இளையபாரதி.

Wednesday, 6 May 2020

அரசுகளின் கொரோனா கொடுமைகள்

கொரோனா காலத்திலும்
கோடான கோடியப்பா
காசுபணம் வேணுமுன்னு
கவர்மெண்டு நெனைக்குதப்பா
காச கொஞ்சம் ஏத்திவச்சு
சாராயம் விக்கிதப்பா

காவல்துறையை பாரு...
அது காவலுக்கு ஆளு..
மரம் குச்சி கட்டியாச்சு
வாழமரம் கட்டியாச்சு...
சந்தனம் பொட்டும் வச்சு
மாலை கூட போட்டாச்சு

ஊரடங்கு காலத்திலும்
மது அடங்க போறதில்லை
ஊடகம் எல்லாம் இங்கே
விளம்பரமும் கொறையவில்லை

கூட்டம் கூடும் பாரு
இனி கொரோனாதான் கேளு
அடுப்பெரிக்க காசில்லைன்னு
ஆயிரம் கொடுத்தாங்க...

கொடுத்தத வரவு வைக்க
கடையெல்லாம் தொறந்தாங்க
கவர்மெண்டு வருமானம்
இனி உசுரெல்லாம் அடமானம்!

மத்திய அரசுன்னு
பேரு இங்க இருக்குதுங்க
வரிய ஏத்த மட்டும்
அந்த கவுலி கத்துமுங்க

பெட்ரோல் டீசல் காரு
அது வரிய குடிக்கும் பாரு
ஆபத்து காலத்திலும்
booking charge விட்டதில்லை
ரயிலு ஏறிப்போக
கட்டணமும் குறைக்கவில்லை

பேசும் பொய்ய பாரு
அது எத்தன அழகு பாரு
பாராட்டு சொல்ல நீங்க
பால்கனிக்கு போகனுங்க
விமானம் மலர் தூவும் அழகை
கைய தட்டி ரசிக்கணுங்க

இதுக்கு மேல
வேற என்ன நன்மை
நம்ம மத்திய அரசு செய்ய
மூச்சு விட்டாக்கூட
வரிய நீங்க கொடுக்கணுங்க
முட்டிக்கின்னு நின்னாக்கூட
திருப்பி ஏதும் கேக்காதீங்க

எத்தனை சிறப்பு பாரு
அதுக்கு இந்தியாதான் பேரு
எதுத்து பேசாதிங்க
தேசபக்தி மீறாதிங்க!

நம்மளோட அரசுபோல
கைய நல்லா களுவனுங்க
தள்ளி நாமும் நிக்கனுங்க!
அம்புட்டு தானுங்க கொரோனா
going கொரோனா!
Go go கொரோனா

#இளையபாரதி

Saturday, 2 May 2020

வாரிச்சுருட்டிய வடக்கும்... கொடுத்தே தேய்ந்த தெற்கும்!

ஆண்டாண்டு காலமாக இந்தியாவை ஆண்டவரெல்லாம்... அள்ளி அள்ளிக்கொடுத்தும் வடக்கு... நன்றாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. இன்றைக்கும் நன்றாக வாழவேண்டும் என்றால்... வடநாட்டு சேட்டுகள், ராஜஸ்தானிகள், ஏன் லட்சோப லட்சம் அடிப்படை கூலிகளின் தேர்வுகூட தென் இந்தியாவாகத்தான் இருக்கிறது.
அதிலும்.. தமிழ்நாட்டில் தான் அதிகம் என்றால் மிகையாகாது.

ஏனென்றால்...இங்கே உழைப்பை...சமத்துவத்தை...
சுயமுன்னேற்றத்தை மட்டுமே கொண்ட மக்கள் வாழ்கின்றனர்.சாதி, மதம் போன்ற உணர்வுத்தூண்டல்களுக்கு பெரும்பான்மை சமூகம் இடம் கொடுப்பதில்லை.

இத்தனைக்கும்...ஏராளமான வரிப்பங்களிப்பை தென்மாநிலங்கள் அளித்தும் அவை பேரிடர் காலங்களில் கூட அவற்றை திரும்ப பெற
இயலவில்லை.ஆனால்...அவற்றின் பெரும்பங்கை வாரி சுருட்டிய
வடமாநிலங்கள், அவற்றை வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தவில்லை.

வெறுமனே...மதரீதியிலான உணர்வுதூண்டல்களிலும்...பகட்டு விளம்பரம் எனும் ஏமாற்று வேலைகளிலும் மட்டுமே அவை வீணடிக்கப்பட்டன்.

