உலக சிட்டுக்குருவிகள் தினம்!
________________________________________
சிட்டுக்குருவியின் வரிகள்!
________________________________________
கீச் கீச் என்று சிறகடித்து திரிந்தோம்
வயல்வெளி புழுக்கள் தின்று வாழ்வு ஒட்டி
ஓட்டின் ஓரமும் சிறு குடிசைப்பொந்திலும்
பொக்கிசமாய் வாழ்ந்து வந்தோம்!
கண்ணில் பட்ட போது இன்பம் தந்து
காணாத உயரம் பறந்து திரிந்தோம்!
வீட்டோரம் விருந்தாளியாய்
விளையாட்டுக்குழந்தைகளின் வாய்ச்சிரிப்பாய்
சிந்திய நெல்மணி சேர்த்து
சிறகடித்தோம் மகிழ்வாய்!
நாங்கள் மரத்தில் கூடி நின்று
கீச் கீச் கீதம் இசைத்தோம் !
வேறென்ன செய்தோம் தவறாய்!
இன்று கூட்டிற்கு ஒரு பொந்து இல்லை!
இளைப்பாற சிறு செடியுமில்லை!
என் இனம் இருப்பதுவே அறியவில்லை!
அணுகுண்டு வீசியிருந்தாலும் ஒரு நொடியில்
மரணம் அடைந்து மகிழ்வாய்
சென்றிருப்போம் இறைவனடி!
நீயோ செல்போன் அலை வீசி
எங்கள் சிறகு உடைத்தாய்!
சிறு புழுவும் இல்லாது விஷம் தெளித்தாய்!
இன்று காட்டு வெளியெல்லாம் வெட்டவெளி!
ஓட்டுக்கூரையில் காயவில்லை-நெல்லுமணி!
உணவு மறுத்தாய்-ஒண்ட
ஓரிடம் சிதைத்தாய் !
சிந்தித்துப்பார் நாங்கள் என்ன செய்தோம் ??
இன்று சிறகு முறிந்து
சிதை படுகிறோம் செல்ஃபோன் அலைவரிசையால்!
கொலை வரிசை நிர்க்க வைப்பதுவா?
உன் ஆசை!
நாங்களும் பிள்ளைகள் இல்லையா!
No comments:
Post a Comment