நெஞ்செல்லாம் பூமழை!
நினைவெல்லாம் தாமரை!
கண்ணெல்லாம் காதலே
காட்சியாக இருக்கிறதே!
சொர்க்கத்தின் வாசனை
சேரவேண்டி யோசனை
ஏன் இந்த கற்பனை?
காதலே இங்கு விற்பனை!
மண்ணுக்குள் விதையெல்லாம்
விழுந்தாலே உயிர்பெறும்
நெஞ்சுக்குள் காதலோ
விழாமல் உயிர்வரும்!
மயில் வரும் பாதையில்
காதலின் பயணங்கள்
காற்றினில் நடக்குதே
உயிர் பெரும் போதெல்லாம்
உன்னையே நினைக்கிறேன்!
அருகினில் வந்தாலே
ஆசைகள் அணைக்குதே!
ஒவ்வொரு நொடியிலும்
உறவிங்கே இனிக்குதே!
தென்னையின் காற்றென
ஜன்னலின் சாரலே
உன்னுயிர் சேருதே!
உறவினில் காதலை
கருப்பெற சொல்லுதே!
ஆயிரம் நாட்களை
காணாமல் தேடினேன்!
நீ வந்த மறுநொடி
யுகம் பல தாவினேன்!
மகிழ்ச்சியின் தூரலை
சாரலில் தேடினேன்!
மழைத்துளி சேர்க்கையில்
உன்னையே கூவினேன்!
என்னையே மறந்திங்கு
உன்னிடம் ஓடினேன்!
சங்கீத பாதையில்
என் மொழி கிடத்தவே
பொன்மொழிவார்த்தைகள்
பூமழை தூவுதே!
சங்கீத மேடையில்
உன்மொழி வீணையை
மீட்கவே பார்க்கிறேன்!
கை படும் போதெல்லாம்
என் உயிர் மறக்கிறேன்!
தென்றலின் கைகளில்
என் காதல் வைத்துத்தான்
உன்னிடம் கொடுக்கவே
ஆணையை அனுப்பினேன்!
ஆசையாய் வாங்கிக்கொள்
அன்பினை அனுப்பிவை!
என் உயிர் இருப்பதெல்லாம்
உன் உயிர் இருப்பதால்!
No comments:
Post a Comment