திருட்டு திராவிடம் என வடக்கத்திய சங்கீகளும்..அவர்களோடு சேர்ந்த தெற்கு மங்கிகளும் கூறிக்கொள்ளும்....
திராவிடகட்சிகளின்
ஆட்சிகாலத்தில் தான்...
சாலைபோக்குவரத்துக்கு, சமூக..பொருளாதார கட்டுமானங்கள் சிறப்பாக உள்ளன.

மேலும்...IT மற்றும் இதர தொழிற்துறை , மருத்துவத்துறை, ரேஷன்..
போன்றவற்றின் கட்டுமானமும்...கிராமங்கள் வரையிலான அதன் பரவலாக்கமும் சிறப்பாக உள்ளது. அதுவே பேரிடர் காலங்களை சமாளிக்கும் திறனை அளிக்கின்றன. இத்தனைக்கும்...தன் வருவாயில்.. முக்கால் பங்கிற்கும் மேல் இந்திய தேசத்தின் வாயில் கொட்டிய பின்னரும் சாதித்துகாட்டப்பட்டவை இவைகள்.

ஊழல்வாதிகள் என காலம்காலமாக பச்சை குத்தப்பட்ட திராவிட கட்சிகளின் ஆட்சிகளில் சாதிக்கப்பட்டதில்...10 இல் 1 பங்கு வளர்ச்சியை, சமூக கட்டமைப்பைக்கூட நேர்மையின் பிறப்பிட வாதிகள் என புகழப்படும் சங்கீகளின் ஆட்சிகள் சாதிக்கவில்லை.

அதில் ஒரு உதாரணம்...இன்றைக்கு தூய்மை இந்தியாவில் தரமற்று கட்டப்படும் கழிப்பறைகளை பெருமைபேசும் கூட்டம்...25 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்நாட்டில்
தரமாக கட்டப்பட்டு இன்றைக்கும் புழக்கத்தில் உள்ள கழிப்பறைகளை மறந்துவிடுவர்.

இத்தனை வரி இழப்புகளுக்கு பின்னரும் சாலைகள், பொது போக்குவரத்து, மருத்துவம், பேரிடர் கால நிவாரணம் ஆகியவற்றில் தென் இந்தியாவே முதன்மையாக உள்ளது.
ஆனால்..வடக்குதேசம் வெறுமனே அட்டைப்பட விளம்பரமாக மட்டுமே உள்ளது. புத்தகத்தின் உள்ளே பொய்புரட்டுகளின் ஒட்டடை மட்டுமே.

இறுதியாக ஒரே சவால்...திராவிட ஆட்சிகளின் மீது இத்தனை குறை கூறும்...சங்கீ மார்க்க... சேட்டுகள், ராஜஸ்தானிகள், அடிப்படை கூலித்தொழிலாளிகள்... இன்னமும் ஏன் இங்கே தொழிலை , வாழ்வாதாரத்தை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். அதைவிட சிறப்பாக உள்ள... ராமராஜ்ஜிய மாநிலங்களுக்கு செல்லலாமே...!?

செல்ல மாட்டார்கள்..ஏனென்றால்... கவர்ச்சி புகைப்படத்தை மட்டும் வைத்துக்கொண்டு குடும்பம் நடத்த முடியாது.கருப்போ...மாநிறமோ...
எதார்த்ததில் இருக்கும் மனிதரோடு மட்டுமே வாழ முடியும்.

ஊழல் என்று சொல்லப்பட்டாலும் ...
இங்கே ஆரம்ப சுகாதார மருத்துவமனைகள் நிஜமாகவே உள்ளன. நேர்மை என்று சொல்லிக்கொண்டாலும்... கோடிகளில் காட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் இன்னமும் காலி இடங்களாகவே உள்ளன.

அப்புறம்... திராவிட கட்சிகளில் எந்த குறையும் இல்லையா என்று நீங்கள் கேட்கலாம்...அதை நாங்கள் சரி செய்துகொள்கிறோம்...

நீ போயி...வெளக்கேத்தி..கைதட்டுர வேலையப்பாரு...ராஜா எங்களுக்கு...நிஜமாகவே நிவாரணம் கொடுக்கும் வேலை இருக்கு...!

இறுதியாக ஒன்னே ஒன்னு..
இன்னமும்... வெறுமனே photoshopஇல் வாழாதீங்கடா... நிஜத்திற்கும் கொஞ்சம் வாங்கள்...!

