பரதேசி!
கோணிப்பையில்
போர்த்திக்கொண்ட
கூரைமடியில்
உறங்கும் தேகம்!
சட்டைப்பையும்
தேவையில்லை
அதுவாங்கவே
வழியில்லாததால்!
முழங்கால்
நீட்டினால்
முட்டியும்
மோதும்
குட்டைக்குடிசையால்
!
படிப்பின்
வாசம்
வராத
தேசம் !
ஆடோடு
மாடாய்
மனிதனும்
வாழும் காலம்!
அப்போதுதான்
அறிவிப்பு
தமுக்கு
அடியால் கதாநாயகனால்!
ஊர்ப்பையனுக்கும்
கன்னித்தாயிக்கும்
கல்யாணமாம்
, கூலுக்கஞ்சி மறந்து
நெல்லுச்சோறு
திண்ணும்
கனவே
கல்யாணக்கோலம்!
வெட்டவெளிக்காட்டு
பொழிகாளையென
அடையாளப்படுத்தும்
கிழட்டுச்சிங்கம் – பெரியப்பா!
கட்டுனதாலி
ஒண்ணுன்னாலும்
கூட்டுன
பொண்டாட்டி எண்ணிக்கை இல்லை என
எகத்தாளம்
பேசும் கவிச்சி(கவர்ச்சி) வரிகள்!
மதுவோடு
மயங்கும் பெருசுகள்
துள்ளல்
ஆட்டம் - சஅங்கே
துருதுருவென
கல்யாணக்கூட்டம் !
பொத்தென்று
விழுந்து
பொட்டுன்னு
போன
பெரியப்பா
சாவு
பந்திசோறுக்கு
முன்னால்
பதைபதைக்கும்
மக்கள் – பெரியப்பா
மரணத்தால்
அன்று!
வெள்ளைப்பனியார
ஏக்கத்தால்!
எப்படியோ
அமுக்கிய சாவு
பந்திக்கு
வந்த ராசா
தேடிய
போதும் தெரியவில்லை
மரணித்த
மனுஷன் பற்றி!
ஒத்த
வயிறு காயையிலே
ஊரெல்லாம்
பந்தியிலே
வந்த
சனம் அமர்ந்திடவே
பரிமாறுகிறான்
உணவையெல்லாம்!
தொண்டைக்குழி
அடைக்கையிலே
உண்டுடலாம்
ஒருவா(ய்) சோறு – என
ஒத்தஒத்தயா
சேர்த்த
இலைபோட்டு
பொசுக்குன்னு ஒக்காந்தான் ராசா!
ராசாத்தி
கருரோசாப்பூ
சேட்டைக்குள்ளையே
உடலவச்சு
சிக்குன்னுதான்
குரலவச்சு
பசக்குன்னு
வம்பு பண்ணுறா
பொசுக்குன்னு
ஒக்காந்த ராசாகிட்ட!
ஒத்தப்பனியாரமும்
வெள்ளைநெல்லுச்சோறும்
வைக்காத
சனம் கழுவாத
பல்லவச்சு
சிரிக்குது! – ராசா
முகம்
கருப்பாத்தான் சுருங்குது!
படக்குன்னு
எழுந்த ராசா
பட்டுன்னு
வண்டிவிட்டார் – அழுகையோடு!
அப்பத்தான்
அழுதாலே
அழகான
குறும்பாலே!
தூக்குவாளி
சோத்த அள்ளி
ஒத்தவாயி
ஊட்டப்போக
பசியோட
ரோசமும் வர
கொஞ்சம்
கெராக்கி ராசாவுக்கு!
இருந்தாலும்
அடிவயிறு
“ஆ”
- ன்னுதான் வாய்திறக்க
அள்ளிவச்ச
சோறு சொகந்தான்!
அங்கே
மனம் ஆட்டம்போட
கூரைபோட்ட
பொந்துக்குள்ள
ஆசையா
சேந்துக்கிர
உடல்கூடி
உலகம் மறந்தது!
