Translate

Tuesday, 31 December 2019

வில்லுப்பாட்டு

Singer: தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லினில் பாட

Chorus : ஆமா

Singer: வில்லினில் பாட
வந்தருள்வாய்கணபதியே!

Chorus: வந்தருள்வாய்கணபதியே!

Singer: வந்தனம் வந்தனம் வந்தனமே
இங்கு வந்தசனமெல்லாம்
குந்தனும்  குந்தனும் குந்தனுமே!

Chorus : வந்தனம் வந்தனம் வந்தனமே
இங்கு வந்தசனமெல்லாம்
குந்தனும் குந்தனும் குந்தனுமே!

Singer : கோடான கோடி... கூட்டமும் இங்கே
கூடி நிக்குற கூட்டமையா...

Chorus : ஆமா...கூடி நிக்குற கூட்டமையா...

Singer : பொங்கலோ பொங்கல்
என்று நாமும்
பாட்டு படிக்கிற நேரமைய்யா!

Chorus: ஆமா...
பாட்டு படிக்கிற நேரமைய்யா

Singer :(Talk) அதாகப்பட்டது...மகா ஜனங்களே
இன்னைக்கு என்ன விசேஷம் தெரியுமா?

Chorus:(T) என்ன விசேஷம்...?

Singer : நம்ம HTC கம்பெனியிலே...

Chorus: நம்ம HTC கம்பெனியிலே...

Singer :  வருஷமெல்லாம் உழைச்சு கழைச்ச நம்மலுக்கு
ஆடுகோழி காடைன்னு விருந்து வைச்சு...
ஆட்டம் பாட்டம்னு இந்த பொங்கலை கொண்டாடுற நாளு!

Chorus : என்னாது ஆடு, கோழி, காடையா..
அப்படியெல்லாம் இருக்காதே...

Singer : அட..ஆமால்ல...
ஆடு, கோழி, காடையெல்லாம்
இங்க...இங்க அட இல்லைஇல்லை...

Singer:  பட்ஜெட்டு எகிறிடும் பாக்கெட்டு தீர்ந்திடும்

Chorus :  பட்ஜெட்டு எகிறிடும் பாக்கெட்டு தீர்ந்திடும்

Singer:  ஆடு, கோழி, காடை இல்லை இல்லை

Chorus :  ஆமா...ஆடு, கோழி, காடை இல்லை இல்லை

Chorus : சரி. அது தான் இல்லை ..வேற என்னவெல்லாம் இருக்காம்...?

Singer: நம்மளோட இந்த பொங்கலு  கொண்டாட்டத்துல...
தேவலோக ரம்பை, ஊர்வசி, மேனகைனு
இருக்கிற நம்ம அழகான பெண்கள்...
ஒரு 10 15 கிலோ கடலை மாவை பூசிக்கிட்டு...

Singer:
மானாட்டம்...மயிலாட்டம்...
குயிலாட்டம் ஒயிலாட்டம்..
என்று கூத்து நடக்குது பாருமைய்யா...

Chorus:  ஆமா...
கூத்து நடக்குது பாருமைய்யா...

Singer : சந்தடி சாக்குல வந்தனம் போட்டுட்டு வில்லுப்பாட்டிருக்குது கேளுமையா....

Chorus: ஆமா...
வில்லுப்பாட்டிருக்குது கேளுமையா....

Singer :