#இளையபாரதி

Saturday, 11 April 2020

கொரோனா..கொலைகாரனா!?

விண்ணைத்தாண்டி
விளையாடி
வந்துவிட்டோம்
என்று கூறிய மானுடம்
வாசல்வர இயலாது தவிக்கிறது!

அணுஆயுதம் தாங்கிய
ஏவுகணைகள் ஏராளம்
என்றே
கொக்கரித்த ஏகாதிபத்தியம்
ஏனோ இன்று
இறப்புகளை
எண்ணிக்கொண்டு இருக்கிறது!

அனைத்து உயிர்களுக்கும்
அடிப்படை உரிமையாய்
இயற்கை ஏராளமாய்
கொடுத்தே இருக்கிறது!

ஆனால்...
என்ன செய்ய
மனிதக்கூட்டம் மட்டுமே
அதை அபகரித்துக்கொண்டது!

இயற்கையின் கற்பை
இயன்றவரை சூராடியே
வைத்து இருக்கிறது மனிதம்!
எல்லாம் வென்றாகிவிட்டது
என்றே சொல்லிக்கொண்ட தருணத்தில்
தனி ஒருவனாய்
வந்து நிற்கிறான்
கொரோனா!

இயல்பை தொலைத்து
ஓடித்திரிந்த கூட்டம்
இன்று...
ஒதுங்கி நிற்கிறது!
உயிருக்கு அஞ்சி நிற்கிறது!

வாழ்க்கை எதுவென்று
வாத்தியாராய் பாடம் சொல்கிறதோ
கொரோனா!
வீட்டுக்குள்ளே இன்றுதான் நாம்
உறவுகளை
தேடிக்கொண்டு இருக்கிறோம்!

இயற்கையின் இன்னபிற
பிள்ளைகளாம்
விலங்குகள்...பறவைகள்...
மரங்கள்...மலைகள்...
ஆறுகள் அருவிகள்...யாவும்
இப்பொழுதுதான்
தன் வாழ்வை தொடங்கி
இருக்கின்றன!

இதோ இந்த கொரோனா
பேரழிவை மட்டும் தரவில்லை...
மனிதம் தொலைத்த
பெரும் பொக்கிஷங்களை
சமிக்கையால் காட்டிக்கொண்டு
இருக்கிறது!

இனியேனும்...மானுடம்...
இயற்கையோடு
இணைந்து வாழட்டும்!
உயிர்கள் யாவற்றிற்கும்
உலகம் இதுவென
உணர்ந்து வாழட்டும்!

விரட்ட வேண்டியது
கொரோணாவை மட்டுமல்ல
இயற்கைக்கு எதிரான
நம் செயல்களையும் தான்!

இன்னல் கடந்து வெல்வோம்
இனியும் நாம்
இன்னல் கடந்தும் வெல்வோம்!
தனித்து நின்றும்
இணைந்தே வெல்வோம்...!

Thursday, 9 April 2020

சாரல் வீசி... சன்னல் நுழைகிறது... மழை!

வெந்து தகிக்கும் கோடை வெயிலில்
வியர்வை ஊற்று எழுந்து கிளம்பி
அனுமதி பெறாமலே
நம்மை குளிக்கவைக்கிறது...
வெப்பம்!

அதிகாலை முதலே...
சூரியன்...
சற்று போதைக்காரனாய் உலவிட
மேகக்கூட்டங்கள்...
காற்றோடு சேர்ந்து பகடி செய்கிறது!

கொரோனா காலம் என்பதால்
பேய்பிடித்த அபலையென
தென்னை மரங்கள்
தலையை விரித்து ஆடுகிறது...

சுழன்று அடிக்கும்
காற்றின் கட்டளைக்கு
கதவும் சன்னல்களும்
அடித்துக்கொள்கின்றன!

வெளிச்சத்தை விழுங்கி
இருள் ஒன்று இருமாப்பு கொண்டே
உலவித்திரிகிறது!

குளிர்காற்று வந்து
நண்பனாக நம்மிடையே
கை குலுக்கி மெய் சிலிர்க்க வைக்கிறது!

ஓ!
பாருங்கள்...அந்த பெருமழையை...
அகந்தை இன்றி கீழ்விழுகிறது!
மேகங்கள் உடைந்து
பன்னீர் தெளிப்பதாக
குளிர் மழை பெய்கிறது!

நனைந்து சிலிர்த்த
தென்னைமரங்கள்
கூந்தல் உலர்த்துகிறது போலும்!
தோகைகளை பறக்கவிட்டு
சலசலக்கிறதே!