அங்க
அம்மத்தா
பொக்கைவாயி
மூடாம
ஒத்தப்பேர(ன்)மேல
உசுர வச்சு
உலைப்பானை
கிண்டுகிறாள் – அவன்
கொண்டுவந்த
தவசு வச்சு!
அடியாத்தி
போயிட்டியே
அவன்கூட
போயிட்டியே – என
அங்கம்மா
அவுக ஆத்தா
கோபமா
ஊரப்பாத்தா !
கூடிநின்ன
பஞ்சாயத்து
குரல்ஒசத்தி
பேசிப்போக
இளவட்ட
கிழவி கோபப்பட
அங்கம்மா
அவுக ஆத்தா
போட்டுக்கிட்டா
சண்டையத்தான்!
சத்தியம்
செய்யச்சொன்ன
கூட்டத்திலே
குசுப்பொருக்கி
அந்தப்பு(ர)றம்
பாத்துநிக்க
அப்படித்தான்
பார்ப்பான்னு
வக்கணையா
செஞ்சுபோனா சத்தியம்!
வாயிலே
வசம்பு வச்சு
வார்த்தையிலே
தேனைவச்சு
வந்துநின்னான்
கங்காணி!
காட்டிவச்சு
காசையுந்தான்
ஆசையுந்தான்
கூட்டிவிட்டு
அங்க
கொஞ்சம் சிரிப்பு தொட்டு
வாங்கிக்கிட்டான்
கை – நாட்டு!
இங்கிலீசு
எசமான் காட்டில்
பசிதீர
நெல்லுச்சோறு
கையி
நிறைய பணம்காசு என
பத்தவச்ச
ஆசைத்தீ
அணையாம
எரிஞ்சு நிக்க
மொத்தசனம்
கிளம்பிடிச்சு
புள்ளகுட்டி
விட்டுப்புட்டு!
ஒத்தப்பேரன்
ஊருபோறான்
மொத்தபூமி
விட்டுப்போறான்
புல்லுகாஞ்ச
பூமியால
வயிறு
காஞ்சு போனதால
ஊரவிட்டு
ஓடிப்போறான்!
வண்டிவிடும்
ராசாவ
வயித்துல
சொமந்துநின்ன
அங்கம்மாவ
அப்படியே
அங்கேயே
விட்டுப்போறான்!
கல்லுமேடு
தாண்டிதானே
முள்ளுப்பாதை
நடந்துபோறான்-சனத்தோட
நெல்லுசோறு
தேடிப்போறான்!
போறவழி
தெரியலையே!
போகும்பாதை
அறியலையே!
முள்ளுத்தச்ச
காலவச்சு
தள்ளிப்போறான்
ஊரவிட்டு!
சாதிசனம்
சொந்தபந்தம்
பெத்ததாயி
எல்லாம்விட்டு
கிழவிய
தவிக்கவிட்டு
எங்கபோறோம்
தெரியலையே!
நெடுங்காடு
நடந்துபோறோம் !
கடும்வெயில்
கடந்துபோறோம் !
காலுரெத்தமெல்லாம்
மொத்தமாக
சுண்டிப்போக
எங்கபோறோம் தெரியலையே!
நாளெல்லாம்
நடந்துபோறோம்
கங்காணி
காவலால
செம்மறியாடா
நாங்க
ஆறுதேசம்
கடந்துபோறோம்!
மொத்தசனம்
போகையிலே
ஒத்தஉசுறு
பொத்துனுதான்
விழுந்திருச்சு
யாருகேப்பா!?!
ஐயோ
சாமி அலறுறோமே!
ஆண்டவன
தேடுறோமே!
காலுரோமம்
கணக்கா –அத
கங்காணி
விட்டுப்போறான்!
பச்சமல
தேசத்த
கண்டு
நாங்க
காலாற
அமருறோம்!
அங்க
உள்ள சனமெல்லாம்
ஆண்டியாத்தான்
வாழுறத – அறியாம
போண்டியாகத்தான்
போயிச்சாக
மொத்தமாக
வந்துப்புட்டோம்!
