விண்ணைத்தாண்டி
விளையாடி
வந்துவிட்டோம்
என்று கூறிய மானுடம்
வாசல்வர இயலாது தவிக்கிறது!
அணுஆயுதம் தாங்கிய
ஏவுகணைகள் ஏராளம்
என்றே
கொக்கரித்த ஏகாதிபத்தியம்
ஏனோ இன்று
இறப்புகளை
எண்ணிக்கொண்டு இருக்கிறது!
அனைத்து உயிர்களுக்கும்
அடிப்படை உரிமையாய்
இயற்கை ஏராளமாய்
கொடுத்தே இருக்கிறது!
ஆனால்...
என்ன செய்ய
மனிதக்கூட்டம் மட்டுமே
அதை அபகரித்துக்கொண்டது!
இயற்கையின் கற்பை
இயன்றவரை சூராடியே
வைத்து இருக்கிறது மனிதம்!
எல்லாம் வென்றாகிவிட்டது
என்றே சொல்லிக்கொண்ட தருணத்தில்
தனி ஒருவனாய்
வந்து நிற்கிறான்
கொரோனா!
இயல்பை தொலைத்து
ஓடித்திரிந்த கூட்டம்
இன்று...
ஒதுங்கி நிற்கிறது!
உயிருக்கு அஞ்சி நிற்கிறது!
வாழ்க்கை எதுவென்று
வாத்தியாராய் பாடம் சொல்கிறதோ
கொரோனா!
வீட்டுக்குள்ளே இன்றுதான் நாம்
உறவுகளை
தேடிக்கொண்டு இருக்கிறோம்!
இயற்கையின் இன்னபிற
பிள்ளைகளாம்
விலங்குகள்...பறவைகள்...
மரங்கள்...மலைகள்...
ஆறுகள் அருவிகள்...யாவும்
இப்பொழுதுதான்
தன் வாழ்வை தொடங்கி
இருக்கின்றன!
இதோ இந்த கொரோனா
பேரழிவை மட்டும் தரவில்லை...
மனிதம் தொலைத்த
பெரும் பொக்கிஷங்களை
சமிக்கையால் காட்டிக்கொண்டு
இருக்கிறது!
இனியேனும்...மானுடம்...
இயற்கையோடு
இணைந்து வாழட்டும்!
உயிர்கள் யாவற்றிற்கும்
உலகம் இதுவென
உணர்ந்து வாழட்டும்!
விரட்ட வேண்டியது
கொரோணாவை மட்டுமல்ல
இயற்கைக்கு எதிரான
நம் செயல்களையும் தான்!
இன்னல் கடந்து வெல்வோம்
இனியும் நாம்
இன்னல் கடந்தும் வெல்வோம்!
தனித்து நின்றும்
இணைந்தே வெல்வோம்...!
விளையாடி
வந்துவிட்டோம்
என்று கூறிய மானுடம்
வாசல்வர இயலாது தவிக்கிறது!
அணுஆயுதம் தாங்கிய
ஏவுகணைகள் ஏராளம்
என்றே
கொக்கரித்த ஏகாதிபத்தியம்
ஏனோ இன்று
இறப்புகளை
எண்ணிக்கொண்டு இருக்கிறது!
அனைத்து உயிர்களுக்கும்
அடிப்படை உரிமையாய்
இயற்கை ஏராளமாய்
கொடுத்தே இருக்கிறது!
ஆனால்...
என்ன செய்ய
மனிதக்கூட்டம் மட்டுமே
அதை அபகரித்துக்கொண்டது!
இயற்கையின் கற்பை
இயன்றவரை சூராடியே
வைத்து இருக்கிறது மனிதம்!
எல்லாம் வென்றாகிவிட்டது
என்றே சொல்லிக்கொண்ட தருணத்தில்
தனி ஒருவனாய்
வந்து நிற்கிறான்
கொரோனா!
இயல்பை தொலைத்து
ஓடித்திரிந்த கூட்டம்
இன்று...
ஒதுங்கி நிற்கிறது!
உயிருக்கு அஞ்சி நிற்கிறது!
வாழ்க்கை எதுவென்று
வாத்தியாராய் பாடம் சொல்கிறதோ
கொரோனா!
வீட்டுக்குள்ளே இன்றுதான் நாம்
உறவுகளை
தேடிக்கொண்டு இருக்கிறோம்!
இயற்கையின் இன்னபிற
பிள்ளைகளாம்
விலங்குகள்...பறவைகள்...
மரங்கள்...மலைகள்...
ஆறுகள் அருவிகள்...யாவும்
இப்பொழுதுதான்
தன் வாழ்வை தொடங்கி
இருக்கின்றன!
இதோ இந்த கொரோனா
பேரழிவை மட்டும் தரவில்லை...
மனிதம் தொலைத்த
பெரும் பொக்கிஷங்களை
சமிக்கையால் காட்டிக்கொண்டு
இருக்கிறது!
இனியேனும்...மானுடம்...
இயற்கையோடு
இணைந்து வாழட்டும்!
உயிர்கள் யாவற்றிற்கும்
உலகம் இதுவென
உணர்ந்து வாழட்டும்!
விரட்ட வேண்டியது
கொரோணாவை மட்டுமல்ல
இயற்கைக்கு எதிரான
நம் செயல்களையும் தான்!
இன்னல் கடந்து வெல்வோம்
இனியும் நாம்
இன்னல் கடந்தும் வெல்வோம்!
தனித்து நின்றும்
இணைந்தே வெல்வோம்...!