ஆகா!...
வெந்து தணிக்கும்
கோடை அரக்கனிடம் இருந்து
விடுதலை தருவதாக...
வாசல் வரை வந்து சொல்கிறது...
மழை...
ஆம்..மழை...
இதோ எம்முன்!
சாரல் வீசி...
சன்னல் நுழைகிறது...
மழை!

#இளையபாரதி

Monday, 6 January 2020

வில்லுப்பாட்டு

Singer: (Sing) :
தந்தனத்தோம் என்று சொல்லியே... வில்லினில் பாட

Chorus : ஆமா...

Singer:(Sing)
வில்லினில் பாட ...
வந்தருள்வாய்கணபதியே!

Chorus: (Sing)
வந்தருள்வாய்கணபதியே!

Singer: (Sing)
வந்தனம்வந்தனம் வந்தனமே
வந்தசனமெல்லாம்
குந்தனும்குந்தனும் குந்தனுமே!

Chorus : (Sing)
ஆமா...
குந்தனும் குந்தனும் குந்தனுமே!

Singer :(Talk) அதாகப்பட்டது...மகா ஜனங்களே...
இன்னைக்கு என்ன விசேஷம் தெரியுமா?

Chorus:(Talk)
என்ன விசேஷம்...?

Singer : (Talk)
நம்ம HTC கம்பெனியிலே...

Chorus: (Talk)
ஆமா.... HTC கம்பெனியிலே...

Singer :  (Talk)
வருஷமெல்லாம் உழைச்சு...கழைச்சு.... நமக்கு வயிறா...ர...
சோறு கொடுக்கிற விவசாயிக்கும், அப்பேற்பட்ட விவசாயிக்கே
உதவியா இருந்த
ஆடு, மாடு, கோழி எல்லாத்துக்கும்
ஒரு பெரிய நன்றிய தெரிவிக்கிற பொங்கல் கொண்டாட்டம்... !

Chorus : (Talk)
 ஆகா...பொங்கல் கொண்டாட்டமா...

Singer :  (Talk)
நாமளும் ஒரு நன்றிய சொல்லிடுவோமா...

Chorus:(Talk)
 சொல்லிடுவோம்...

Singer : ( Sing)
 நன்றி ஐயா..நன்றி ஐயா...
நாங்களும் சொல்லுறோம்...
நன்றி ஐயா..நன்றி ஐயா...

Chorus : ( Sing)
ஆமா...
நாங்களும் சொல்லுறோம்
நன்றி ஐயா..நன்றி ஐயா...

Singer : (Sing)
பொங்கலோபொங்கல் என்று நாமும்
பாட்டுப்படிக்கிறோம்... பாடுமைய்யா!

Chorus: (Sing)
ஆமா...
பாட்டுப்படிக்கிறோம்... பாடுமைய்யா!

All : (Loud) பொங்கலோ பொங்கல்!

Chorus : (Talk)
சரி...இவ்ளோ பெரிய திருவிழா...
இன்னைக்கு வேற என்ன specialல்லாம்  இருக்கு.?

Singer: (Talk)
இருக்கே...
நம்மளோட இந்த பொங்கல் கொண்டாட்டத்துல...
தேவலோக ரம்பை, ஊர்வசி, மேனகைனு
இருக்கிற நம்ம அழகான பெண்கள்...

Chorus : (Talk)
என்னது அழகான பெண்களா..

Singer: (Talk) : அட...ஆமையா...
அந்த அழகான பெண்கள் தான்...

Singer(Talk) : ஒரு 10 15 கிலோவில...
கடலைமாவை பூசிக்கிட்டு...

Singer(Sing) : ஒரு 10 15 கிலோவில...
கடலைமாவைதான் பூசிக்கிட்டு...

Chorus : (Sing)
ஆமா...
கடலைமாவைத்தான் பூசிக்கிட்டு...

Singer :  (Sing)
SALT and Pepperu கோஷ்டி எல்லாம்
கருப்புச் சாயத்தைப் பூசிக்கிட்டு

Chorus : (Sing)
ஆமா...கருப்புச் சாயத்தைப் பூசிக்கிட்டு

Singer : (Sing)
வேஷ்டிய ஏத்தி கட்டிக்கிட்டு

Chorus :  (Sing)
ஆமா...வேஷ்டிய ஏத்தி கட்டிக்கிட்டு

Singer : (Sing)
மானாட்டம்...மயிலாட்டம்
சிலம்பாட்டம் ஒயிலாட்டம்...
அடப்போறத பாருமையா..