உப்பு
மிளகா கப்பக்கிழங்கு
மம்பானை
எல்லாம் வாங்கி
ஆளுக்கொரு
குடிசையில
அடிச்சு
நாங்க தள்ளப்பட்டோம்!
உள்ள
போய் நிமிர்ந்துநிக்க
உச்சிக்கூரை
தலையை முட்ட
வந்த
பொண்ணு
தள்ளிவிட்டா
–எந்தப்பயளாச்சும்
உள்ளவந்தா
கொண்டுபுடுவேன் என்று சொல்லி!
ஒசக்கப்பரல்
கட்டிவச்சு
தாடிமீச
ஆள வச்சு
காவலுதான்
காக்க வச்சு
வூடு போனான் கங்காணி!
குந்தானியாட்டம்
பெண்ணொருத்தி
ஆரத்தி
எடுத்து வந்து ஆசிதந்தா
கூலிபுடுச்சு
வந்த
கங்காணி நெத்தியிலே!
அதிகாலை
நேரத்துல
அலறி
நின்ன சங்குச்சத்தம்
கிளப்பிவிட்ட
கூட்டமெல்லாம்
காடுபோயி
நின்னுடுச்சே!
நுனித்தேயிலை
பறிக்கத்தெரியாம
பதறிநாங்க
நிக்கையிலே
பக்கத்தில
வந்தபொண்ணு
பக்குவந்தான்
சொல்லிடுச்சே!
கருப்புக்குதிரை
போட்டுவந்த
வெள்ளைக்கார
துரைப்பய
கங்காணி
கூட வர
சுருட்டுப்புகை
முந்திவர
பந்திவரை
போனபொம்பளை
கண்ணத்துல
கையவச்சு
இடுப்புல
கண்ண வச்சு
தடவிப்பார்த்த
பய
கன்னித்தாயி
கண்ணையுந்தான் பார்த்துப்புட்டான்!
கிட்டப்போயி
தொட்டுப்பார்க்க
அட்டப்பூச்சி
பூந்ததாட்டம்
துடிச்சுப்போனா
கன்னித்தாயி!
படுக்கைக்கு
வரனுமுன்னு
சொல்லி
வந்த துரைப்பய
பொத்துன்னு
விழுந்திடவே
மொத்தோ
மொத்துன்னு
மொத்திப்புட்டான்
கங்காணிய!
கூலிஆளு
சரியில்லை
படுக்கைக்கு
தோதுயில்லை
கூட்டிப்போடா
பன்னிப்பய – என்று
திட்டிப்போனான்
குதிரையிலே!
கோபத்துல
கங்காணி
குச்சியத்தான்
எடுத்துவந்து
கொன்னுபுட்டான்
மனுசங்கள!
மறுநாளு
மாலையிலே
சேலையில
கட்டிவச்ச
மானத்த
அவிழ்த்துப்புட்டு
மரணந்தான்
தழுவி வந்தா!
கற்புதான்
கலங்கி வந்தா – கன்னித்தாயி!
இப்படியே
போனதாலே
ஊருபோகும்
ஆசையால
கணக்குப்பார்க்கும்
நாளன்னைக்கு
ஊருபோகும்
குசியிலே
பசியும்
மறந்துபுட்டு
பாவிசனம்
வந்திடுச்சு!
பொட்டிநிறைய
காசக்காட்டி
ஆசையிலே
விஷம் தீட்டி
கணக்குப்பார்த்த
கங்காணி
உப்புப்புளி
கிழங்குக்கும்
உடுத்தும்
கம்பளிக்கும்
கடன்தான்
மிஞ்சியிருக்கு!
வருஷம்
மூணு உழைக்கணும்னு
மருத்துவன்,
கோடாங்கி
கடைகாரன்
கையிலதான்
காசெல்லாம்
கொடுத்துப்புட்டு
விரட்டிவிட்டான் காட்டுக்கு!
