இலவசம்...
இதிஒரு புரிதல் இல்லா நிலையே அதிகம் காணப்படுகிறது.
எந்த பொருட்கள் இலவசமாக தரப்படுவதை நாம் ஏற்க வேண்டும், எதிர்க்க வேண்டும் என்பதில் ஒரு ஆழ்ந்த புரிதல் வேண்டும்.
எந்த பொருட்கள் இலவசமாக தரப்படுவதை நாம் ஏற்க வேண்டும், எதிர்க்க வேண்டும் என்பதில் ஒரு ஆழ்ந்த புரிதல் வேண்டும்.
வெறும் தேர்தல் வெற்றிக்காக, தேர்தலுக்கு முன் சொந்த பணத்தில் இலவச பொருட்கள், பணம் தந்த நிலை இருந்தது...இருக்கிறது.
அதன் அடுத்த படியாக அரசு பணத்திலேயே இலவச பொருட்களை தந்து வாக்குகள் பெரும் உக்தியாகவே தேர்தல் அறிக்கையில் டிவி, மிக்சி, கிரைண்டர், பேன் போன்ற பொருட்களின் இலவச விநியோக அறிவிப்பு உள்ளது.
உண்மையில் இலவசம் தருவது மக்களின் வாழ்க்கை மேம்பாடு, வளர்ச்சிக்கு உதவுமா என்பதில் சந்தேகங்கள் உள்ளன. மேலும் அந்த பொருட்களின் தரம், பயன்படும் காலம் ஆகியன கேள்விக்குரியதாகவே உள்ளது.
அவ்வாறு இதுவரை கொடுக்கப்பட்டதில் என்ன வாழ்வியல் முன்னேற்றம், மேம்பாடு அடைந்துள்ளது.
உண்மையில் அரிசி, பருப்பு போன்ற ரேஷன் பொருட்கள் இலவசமாகவோ, மானிய விலையிலோ தரப்படுவது அவசியம். ஏனெனில் அவற்றை நம்பியே வாழும் குடும்பங்கள் உள்ளன. ஆனால் அதையும் எவ்வளவு காலம் தர வேண்டும் என்பதில் ஒரு கருத்தாக்கம் வேண்டும்.
ஒருவன் வாழும் காலம் முழுவதும் இலவசமே தந்து வாழவைத்தல் என்பது மிக மோசமானது. அவனும் அதையே நம்பி வாழ்வதும் மோசமானதே.
தற்காலிக தேவைக்கு மட்டும் கொடுக்கப்பட்டு..பின்னர் அவை யாவற்றையும் சொந்த உழைப்பில் வாங்கும் வகையிலானா வேலை வாய்ப்பையும், சரியான ஊதியத்தையும் கொடுப்பதே ஆகச்சிறந்தது.
ஆனாலும், இவை யாவற்றையும் தாண்டி... அனைத்து தரப்பும் கேட்கும் இலவசம் என்று உள்ளது. அது...கல்வி, மருத்துவம், தண்ணீர், சுகாதார சூழல். இவை ஏன் இலவசமாக அனைத்து குடி மக்களுக்கும் தரப்பட வேண்டும் எனில்... இவை வெறும் சேவை என்பதை தாண்டி அனைவருக்கும் அத்தியாவசியம்.
மேலும் இவை வணிக பயன்பாடாக இருக்க கூடாது.
மேலும் இவை வணிக பயன்பாடாக இருக்க கூடாது.
ஏனெனில்... வணிகமாக மாறும் பொழுது குறிப்பிட்ட சிலர் மட்டுமே தரமான வகையில் இவற்றை பெரும் சூழல் ஏற்படும். மேலும் அவர்களும், மற்றோரும் வணிக லாபத்திற்காக மருத்துவம் போன்றவற்றில்... செயற்கையான நோய்கள் உருவாக்கம், இயற்கைக்கு முரணான கட்டாயப்படுத்தப்பட்ட அறுவை சிகிச்சை வழி பிரசவம் போன்றவற்றால் பாதிக்கப்படும் நிகழ்கால சூழலும் உள்ளது.
எனவே தான்... ஏழை, பணக்காரன் வித்தியாசம் இன்றி தரமான கல்வி, மருத்துவம், தண்ணீர், சுகாதாரம் ஆகியன இலவசமாக கொடுக்கப்பட வேண்டும்.
இலவசத்தை எதிர்ப்பதற்காக இன்று கூக்குரல் இடும் அரசியல் கட்சிகள்... இது மாதிரியான இலவசம் வழங்குமா என்றால் இல்லை. உதாரணம்... பெரும்பாலும் தனியார் மயமாகிப்போன இந்த சேவைகள் தான். மேலும் கேன் குடிநீர், கோவை சிறுவாணி தண்ணீர் ஆகியன தனியார் மயமாக்கப்பட்டத்தில் இந்த அரசியல் கட்சிகள் பங்கு மிகப்பெரியது.
கவர்ச்சி பொருட்களை இலவசமாக வழங்க கட்சிகள் காட்டும் ஆர்வம் கல்வி முதலான சேவை வழங்குவதில் இல்லை.
இதுவே அவர்கள்...மிக்சி, கிரைண்டர், டிவி முதலான இலவசத்தை வாக்கு வாங்கும் கருவியாகவும், ஊழல் செய்யும் வாய்ப்பாகவும்...கல்வி முதலானவற்றை தனியார் மயமாக்கி கமிஷன் பெரும் வழியாகவும் வைத்துள்ளனர் என்பதே நிதர்சனம்.
இதுவே அவர்கள்...மிக்சி, கிரைண்டர், டிவி முதலான இலவசத்தை வாக்கு வாங்கும் கருவியாகவும், ஊழல் செய்யும் வாய்ப்பாகவும்...கல்வி முதலானவற்றை தனியார் மயமாக்கி கமிஷன் பெரும் வழியாகவும் வைத்துள்ளனர் என்பதே நிதர்சனம்.
#இளையபாரதி