Chorus : (Sing)
ஆமா...அடப்போறத பாருமையா..

Singer : (Sing)
ஒய்யாரமா வருதையா...
ஒயிலாட்டம் இப்போ வருதையா...

Chorus:  (Sing)
ஆமா...
ஒயிலாட்டம் இப்போ வருதையா...

=============ஒயிலாட்டம்===========

Chorus : (Talk)
ஆகா.ஆகா...ஆட்டம்னா ஆட்டம் அசதிப்புட்டாக போங்க..

Singer :  (Talk)
அட..இதுக்கே அசந்தா எப்படி...
அடுத்து வர்றது என்ன தெரியுமா...

Chorus :  (Talk)
அப்படி என்னப்பா புதுசா வருது?

Singer:  (Talk)
நம்ம சொப்பனசுந்தரி வச்சுருந்த...

Chorus :  (Talk)
என்னது...சொப்பன சுந்தரியா...

Singer : (Talk)
அட சொப்பன சுந்தரி வச்சிருந்த...
காருல இருந்து ஏறங்கிவர்றத சொன்னேன்...

Singer : (Sing - speed)
இந்தா..வர்றாக வர்றாக வரிசை கட்டி
சொப்பன சுந்தரி காரு ஓட்டி

Chorus : (Sing)
ஆமா...சொப்பன சுந்தரி காரு ஓட்டி

Singer : (Sing - Speed)
காலோடு சலங்கை இறுக்கிக்கட்டி கரகமாட வர்றாக..

Chorus : (Sing - speed )
ஆமா..கரகமாட வர்றாக..

Singer : (Sing - Speed)
மயிலிறகு கட்டிக்கிட்டு
மயிலாட்டம் ஆட வாறாக...

Chorus : (Sing)
ஆமா...மயிலாட்டம் வாறாக...

========கரகாட்டம் + மயிலாட்டம் ======

Singer : (Talk)
இப்படியாக... சிறப்பா
நடந்துக்கிட்டு இருக்கிற நம்ம
பொங்கல் கொண்டாட்டத்துல...
அடுத்து வர்றது என்ன தெரியுமா!??

Chorus : (Talk)
அதையும் சொல்லிடுங்க தெரிஞ்சுக்குவோம்...

Singer : (Sing)
பன்னெடுங்காலமா...
பாட்டனும் பூட்டனும்...

Chorus: (Sing)
ஆமா...
பன்னெடுங்காலமா...
பாட்டனும் பூட்டனும்...

Singer : (Sing)
வீரத்தை சொல்லி வளர்த்தகலை

Chorus : (Sing)
ஆமா...
வீரத்தை சொல்லி வளர்த்த கலை...

Singer: (Sing)
வித்தையை காட்டும் ஆட்டத்தோட

Chorus: (Sing)
ஆமா...
வித்தையை காட்டும் ஆட்டத்தோட

Singer : (Sing)
சிங்கமா...இங்க..சிலம்பாட்டம்
சிங்கமா...இங்க..சிலம்பாட்டம்...
ஆடிக்காட்ட வர்றாக...

Chorus : (Sing)
ஆமா...ஆடிக்காட்ட வர்றாக...

==========சிலம்பாட்டம்=========

Singer : (Talk)
ஆகா..அருமையான சிலம்பாட்டம்ல..

Chorus : (Talk) அருமை...அருமை...

Singer : (Talk)
இது மட்டுமா...
பொங்கல் கொண்டாட்டத்துல
இன்னும் சிறப்பான ஆட்டம்லாம் இருக்கே...
அடுத்ததா வர்றது என்ன தெரியுமா?

Chorus : (Talk)
அதையும்தான் சொல்லிடுங்க...
மக்கள்லாம் ஆர்வமா இருக்காங்கள்ல..

Singer : (Sing)
ஆதித்தமிழன் பரம்பரையில்
ஆண்டுவந்த ஒரு இசையாம்

Chorus : (Sing)
ஆமா..
ஆண்டு வந்த ஒரு இசையாம்...

singer : (Sing)
எந்த நாட்டு கால்களுமே
எழுந்து ஆடும் பறைஇசையாம்

Chorus : (Sing)
ஆமா...
எழுந்து ஆடும் பறைஇசையாம்

singer : (Talk)
அப்பேற்பட்ட பறை இசையோட
நம்ம தப்பாட்ட குழுவினரும்...
இது மட்டும் போதுமான்னு
நம்ம டிஸ்கோ டான்ஸ் பார்ட்டியும்ல
வந்து அசத்த போறாங்க...