சரிஞ்ச
மலை ஓரமெல்லாம்
விரிஞ்சு
கிடந்த பசுமையெல்லாம்
எம்மசனம்
இரத்தந்தான் என்று
நாங்க அறியலையே!
அட்டப்பூச்சி
கடிச்சதால
அட்டதின்ன
இரத்தங்கூட
இல்லை இந்த உடலுலதான்!
வேதனையில்
வெந்த சனம்
நோவுலதான்
நொந்துடுச்சே!
விழுந்துந்தான்
செத்துடுச்சே!
ஊருதேசம்
விட்டுவந்த பாவத்துக்கு
காடுதேசம் கட்டிஅழுறோம்!
வருஷம்
தாண்டி பார்க்கையிலே
உண்ட
சோத்துக்கும்
கொண்ட
மருந்துக்கும்
வேலை
செய்யவில்லைன்னு
கடனாத்தான்
காட்டிவச்சான்!
ராசா வயித்துல கத்திவாச்சான்!
ஊருபோக
வேணுமுன்னு
ஓடிப்போன
ராசாவுந்தான்
வுட்ட
வண்டி மறிச்சு நின்னு
அடிச்சு வந்தான் காவக்காரன்!
கெண்டைக்காலு
நரம்ப வெட்டி
கொண்ட
சோக அளவையும்தான்
மலைபோல அடுக்கிவச்சான்!
ஆதரவா
வந்தபொண்ணு
ஆளுக்கொரு
ஆதரவா
ஆதர்வா கூட்டிக்கிட்டா!
அப்படி
இப்படி பொழுதெல்லாம்
அந்த
சோகக்காட்டுலதான்
அவஸ்தையா
போரப்ப
அந்ததேச
நாட்டுலதான்
அங்கம்மா
ஆம்பளைப்புள்ளை பெத்து
அவ”ராசா”
வருவார்னு
போனபாதை
பார்த்து நின்னா!
தின்ன
சோறு கொண்ட நோயி
மந்திரிச்ச
கோடாங்கி
உழைப்பையெல்லாம்
உறிஞ்சிப்புட
உண்டசோறு
இரத்தம் சேர
கூடாதுன்னு தடுத்துவச்சான்!
வந்த
நோவு போகாதுன்னு
உசுரையேதான்
விட்டுவச்சா – அவ
உசுரையுந்தான் விட்டுவச்சா!
ஆவிபோன
கூட்டவச்சு
கதறியழ
தெம்பும் இல்ல!
எம்மசனம்
வாழுற
வாழ்க்கையேதான் வம்புல போயிடுச்சே!
மறுபோகம்
ஆச்சுதுன்னு
கங்காணி
கூலிக்கூட்டம் கூட்டிவர
ஆரத்தி
எடுத்துத்தான்
அனுப்பி வச்சா குந்தாணி!
வெள்ளைக்கார
கூட்டமெல்லாம்
கொலைகார
ஆளாத்தான் தெரிஞ்சு
நாங்க
வேதனையில் ஆழ்ந்திருக்க
போதனை
செய்யத்தான்
வந்து நின்னான் டாக்டரு!
ஆட்டமெல்லாம்
முடிஞ்சிருக்க
கணக்குலதான்
கழுத்தறுக்க
மறுகூட்டம்
வந்திடுச்சே – மடிஞ்சுபோக
மறுகூட்டமும் வந்திடுச்சே!
மலைமேல
ராசாவுந்தான்
தலைமேல
கையவச்சு
கதறியழும்
நேரம் பார்த்து
மறுகூட்டம் வந்திடுச்சே!
ஐயையோ
அடிமையாத்தான்
நாங்கெல்லாம்
சாகையிலே
அங்கம்மாவும்
வந்துட்டாலே!
தாலிகட்டுன
ராசாவுந்தான்
வேலிக்காட்டுக்குள்ள
வேதனையில்
சாகுறப்ப
புருசனோட
வாழத்தான்
சாவுதேசம்
வந்துட்டா
பிள்ளையோட
அவளும்
சாவுதேசம்
வந்துட்டா!!!!!!