வா! வா!
தமிழா!
கருணையின் முகிலாய்!
முத்தமிழின் முதல்வனே!
எத்திக்கும் நின்புகழ்
இசையென ஒலிக்கும்!!!
உன்னைவிட பெருமையும் இல்லையே!
உன்னிடம் இமயமும் சிறுமையே!
உம்மைஈன்று தமிழுக்கு அணிபூட்டிய
அஞ்சுகத்தின் நெஞ்சுநிறை நின்ற எம்மன்னவா!
உம்பேனா வடித்த இரத்தமெல்லாம்
தமிழின் தியாகம் சொல்ல
சிந்திய சித்தாந்தமன்றோ?!!!
பொன்மாலையென நீவிர் சூட்டிய
பன்மாலை பாமாலை – அதுவே
தமிழின் பூமாலை புகழ்மாலை!!!
கள்ளமில்லா கள்வனே
ஏன் திருடினீர் ???
எம்கோடித்தமிழர் இதயத்தை!!!
உயிர்த்துடிப்பெல்லாம் உம்மிடமே!
பயிர் வாடியதற்காய்
உயிர் வாடிய தமிழன்
வாழ்ந்திருப்பானே நீ வாய்த்திருந்தால்
அரியணை நீ வாய்த்திருந்தால்!!!
உம்மிடத்தில் இல்லாதுபோன
இறைவனும் இருப்பானேயானால்
உம்மைப்போல்தானே எமக்கு!!!!
அரியணை உம்மை அமர்த்தி
பெருமை கொண்ட நாட்கள்தான்
யாமெல்லாம் உயிர்வாழ்ந்த காலம்!!!
யாக்கையும் காக்கைகொள்ள
உயிரற்ற ஜடமாய் வாழ்கிறோம் இன்று ,
உம்மிடம் மறுத்த செங்கோலால்!!!
கபட நாடகத்தில்
கண்துடைப்போரெல்லாம்
அரியணை கண்டதால்
நூற்றாண்டுகள் கண்டிரா சோகம் – ஆனால்
நூறாண்டுகள் போற்றும் சாதனையாம் – மடையர்கள்!!!
கொள்ளையும் கொலையும்
கொடுங்கோல் நடையும் வலம்வர
மழையும் களைய
மலையும் வளையும்
இவர் செய்யும் கொடுமையால்!!!
கருத்தின் கழுத்துக்கு கயிறுதந்து
பேனா நுனி உடைத்து
“சென்னாப்போதர்” வாழ்ந்த தமிழ்நாட்டில்
சொல் “நா” அறுக்கத்துடிக்கும்
அநியாயம் தான் நாட்டில்!
காட்டில் உள்ளோறாய்
சிரம் தாழ்ந்து
கரம் பணிந்து
வீரத்தமிழன் கர்வம் தொலைத்தனர்
இன்று அமைச்சரவை மந்திரிகள் – வெட்கம்!!!!
நடை மறந்து குழந்தையென நீவிர்
தவழ்ந்தபோதும் தரணிபோற்றும் நின்செயல்
தமிழர்க்கு என்றென்னும்போது
இருநூறாண்டு இளமைபெற்ற எம்தோழா
யாமிருப்போம் நின் தோழாய்!
வாளாய் வேலாய்
வறுமை கொல்லும் வில்லாய்
எம் தளபதி கரங்களில்
தங்களைத்தந்து
நாடுகாக்க நாங்கள் தயார்!
நின் ஆணை ஒன்றே போதும்
அணை கட்டித்தடுக்கப்பட்ட
எங்கள் இரத்தமெல்லாம்
புயலென பொங்கி
புரட்சி செய்யும் உமக்காய்!
நம் உயிர் தமிழுக்காய்!
குறளால் “திருக்குறள்” தந்து
தரணிக்கும் தலைவனாய்
தமிழனை உயர்த்திய
வள்ளுவனுக்கு வான்தொடும்
சிலை தந்த வாழும் “வள்ளுவரே”!!!
மலையென நின்புகழ் உயர
இன்று வந்தவர்
உளியென குடையப்பார்க்கிறார் – உம்மையும் ,
உப்புக்காற்றால் குடையப்பார்க்கிறார் வள்ளுவரையும்!!!!
அதற்கும் “நா” தந்து காத்த கருணையே
உமைக்கான வேண்டும் கண்களே!!
எந்தன் கண்களே!!!
வாய்ப்பொன்று கிடைக்குமா ???
வான் சூரியனை காண!!!???
உதயசூரியனாய் உள்ளத்தில்
உதிக்கும் உன்னதமே
உன்னிடம் உருகும் என் அகமே!!!!
என்பால் உள்ள தமிழால்
உன்பால் கொண்ட அன்பால்
பண்பால் உயர்ந்த பகலவனுக்கு – கடிதம்!
என்றும் என்றென்றும்
நின்பால் அன்புகொண்ட உடன்பிறப்பு!!!
No comments:
Post a Comment