Singer : (Sing)
வர்றாங்க வர்றாங்க தப்பாட்டம் வர்றாங்க...

Chorus : (Sing)
ஆமா..தப்பாட்டம் வர்றாக

Singer : (Sing)
வர்றாங்க வர்றாங்க டிஸ்கோ டான்சு வர்றாங்க...

Chorus : (Sing)
ஆமா..டிஸ்கோ டான்சு வர்றாக

Friday, 3 January 2020

பொங்கல் வில்லுப்பாட்டு


பொங்கல் வில்லுப்பாட்டு

Singer: (Sing) :                      தந்தனத்தோம் என்று சொல்லியே...
                                                வில்லினில் பாட                                     

Chorus :                                
ஆமா...

Singer:(Sing)                        
வில்லினில்பாட..வந்தருள்வாய் கணபதியே!

Chorus: (Sing)                      
வந்தருள்வாய் கணபதியே!

Sgr :(Sing_Rufina)                வந்தனம்வந்தனம் வந்தனம்
                                                வந்தசனம்
                                                குந்தனும்குந்தனும் குந்தனும்!

Chorus : (Sing)                     
ஆமா...
                                                குந்தனும் குந்தனும் குந்தனும்!

Singer :(Talk)                        
அதாகப்பட்டது...மகா ஜனங்களே...
                                                இன்னைக்கு என்ன விசேஷம் தெரியுமா?

Chorus:(Talk)                       
என்ன விசேஷம்...?

Singer : (Talk)                       
நம்ம  HTC கம்பெனியிலே...

Chorus: (Talk) (PON)           
ஆமா...HTC கம்பெனியிலே...

Singer :  (Talk)                     
வருஷமெல்லாம் உழைச்சு...கழைச்சு....
                                                நமக்கு வயிறா...ர...
                                                சோறு கொடுக்கிற விவசாயிக்கும்,

Chorus : (Talk)  ALL             ஹாம்

Singer :  (Talk)                      அப்பேற்பட்ட விவசாயிக்கே
                                                உதவியா இருந்த..
                                                ஆடு, மாடு, கோழி எல்லாத்துக்கும்

Chorus : (Talk)  ALL             ஹாம்

Singer :  (Talk)                      ஒரு பெரிய நன்றிய தெரிவிக்கிற
                                                பொங்கல் கொண்டாட்டம்... !

Chorus : (Talk)  ALL            
ஆகா...பொங்கல் கொண்டாட்டமா...

Singer :  (Talk)                      
ஆமா...... நாமளும் ஒரு நன்றிய       
                                                சொல்லிடுவோமா...

Chorus:(Talk)                       
சொல்லிடுவோம்...

Singer : ( Sing)                     
நன்றிஐயா..நன்றிஐயா...
                                                நாங்களும்சொல்லுறோம்...நன்றிஐயா!

Chorus : ( Sing)                    
ஆமா...
                                                நாங்களும்சொல்லுறோம்...நன்றிஐயா!

Singer : (Sing)                      
பொங்கலோப்பொங்கல் என்று நாமும்
                                                பாட்டுப்படிக்கிறோம்... பாடுமைய்யா!

Chorus: (Sing)                      
ஆமா...
                                                பாட்டுப்படிக்கிறோம்... பாடுமைய்யா!
Singer: (Sing)                        பொங்கலோ பொங்கல்!

Chorus : (Sing)                      பொங்கலோ பொங்கல்!

Chorus : (Talk) KP               
சரி...இவ்ளோ பெரிய திருவிழா...
                                                இன்னைக்கு வேற என்ன  
                                                specialல்லாம்  இருக்கு.?

Singer: (Talk)                         இருக்கே...
                                                நம்மளோட இந்த பொங்கல்    
                                                கொண்டாட்டத்துல...
                                                தேவலோக
                ரம்பை, ஊர்வசி, மேனகைனு
                                                இருக்கிற நம்ம அழகான பெண்கள்...

Chorus : (Talk)                     
என்னது அழகான பெண்களா..?

Singer: (Talk) :                     
அட...ஆமையா...
                                                அந்த அழகான பெண்கள் தான்...
                                               
ஒரு 10 15 கிலோவில...
                                                கடலைமாவை பூசிக்கிட்டு...

Chorus : (Talk)  ALL            
ஹாம்

Singer(Sing) :                        ஒரு 10 15 கிலோவில...
                                                கடலைமாவைதான் பூசிக்கிட்டு...

