எத்தனை பேரருள்...
இறையாகிய உம் வரிகளில்...
அத்தனைக்கும் தகுதி படைக்க...
அடியேன் எப்போதும் முயல்வேன்...!
இத்தனைக்கும் யான்...
நின் தாழ் ஒட்டிய சிறு தூசு...!
எப்பெப்போதும்...
என்னுள் நீயே இறையாகிய ஆசான்!
பெருங்கடல் குடிக்க
முயலும் சிறுதுளி...யாம்!
இன்று உம் பேரன்பு கடலில்...
கலந்து நிற்கிறேன்...
நின் வாழ்த்து மொழியில்
மகிழ்ந்து பறக்கிறேன்!
ஆயிரமாயிரம் நன்றிகள்...
என்றும் யான் கொண்டே
நிற்பேன்... நின் தாழ் பணிந்து...!
நின் தாழ் பணிந்து...
உம் அன்பையும்...ஆசிகளையும்
இல்லத்துணையோடு ஏற்கிறேன்!
மகிழ்வுடன்...
இளையபாரதி ஹரிஹரன்
No comments:
Post a Comment