Chorus : (Sing)                     
ஆமா...
                                                கடலைமாவைத்தான் பூசிக்கிட்டு...
Singer_ Rufina (Talk)          
என்னது கடலை மாவா..
                                                நீங்க மட்டும் என்ன....
                                                சும்மாவா வந்துருக்கீங்க...
                                                இந்தா...பாரு..

Singer_ Rufina (Sing)           SALT and Pepperu கோஷ்டி எல்லாம்
                                                கருப்புச் சாயத்தைப் பூசிக்கிட்டு

Chorus : (Sing)                     
ஆமா...கருப்புச் சாயத்தைப்  
                                                பூசிக்கிட்டு

Singer_ Rufina (Sing)          
வேஷ்டிய ஏத்தி கட்டிக்கிட்டு

Chorus :  (Sing)                    
வேஷ்டிய ஏத்தி கட்டிக்கிட்டு

Singer : (Sing)  (Both)
         மானாட்டம்...மயிலாட்டம்
                                                சிலம்பாட்டம் ஒயிலாட்டம்...
                                                ஆடப்போறத பாருமையா..

Chorus : (Sing)         
            ஆமா...ஆடப்போறத பாருமையா..

Singer : (Sing)          
            ஒய்யாரமா வருதையா...
                                                ஒயிலாட்டம் இப்போ வருதையா...

Chorus:  (Sing)                     
ஒயிலாட்டம் இப்போ வருதையா...


======================ஒயிலாட்டம்=======================



கரகாட்டம் INTRODUCTION

Chorus : (Talk) RAJA           ஆகா.ஆகா...ஆட்டம்னா ஆட்டம்
                                                அசதிப்புட்டாங்க போங்க.

Singer :  (Talk)                      
அட..இதுக்கே அசந்தா எப்படி...
                                                அடுத்து வர்றதென்ன தெரியுமா...

Chorus :  (Talk) All               
அப்படி என்னப்பா புதுசா வருது?

Singer:  (Talk)                      
நம்ம சொப்பனசுந்தரி வச்சுருந்த...
Chorus :  (Talk)                    
என்னது...சொப்பன சுந்தரிய  
                                                வச்சிருந்த

Singer : (Talk)                       
அட சொப்பன சுந்தரி வச்சிருந்த...
                                                கார்ல இருந்து
                                    ஏறங்கிவர்றத சொன்னேன்...

Singer : (Sing - speed)        
இந்தா… வர்றாகவர்றாக வரிசைகட்டி
                                                சொப்பனசுந்தரி காருஓட்டி

Chorus : (Sing)                     
ஆமா...சொப்பனசுந்தரி காருஓட்டி

Singer : (Sing - Speed)        
காலோடு சலங்கை இறுக்கிக்கட்டி
                                                கரகமாட வர்றாக..

Chorus : (Sing - speed )      
ஆமா..கரகமாட வர்றாக..


==================== கரகாட்டம்===========================
                                               

 சிலம்பாட்டம் INTRODUTION

Singer : (Talk)                        இப்படியாக... ஆட்டம்பாட்டம்னு
                                                சிறப்பா நடந்துக்கிட்டு இருக்கிற
                                                நம்ம பொங்கல் கொண்டாட்டத்துல...
                                                அடுத்து வர்றதென்ன தெரியுமா!??

Chorus : (Talk)                     
அதையும் சொல்லிடுங்க
                                                தெரிஞ்சுக்குவோம்...

Singer : (Sing)                      
பன்னெடுங்காலமா...
                                                பாட்டனும் பூட்டனும்...

Chorus: (Sing)                      
ஆமா...
                                                பன்னெடுங்காலமா...
                                                பாட்டனும் பூட்டனும்...

Singer : (Sing)                      
வீரத்தை சொல்லி வளர்த்த கலை

Chorus : (Sing)                     
ஆமா...
                                                வீரத்தை சொல்லி வளர்த்த கலை...

Singer: (Sing)                       
வித்தையை காட்டும் ஆட்டத்தோட

Chorus: (Sing)                      
ஆமா...
                                                வித்தையை காட்டும் ஆட்டத்தோட

Singer : (Sing)                      
சிங்கமா...இங்க..சிலம்பாட்டம்...
                                                சிங்கமா...இங்க..சிலம்பாட்டம்...
                                                ஆடிக்காட்ட வர்றாங்க...

Chorus : (Sing)                     
ஆமா...ஆடிக்காட்ட வர்றாங்க...

                                               
======================சிலம்பாட்டம்=======================

                          தப்பாட்டம் INTRODUCTION

 Singer : (Talk)                      
ஆகா..அருமையான சிலம்பாட்டம்ல..

Chorus : (Talk)                     
அருமை...அருமை...

Singer : (Talk)                       
இது மட்டுமா...பொங்கல்    
                                                கொண்டாட்டத்துல
                                                இன்னும் சிறப்பான ஆட்டம்லாம்
                                                இருக்கே...
Chorus : (Talk)  ALL             ஓஹோ

Singer : (Talk)                       
அடுத்ததா வர்றது என்ன தெரியுமா?

Chorus : (Talk)                     
அதையும்தான் சொல்லிடுங்க...
                                                மக்கள்லாம் ஆர்வமா இருக்காங்கள்ல..

Singer : (Talk)                        சொல்லிடுவோம்
                                                மண்ணுமணக்கிற
                                                நம்ம கிராமியக்கலைகளுக்கே
                                                தாயா இருக்க
                                                ஒரு கலைதான் வரப்போகுது....
                                                அதுக்கு என்ன பேருஇருக்கு  தெரியுமா?...

Chorus : (Talk)                      சொல்லிடுங்க அதையும்   
                                                தெரிஞ்சுக்குவோம்...

Singer : (Sing)                       வாத்தியம் வாத்தியம் ராஜவாத்தியம்

Chorus : (Sing)                      வாத்தியம் வாத்தியம் ராஜவாத்தியம்
Singer : (Sing)                       எல்லா சேதியும் சொல்லுற ராஜவாத்தியம்

Chorus : (Sing)                      எல்லா சேதியும் சொல்லுற ராஜவாத்தியம்

Singer : (Talk)                        அந்த ராஜவாத்தியங்கிறது….
                                                எப்பேற்பட்ட இசை தெரியுமா?

Chorus : (Talk)                      தெரியாதே!

Singer : (Sing) Speed          
ஆதித்தமிழன் பரம்பரையில்
                                                ஆண்டுவந்த ஒரு இசையாம்

Chorus : (Sing)                     
ஆமா..   ஆண்டுவந்த ஒரு இசையாம்...

Singer : (Sing)                      
எந்த நாட்டு கால்களுமே
                                                எழுந்து ஆடும் பறைஇசையாம்

Chorus : (Sing)                     
ஆமா...
                                                எழுந்து ஆடும் பறைஇசையாம்

singer : (Talk)                       
அப்பேற்பட்ட பறை இசையோட
                                                நம்ம தப்பாட்ட குழுவினர் வந்து...
                                                ஆடி அசத்தப்போரங்கள்ல....
Singer : (Sing) (Slow)          
வர்றாங்க...வர்றாங்க...
                                                தப்பாட்டம் வர்றாங்க...

Chorus : (Sing)                     
ஆமா..தப்பாட்டம் வர்றாங்க


====================== தப்பாட்டம்=====================


                                               ஆடல்பாடல் INTRODUCTION

Singer : (Talk)                        தமிழனோட தப்பாட்டம்...
                                                ரொம்ப சரியான ஆட்டம்னு
                                                ஆடி அசத்திட்டாங்கள்ல....

Chorus : (Talk) ALL             
ஆமா.. அசத்தித்தேன். புட்டாங்க...
                                   
Chorus : (Talk) KP                சரி...பொங்கல் கொண்டாட்டம்
                                                ரொம்ப சிறப்பா முடிஞ்சதுல்ல...
                                                அப்படியே சாப்பாட்டுக்கு போயிடலாமா...!

Singer : (Talk)                       
என்னது..சாப்பாடா...
                                                தர்பாரே இனிமேதான்
                                                சும்மா கிழிகிழின்னு கிழியப்போகுது...

Chorus : (Talk)                     
ஆகா..தர்பாரா...
                                                அப்போ வெறித்தனமால்ல இருக்கும்

Singer : (Sing)                      
ஆமா…
                                                வெறித்தனமா ஆட்டம் ஆட
                                                வெடலப்புள்ள கூட்டத்தோட....
                                                பிகிலு சத்தம் வலிமை காட்ட
                                               
Chorus : (Sing)                      பிகிலு சத்தம் வலிமை காட்ட
                                   
Singer : (Sing)                       ஆடல்பாடல் பார்ட்டிங்கதா...
                        அலப்பறையா வர்றாங்க

Chorus : (Talk)                      ஆமா... அலப்பறையா வர்றாங்க